தமிழரின் கலாச்சாரம் இந்துமத தாக்கமும் ஆழபதிந்த நாடு இந்தோனேஷியா

Image may contain: people standing, sky, outdoor and nature

இன்று இந்தோனேஷியா என்றிருந்தாலும், அது உலகின் மிகபெரிய இஸ்லாமிய நாடாக இருந்தாலும் தமிழரின் கலாச்சாரம் இந்துமத தாக்கமும் ஆழபதிந்த நாடு இந்தோனேஷியா

15 ஆயிரம் தீவுகள் உள்ள நாடென்றாலும், சில தீவிலே மக்கள் வசிக்கின்றார்கள்

சாவக தீவு ஜாவா ஆயிற்று, சு மதுரா என்பது சுமத்ரா ஆயிற்று

No automatic alt text available.இன்றும் அங்கு ஏகபட்ட இந்து ஆலயங்களும், அடையாளங்களும் உண்டு, உணவு முறைவரை தமிழர் தாக்கம் உண்டு, தமிழர் மதமான இந்துமத தாக்கம் உண்டு

ஜல்லிகட்டு போன்றே அங்கு மாடுபிடி விளையாட்டு உண்டு, பொங்கல் போன்றே அறுவடை விழா உண்டு

அக்கிராமத்து பெண்கள் பல்லாங்குழி முதல் தாயம் , சுட்டிக்கல் வரை தமிழகத்துவிளையாட்டுகளை அப்படியே அழகாக விளையாடுகின்றார்கள்

கபடியும் அந்நாட்டு கிராமங்களில் உண்டு

இஸ்லாமிய நாடான போதிலும் அவர்களுக்கு ராமாயணமும், பாரதமும் மிக முக்கிய கதைகள்

அவர்களின் விமான நிறுவணம் கூட “கருடா ஏர்வேஸ்”, அவர்களின் கரன்சியில் பிள்ளையார் படம் உண்டு

No automatic alt text available.அவர்கள் பெயர்கள் கூட ராமன், சீதா, கீதா, ராணி என்றுதான் பெரும்பாலும் வைக்கபடும், அவர்கள் கலாச்சாரம் அப்படி

மொழியும், மதமும் மாறி இருக்கின்றதே அன்றி அவர்களின் பழக்கவழக்கம் முதல் கலாச்சாரம் வரை எல்லாம் இந்துக்கள் அடையாளமே

அப்படிபட்ட இந்தோனேஷிய அதிபர் தன் பேரனுக்கு நேரேந்திரா என பெயரிட்டிருக்கின்றார் இது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

இப்பொழுது இந்தோனேஷியா சென்ற மோடியிடம் என் பேரன் பெயரும் நரேந்திரன் என சொல்லிவிட்டார் இந்தோனேஷிய பிரதமர்

(விவேகானந்தரின் இயர்பெயர் நரேந்திரன்)

இந்த பக்தாஸுக்கு பாகிஸ்தானை தவிர வேறு நாடு தெரியாது என்பதால் இப்பொழுது இப்படி குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எப்படி?

மோடியின் பெருமை கண்டு தன் பேரனுக்கே அவர் பெருமையினை சூட்டிவிட்டார் இந்தோனேஷிய அதிபர் என கடும் அழிச்சாட்டியம்

விரைவில் விவேகானந்தரையும் இனி நரேந்திரன் என்றுதான் அழைக்க வேண்டும் என கிளம்புவார்கள் பாருங்கள்