தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டம்

காமராஜர் எனும் மகானை முதல்வராக்கியதும் தேசிய கட்சி, அப்துல்கலாம் எனும் மாமனிதனை ஜனாதிபதியாக்கியதும் தேசிய கட்சி

காமராஜரை வீழ்த்தியதும் மாநில கட்சிகள், கலாம் மறுபடி ஜனாதிபதியாக முடியாமல் தடுத்ததும் மாநில கட்சிகள்

ஒரு தமிழன் பிரதமராக முடியாமல் குழப்பியதும் இதே மாநில கட்சிகள்.

தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல..

ஏதும் கேட்டால் இந்தியா தமிழரை வெறுக்கின்றது, நசுக்குகின்றது , இந்திய தேசியம் தமிழருக்கு எதிரானது என ஆயிரம் விளக்கம்

என்னதான் விளக்கினாலும் , சில சறுக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது.

மாநில அரசு ராமசந்திரனுக்கும், சிவாஜிகணேசனுக்கும், ஜெயலலிதாவிற்கும் மணிமண்டபம் கட்ட முயற்சிக்கும்பொழுது, இந்திய அரசுதான் கலாமிற்கு பெரும் நினைவிடம் அமைத்திருக்கின்றது

மாநில அரசை பொறுத்தவரை ராமசந்திரன் ராக்கெட் விஞ்ஞானியாகவும், ஜெயலலிதா அணுசக்தி விஞ்ஞானியாகவும், சிவாஜிகணேசன் சுதந்திர போராட்ட தியாகியாக வாழ்ந்து, பாகிஸ்தான் யுத்த்ததில் செத்தவராக இருக்கலாம்

அதனால் மாநில அரசு அவர்களை கொண்டாடுகின்றது

இம்மாநிலத்தில் தகுதியுள்ள‌ ஒரு தமிழனை கொண்டாடவும் இந்திய தேசியம்தான் விரும்புகின்றது, ஓடிவருகின்றது என்றபின் இதனை விட இம்மாநில கட்சிகளை எப்படி புரிந்துகொள்ள முடியும்?