தமிழன் ஆண்டாலும் நிலமை சரி இல்லை

தமிழக மீணவர்களை இந்திய கடற்படையே சுட்டுவிட்டதாக சில தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன‌

நிச்சயம் அம்மாதிரியான துப்பாக்கி சூடுகளை இந்திய பாதுகாப்புபடை செய்திருக்காது, செய்யவேண்டிய அவசியமுமில்லை.

தாங்கள் எச்சரிக்கை மட்டும் செய்ததாகவும் சுடவில்லை என்றும் காவல்படை தெரிவிக்கின்றது

சுட்ட காயமும் மீணவர்களிடம் இல்லை

தமிழரை நடுகடலில் கொன்றே தீரவேண்டும் என்ற அபத்த நோக்குடன் தாக்குதல் நடக்கவில்லை என்பது உறுதி

ஏதும் விவகாரம் கிடைக்காதா? ஏய் இந்தியமே என சீற முடியாதா என காத்துகிடந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள்

அந்த மீணவரிடம் இந்தியில் விசாரித்தார்களாம்

தமிழக வீரர்கள் காஷ்மீர் எல்லையில் நிற்கின்றார்கள், அங்கு எவனும் எல்லையில் சிக்கினால் தங்களுக்கு தெரிந்த மொழியில்தான் கேட்பார்கள்

எவனாது தமிழில் பேசி என்னை அடித்தான் என கிளம்புவானா? இல்லை

அப்படியாக இந்தி தவிர வேறுமொழி தெரியா வீரன் ஒருவன் விசாரித்திருக்கின்றான் என்கின்றது செய்தி

அதற்குள் இந்தி தெரியாமல் ஏன் கடலுக்கு வந்தாய் என போட்டு இந்திய ராணுவம் அடிக்கின்றது என வரிந்து கட்டி கிளம்பியாயிற்று.

இப்பொழுது ஆளாளுக்கு சொல்வார்கள் பாருங்கள்

“தமிழகத்தை தமிழன் ஆண்டாலும் நிலமை சரி இல்லை, இனி மீணவ தமிழன் ஆண்டால்தான் இதற்கு முடிவு வரும்”