தமிழருக்கு தமிழ்புத்தாண்டு தைமாதம் என சொன்னவர் கலைஞர் அல்ல
தமிழருக்கு தமிழ்புத்தாண்டு தைமாதம் என சொன்னவர் கலைஞர் அல்ல
அவர் பிறக்கும் முன்பே இருந்த கருத்து அது. அக்கால தமிழறிஞர் பலர் அக்கருத்தை வற்புறுத்திகொண்டே இருந்தனர்
தமிழருக்கு பருவகாலங்களை மாதமாக கண்டவர்கள் பருவ சுழற்சி வடிவிலே வருடத்தை சொன்னார்கள்.
தை என்றால் நாற்று அல்லது தொடக்கம் என பொருள்.
சித்திரை முதல் பங்குனி வரையான மாதங்களும். இந்த 60 சமஸ்கிருத பெயர்களும் தமிழ்பெயர் அல்ல
தைமாதம் தமிழ்புத்தாண்டு என்பது மறைமலை அடிகள் கூட்டம் போட்டு, பல தமிழறிஞர்கள் ஆராய்ந்து சொன்னது
பின்னாளில் கலைஞர் அதனை ஏற்றுகொண்டார், முதல்வராக அவர் இருந்ததால் அதனை அறிவித்தார்
ஆக தமிழ்புத்தாண்டு தை என முதலில் சொன்னவர் கலைஞர் அல்ல, அவருக்கு முன் சொன்ன ஏராளமானோர் உண்டு
அந்த அறிஞர்களின் முடிவுதான் கலைஞரின் முடிவுமே தவிர வேறல்ல
ஒரு வரலாற்றையும் படிக்க கூடாது, என்ன நடந்தது என தேட கூடாது, என்ன என்றாலும் கலைஞர் ஒழிக என கிளம்பிவிடவேண்டும்,
இப்படியும் ஒரு கூட்டம் இருக்கின்றது, சுத்தமாக மூளையினை கழற்றி அடகு வைத்துவிட்ட கூட்டம் அது