தமிழிசைக்கு இப்பொழுது ஏன் நினைவு வந்தது

அப்படித்தான் 20.10.1977ல் மதுரைக்கும் வந்தார்.
மிசா கொடுமையில் பெரும் சிக்கலை சந்தித்த திமுக , சிட்டிபாபு , சாத்தூர் பாலகிருஷ்ணன் போன்றோரை இழந்திருந்த திமுக அந்த வடுக்களின் நினைவாய் கருப்புகொடி போராட்டம் அறிவித்தது
கலைஞர் முரசொலியில் இப்படி எழுதியிருந்தார் “ஒரு கையால் மிசாவில் பட்ட அடிகளினால் ஏற்பட்ட காயத்தை தடவிகொண்டே இன்னொரு கையால் கருப்புகொடி ஏந்துவர். சிட்டிபாவுவின் நினைவுகளும், சாத்தூர் பாலகிருஷ்ணனின் தியாகமும் நெஞ்சில் ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பர் திமுகவினர்”
இந்திராவோ ராமசந்திரன் கொடுத்த போலீஸ் பாதுகாப்பு தன்னை காக்கும் என எண்ணி திறந்தகாரில் பயணித்தார், திமுக தொண்டர்கள் பொங்கினர்
ஆர்.எஸ் ஸ்ரீத்ரன் எனும் திமுக உறுப்பினர் இந்திரா முகத்திற்கு நேரே கருப்புகொடி காட்ட, போலீஸ் அடிக்க தொடங்க வன்முறை வெடித்தது
காருக்குள் மூப்பனாரும், பழநெடுமாறனும் இருந்தனர். இந்திரா நோக்கி கற்கள்வர அவரை அப்படியே பின் இருக்கைக்கு கீழ் அமரவைத்து தலையணையினை மேலே வைத்து பாதுகாத்தார் மூப்பனார்
ஓட்டுநர் ஜாண் என்பவரின் திறமையான நகர்வினால் இந்திரா வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பபட்டார்
இதற்கு காரணம் பல இருந்தன
ராமசந்திரனை இந்தியா மிரட்டி வழிக்குகொண்டுவந்தது, காவேரி விவகாரத்தில் அமைதி காத்தது, கச்சதீவு உச்சமாக மிசா என ஏகபட்ட விஷயம் திமுகவினரை பாதித்தது
காமராஜரை இந்திரா நடத்தியவிதம் குறித்து காங்கிரசிலே அதிருப்திகள் இருந்தன
அந்த அளவு தமிழரின் சில அதிருப்திகளை அவர் சம்பாதித்திருந்தார்
ஆனால் அவர் தாக்கபட்டது நிச்சயம் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம். எனினும் சர்வ வல்லமை பொருந்திய இந்திராவினை தாக்கியவர்களை ராமசந்திரன் அரசு என்ன செய்தது என்றால், ஒன்றுமில்லை
ஏன் என்றால் அதுதான் அரசியல் , பின்னாளில் இந்திரா தஞ்சாவூரில் போட்டியிடுவதை தந்திரமாக தடுத்த ராமசந்திரன் கலைஞர் மீது பழிபோட்டதெல்லாம் வேறு கதை
ஆக கொந்தளிப்பான தமிழகத்தில் மிசா வடுக்கள் மாறா சூழலில் இந்திரா தாக்கபட்டார், கலைஞர் அந்த நேரம் மிக பொருத்தமான வார்த்தைகளால் அறிக்கைவிட்டார்
“இந்நாள் திமுகவினர் என்றால் யார் என்ன என்பதையும், சுயமரியாதை என்றால் என்ன என்பதையும் இந்திரா மட்டுமல்ல, இந்தியர் அனைவருமே உணர்ந்த நாள், புரிந்துகொண்ட நாள்”
இதுதான் அவர் சொன்னது
பின்னாளில் வந்த “பெண்ணின் சேலையில் பட்ட ரத்தத்திற்கு திமுக பதில் சொல்லாது” என்பதெல்லாம் அவர் சொல்லவில்லை, சொன்னதாக எந்த ஆவணத்திலும் இல்லை
அந்த மகா கேவலமான , பெண்மையின் தன்மையினை கொச்சைபடுத்திய வார்த்தைகள் அவருடையது அல்ல, கீழ்மட்டத்தில் இன்று உதயநிதி என பொங்கும் சில அல்லக்கைகள் போல அன்று யாரோ சொன்னது
இது என்றோ நடந்த சம்பவம்
ஆனால் தமிழிசைக்கு இப்பொழுது ஏன் நினைவு வந்தது என தெரியவில்லை.
இந்திராவினை அடித்த திமுக , மோடியினை தாக்கவில்லை என சொல்கின்றாரா? இல்லை மோடி ஏதும் சர்ச்சையில் , முற்றுகையில் சிக்கி இருக்க வேண்டும், திமுகவினர் அவரை அடிக்க சாடியிருக்க வேண்டும் என சொல்ல வருகின்றாரா என்பதுதான் தெரியவில்லை
தமிழிசை இப்படி எல்லாம் கோர்த்துவிடுவார் என்று மோடிக்கு தெரிந்துதுதான் ஹெலிகாப்டர், ஐஐடி வளாகம் என மறைந்து ஓடியிருப்பாரோ?
வாய்ப்பு இருக்கின்றது