தமிழருவி மணியன் , வைகோ, தினகரன்….
தமிழருவி மணியன் என்பவர் மீது பெரும் அபிமானம் இல்லை, வைகோவுடன் சேர்ந்து அவர் செய்த காமெடிகள் எல்லாம் எரிச்சல் ரகம்
ஆனால் அவரின் புத்தகம் ஒன்று வாசிக்க முடிந்தது “மறக்க முடியாத மனிதர்கள்” என்ற அவரின் புத்தகம் அது.
மனிதர் அற்புதமான எழுத்தாளர், பல அரசியல் சரித்திரங்களை மனதெல்லாம் நிரப்பி வைத்திருக்க்கின்றார்
அரசியல் அவர்க்கு எதற்கு? அற்புதமான புத்தகங்களை எழுதி குவித்துகொண்டே இருக்கலாம்
இந்த புத்தகம் கூட 12 புத்தகமாக வந்திருக்க வேண்டியது, மனிதரிடம் அவ்வளவு விஷயம் இருக்கின்றது, ஆனால் ஒரே யுத்தமாக எழுதியிருக்கின்றார்.
மாமரம் சுவைமிகு மாம்பழங்கள்தான் கொடுக்க முடியும், மாறாக அது பலாபழம் கொடுக்க முயற்சிக்க முடியாது, முடிந்தாலும் முடியாது
அரசியலை தலைமுழுகிவிட்டு மிக சிறந்த புத்தகங்களை அவர் தமிழகத்திற்கு தரலாம், அவருக்கான இடம் அதுதான்
நாலும் முடிந்து நடந்தபின்னால் நல்லது கெட்டது புரிந்ததடா.. என்பது இதுதான், மிஸ்டர் வைகோ அதனை வாய்விட்டு சொன்னால்தான் என்ன?
கலைஞர் நலமாக இருந்திருந்தால் இப்பொழுதும் வைகோவிற்கு கட்சியில் இணைய அழைப்பு விடுக்கத்தான் செய்வார்
குத்தாட்டம் ஏன்? ஆம் அது கட்சி பாரம்பரியம். ராமசந்திரனும் , ஜெயலலிதாவும் ஆடாத குத்தாட்டமா?
அப்படி கட்சி பாரம்பரியபடி வரவேற்றிருக்கின்றார்கள்..