தமிழன் அங்கும் அடிமைதான், இதனை எவனாவது சொல்வானா?
ஒரு சிலர் கிளம்பி இருக்கின்றான், எந்த திட்டம் வந்தாலும் “அய்யகோ இனி கார்பரேட் வாழும், நாமெல்லாம் அடிமை கூலிகளாக செல்ல வெண்டும்” என ஒரே ஒப்பாரி, அதனை கேட்டுவிட்ட சிலர் “ஆம், வீரதமிழன் அடிமை ஆவதா..” என பதிலுக்கு கோஷம்
எல்லா தொழில்வாய்ப்பும் அப்படித்தான், அதுவும் உலகளாவிய நிலையில் முதலாளித்துவம் வளர்ந்த நிலையில் வாழ்க்கை செலவீனங்களுக்கும் , தரத்திற்கும் வேறு என்ன வாய்ப்பு இருக்கின்றது?
தமிழ்நாட்டில் தொழிவளர்ச்சி இல்லை என ஒப்பாரி வைப்பது, ஆனால் யாரும் தொழில்திறக்க வந்தால் “அய்யகோ சுரண்டல் பாரிர், இனி அம்பானி வாழ்வான், அதானி வாழ்வான்” என குதிக்க வேண்டியது
தமிழ்நாட்டில் டாட்டா போன்றோரின் நிலையங்கள் இல்லையா? எவனாவது குதித்தானா?
டாடா என்ன டாடா? இத்தனை ஆயிரம் ஐடி கம்பெனிகளால் முதல் லாபம் யாருக்கு? நமக்கா?
இல்லை, கணிணியின் ஒவ்வொரு அசைவிலும் காசு பார்பபது வெள்ளையன், கணினி ஒருவனுக்கு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒருவனுக்கு, புராஜக்ட் ஒருவனுக்கு என எல்லாமே அவனுக்கு லாபம்
தமிழன் அங்கும் அடிமைதான், இதனை எவனாவது சொல்வானா?
தமிழ்நாட்டின் கம்பெனிகள் எத்தனை? எல்லாம் முழுக்க தமிழனுக்கு உரியதா? அவைகளை எல்லாம் கிளப்ப முடியுமா? அதிலும் இப்பொழுது நிறைய வடநாட்டவனும் நேபாளியும் வேலைக்கு வருகின்றான்
திருப்பூர் போன்ற நகரங்களில் வடநாட்டவரோடு சில ஆப்ரிக்கர்களும் வேலை செய்கின்றார்கள் என செய்தி வந்தது, அதிகாரபூர்வமில்லை எனினும் தமிழன் அங்கு வேலை செய்ய தயாரில்லை என்பது உண்மை
சென்னை ஹோட்டல்கள், கட்டுமானம் போன்ற தொழில்களில் எல்லாம் வடநாட்டவர் உழைக்கின்றார்கள், கட்டடம் கட்டுவது வெளிநாட்டவனா? வடமாநிலத்தவனா? உள்நாட்டு அரசியல்வாதியா? என்றேல்லாம் யாரும் கேட்பதிலை
வேலை இருக்கின்றதா? சம்பாதிக்க முடியுமா? அத்தோடு சரி
ஆனால் சில திட்டங்களை அரசு அறிவிக்கும் பொழுது அய்யோ அம்பானி அதானி சம்பாதிப்பான் தமிழன் அடிமை என ஒப்பாரி கோலம் வைப்பது
ஐடி தொழிலில் தமிழன் அடிமை இல்லையா? இத்தனை ஆயிரம் கைபேசிகள் இயங்கும் தமிழகத்தில் அவை எல்லாம் தமிழன் தயாரிப்பா? எத்தனை ஆயிரம் கொடுத்தேனும் வாங்கும் அளவிற்கு தமிழன் அடிமையாய் போனதேன்?
இத்தனை கார்கள், இத்தனை ஆயிரம் கார்களும் பைக்கும் ஓடுவதால் யாருக்கு மிக்க லாபம்?
இத்தனை நூறு திரைப்படங்கள் வருவதால் யாருக்கு லாபம்? யார் பணம்? பணத்தை விடுங்கள், அடுத்து முதல்வர் நான் என பல இம்சைகள் எங்கிருந்து வருகின்றன?
இது தொழில் உலகம், அதற்கு வாய்ப்புகள் வர வேண்டும் , பெருக வேண்டும். ஒரு தொழிற்ச்சாலை வந்தால் , தொழில்திட்டம் வந்தால் எல்லோருக்கும் நல்லது, அந்த பண சுழற்சியில் எல்லோருக்கும் வாழ வாய்ப்பு கிடைக்கும்
உலக நியதி அதனைத்தான் சொல்கின்றது
சிங்கப்பூரின், ஹாங்காங்கின் சொத்துக்களில் பெரும்பகுதி ஐரோப்பியரின் பணம், “அய்யகோ நாம் அந்நியருக்கு அடிமையா என் நாட்டிலே நான் அடிமையாக உழைப்பதா?” என ஒருவனும் சொல்லவில்லை. உலகெல்லாம் முன்னேறிய நாடுகளில் எல்லாம் இதே நிலை
மாறாக இங்கிருந்தும் சென்று அங்கு அடிமையாக உழைக்கின்றான், அதனை எல்லாம் விட்டுவிடுவார்கள்
மாறாக தமிழகத்தில் ஏதும் திட்டமோ துறைமுகமோ வந்தால் “அய்யகோ நாம் அடிமை ஆவதா?” என கிளம்புவார்கள்.
அப்படி உரிமை காக்க வேண்டுமென்றால் , தொழிலாளருக்கும் பணியாளருக்கும் சம உரிமையும் சலுகையும் கிடைக்க வேண்டுமென்றால் கம்யூனிசம் பேசலாம், அது வரவேற்கதக்கது
மாறாக அய்யகோ தமிழனை அவன் சொந்த நிலத்தில் அடிமையாக்கும் திட்டம் என வரும் ஒப்பாரிகள் எல்லாம் கண்டிக்கதக்க விஷயம்
சிங்கப்பூர், ஹாங்காங், நியூயார்க், துபாய், ஷாங்காய் என உலக நாட்டு கடற்கரையில் எல்லாம் அவர்கள் நல்ல துறைமுகமாக்கி நகரமாக்கி வைத்திருப்பார்களாம், அங்கு தமிழன் சென்று சம்பாதிக்கலாமாம், ஆடலாமாம்
அந்த பணத்தில் ஊரில் உள்ள குடும்பத்தை எல்லாம் காப்பாறலாமாம், சொத்துக்களை வளைக்கலாமாம், அது உழைப்பாம்
ஆனால் சொந்த கடற்கரையினை துறைமுகம் ஆக்குவோம் என சொன்னால் அது அபகரிப்பாம், வாழ்வாதாரம் நசுக்கும் முயற்சியாம்
அதாவது இவர்களுக்கு மட்டும் அறிவு இருக்கின்றதாம், உலகில் வேறு யாருக்கும் அறிவே இல்லையாம், மிக தந்திரமாக அவர்களை இவர்கள் பயன்படுத்திகொள்வார்களாம். சம்பாதிக்க உலக துறைமுகம் எல்லாம் செல்வார்களாம்
ஆனால் இவர்கள் கடற்கரை அப்படியே இருக்க வேண்டுமாம், இப்படி ஒரு சுயநல கூட்டத்தை எங்காவது கண்டதுண்டா?
கவனியுங்கள், இந்த துறைமுகம் வேண்டாம் என பதிவிடுபவன் எல்லாம் எங்கிருக்கின்றான்? எல்லா பயலும் துறைமுகத்தால் செழித்த நாட்டில் இருந்துகொண்டு.
துறைமுகத்தால் பணம் கொழிக்கும் ஊரில் இருந்துகொண்டு தமிழக கடற்கரையில் வரும் துறைமுகங்களை எதிர்த்து எழுதிகொண்டிருக்கின்றான்
அவர்களுக்கு அவ்வளவு தந்திரமும், அறிவும் இருக்கின்றதாம், வேறு எல்லோரும் ஏமாளிகளாம்