தமிழர் முத்திரையும், பழமையும் கொண்டது தாமிரபரணி
நிறைய அபத்தங்கள் முகநூலில் வரும், அப்படி ஒன்று சுற்றிகொண்டிருக்கின்றது, அதிலொன்று சோழர்களே தமிழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என சொல்லிகொண்டிருக்கின்றது
பூம்புகாருக்கும் முந்தைய கடல்கொண்ட கபாடபுரத்தில் இருந்தது பாண்டியர்கள்தான், அவர்கள் அக்கடல்கோளினால்தான் வடக்கே வந்தார்கள் என்கிறது பழைய தமிழ் நூல்
அலெக்ஸாண்டர் காலத்து தூதர்களும், ரோமானிய அரசின் தூதர்களும் பாண்டிய மன்னன் அவையில் வீற்றிருந்தனர் என்கின்றது இலக்கியங்கள்
சேர , சோழ மன்னர்கள் அவைகளில் இம்மாதிரி காட்சிகள் வருமா என்றால் வராது
அவர்கள் காவேரிபூம்பட்டினம் எனும் கடலுக்குள் மூழ்கிய நகரத்தில் வாழ்ந்திருந்தாலும், அதனை விட தொன்மையானது பாண்டியர் வரலாறு.
ஆதிச்ச நல்லூர் எனும் உறங்கும் வரலாற்று கூடம் முழுக்க பாண்டியர் சுவடுகளே, பூம்புகார் காலத்திற்கும் மூத்தது அது
பாண்டியரிடமும் கப்பல்படை இருந்தது, இலங்கை இந்தோனேஷியா என அவர்களும் உலகாண்டார்கள், முதன் முதலில் கிழக்காசியாவில் கப்பலில் சென்று காலணி அமைத்தது பாண்டியர்களே
இன்னும் ஏராளமான விஷயங்களை சொல்லமுடியும், ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் வரை இமயம் வென்ற பாண்டியர்கள் உண்டு
கடல் கடந்த தமிழர்களில் பல்லவ மன்னர்களும் குறிப்பிடதக்கவர்கள், அவர்கள் வழிவந்த நரசிம்ம பல்லவன் கட்டியதே அங்கோர்வாட் கோவில்
சேரர்களும் சாமான்யர்க அல்ல, அக்காலமே அவர்களுக்கும் அரேபியாவிற்கும் கப்பல் தொடர்பு இருந்திருகின்றது, இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாமும், கிறிஸ்தவமும் காலூன்றிய இடம் சேரர்களின் கேரளாவே
சுருக்கமாக சொன்னால் பாண்டியரர் மூத்தகுடி, சேரர்கள் இடையிலே தனித்து அல்லது வேறுபாதைக்கு சென்றனர், சோழர்கள் காலத்தால் இளையவர்கள்
1000 வருடத்திற்கு முன் சோழன் தஞ்சை கோவிலை கட்டிய காலங்களுக்கு முன்பே பாண்டியனும், சேரனும் தங்கள் உச்ச பொற்காலத்தை கடந்து முடிந்திருந்தனர்
அதனால்தான் பாண்டியர்களிடம் காணப்படாத பிராமண தாக்கம் சோழர்கள் ஆட்சியில் நிரம்ப காணபட்டது, பிராமணர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது சோழர்கள் காலத்தில்தான், அதற்கு முந்தைய காலம் அப்படி அல்ல
பின்னாளைய சோழபேரரசு காலத்தில் பாண்டிய அரசு வலுவிழந்திருதது, அதன் பின் கொஞ்சகாலத்தில் நாயக்கர்களும், மராட்டியர்களும் தமிழகம் வந்தனர்
பின் சோழநாடு மராட்டியனுக்கும், பாண்டியநாடு நாயக்கனுக்கும் இருந்த காலத்தில் வெள்ளையன் வந்துவிட்டான்
அந்த குறிப்புகளை கொண்டு சோழர்கள்தான் ஆக சிறந்தவர்கள் என வாதிடுவது நிச்சயம் குறைகுடம் கூத்தாடுவது போன்றது
சோழர்களுக்கு நிகரான சிற்பமும், கடற்படையும் பல்லவர்களிடமும் இருந்தது, அதனைத்தான் சோழர் தொடர்ந்தனர்
ஆக சும்ம்மா சோழன் சோழன் என சொல்லிகொண்டிருப்பது சரியான வாதமல்ல, அவர்கள் காலத்தால் இளையவர்கள் அவ்வளவுதான்
தமிழ் பொதிகை மலையில்தான் தோன்றியது, தொல்காப்பியனும் அகத்தியனும் அங்குதான் இருந்தார்கள், காவேரி கரையில் அல்ல
காவேரியினை விட அழுத்தமான தமிழர் முத்திரையும், பழமையும் கொண்டது தாமிரபரணி