தமிழருக்கும் எகிப்தியருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்
தமிழருக்கும் எகிப்தியருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம், அவ்வப்போது வாசிப்பதுண்டு
அவர்களுக்கு ஆதொன் என்றொரு கடவுள் இருந்திருக்கின்றார், இது ஆதவனின் சாயலாகும், அகநாதன் என்ற பெயர் கூட எகிப்து கல்வெட்டில் வருகின்றது
அவர்களின் பிரசித்திபெற்ற பிரமிடு கூட பெருமேடு என்ற வார்த்தையில் இருந்து வந்தது என்கின்றார்கள்
உச்சமாக இன்றுவரை எகிப்தின் தொன்மை அடையாளமான பிரமிடுகளை கூட தோண்டி முடிவினை கண்டுவிட்டார்கள்
ஆனால் ஸ்பிங்க்ஸ் எனப்படும் மனிதமுகமும் சிங்க உடலும் கொண்ட சிலை ஏன் எழுந்தது என்பது பற்றி ஆராய்ச்சியாளரால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை
ஆச்சரியமாக அது நரசிம்ம அவதாரத்தினை நினைவுபடுத்துகின்றது, நரசிம்ம அவதாரத்தில் பகவான் மனித உடலும் சிங்க உடலும் கலந்து வந்தார் என்பது நம்பிக்கை
அதனை சிங்க முகமும் மனித உடலுமாக கண்டவர்கள் இங்குள்ளவர்கள். அதனை சிங்க உடலாகவும் மனித தலையாகவும் கண்டவர்கள் அக்கால எகிப்தியர்கள்
அந்த பழமை மிக்க எகிப்து சிலையின் மூலம் நரசிம்ம தத்துவத்தை பார்த்தவுடன் சொல்லிவிடுகின்றது.
எகிப்தின் ஸ்பிங்க்ஸ் எனும் சிலை அதை பிரதிபலித்தே நிற்கின்றது
ஆசியாவெங்கும் பரவி இருந்த இந்து மதத்தின் எச்சமே அந்த சிலை
இதை சொன்னால் நம்மை ஆர்.எஸ்.எஸ் என்பார்கள்