தமிழருக்காக சீறும் இயக்குனர் வ.கௌதமன்

இவ்வளவு காலமும் எங்கிருந்தார் என தெரியாமல் இருந்துவிட்டு, இப்பொழுது தமிழருக்காக சீறும் வ.கௌதமன் எனும் இயக்குநரின் அழிச்சாட்டியம் அதிகரிக்கின்றது.

பிரபாகரனின் கதையினை படமாக எடுப்பேன் என சொல்லி, பிரபாகரனை தமிழக குத்தகையாக எடுத்திருக்கும் அங்கிள் சைமனை வகையாக சீண்டுகின்றார்.

நிச்சயமாக கௌதமன் அங்கிள் சைமனின் ரோட்டில் கிராஸ் செய்துகொண்டே இருப்பது தெரிகின்றது.

அங்கிள் சைமன் இவர் விஷயத்தில் மகா அமைதியாக இருந்தாலும், இப்பொழுது இந்த கவுதமன் யார்? அவன் தமிழனா? தெலுங்கனா? இல்லை ஏலியனா? எனும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பார்

அவர் பூர்வீகத்தில் சிக்கல் இருந்தால் அங்கிளுக்கு விஷயம் எளிது, இல்லாவிட்டால் என்ன செய்வார்?

இவன் வடுக வந்தெறிகளின் கைகூலி, அவன் பெயரே கவுதமன் அதாவது புத்தரின் இயற்பெயர் அதனால் இவன் சிங்கள சிலிப்பர் செல் என சொன்னால் முடிந்தது விஷயம்

இந்த சைமனுக்குத்தான் எத்தனை விதமான எதிரிகள்?