தமிழிசைக்கு கொலை மிரட்டல்
தமிழிசைக்கு கொலை மிரட்டல் , அரியலூர் உடையாளர் பாளையத்தில் இருந்து கடிதம் வந்தது : செய்தி
அந்த உடையார் பாளையத்து மடையர்கள் கொஞ்சமும் ரசனை இல்லாதவர்களா? இல்லை அரசியல் அறியா பதர்களா?
தமிழிசை வெண்மனதிற்கு சொந்தக்காரர், மனதை பட்டதை பேசிவிடுகின்றாரே தவிர , வஞ்சகமாகவோ சூதாகவோ அவருக்கு பேச தெரியாது, அந்த சிந்தனையுமில்லை.
அரசியலில் ஒரு இடத்திற்கு போராடுகின்றார் அது ஒன்றும் தவறேன்று சொல்லமுடியாது
தமிழகத்தில் பாஜகவிற்கும் விழும் வசவுகளை அவர்தான் சுமக்கின்றார், எப்பொழுதாவது வரும் நல்லபெயர் மட்டும் மோடிக்கு செல்கின்றது
இன்றைய அரசியல்வாதிகளில் ஆளாளுக்கு அவரைத்தான் போட்டு சாத்துகின்றார்கள், ஆனால் மிக பக்குவபட்ட அரசியல்வாதியாக எதனையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றார் தமிழிசை.
இந்த பயிற்சிகள் எல்லாம் சாதாரணம் அல்ல, அவரை கலாய்க்கும் ரகங்கள் எல்லாம் கடுமையானவை ஆனாலும் அட்டகாசமாக கடக்கின்றார்
கலைஞருக்கு பின் அந்த பக்குவம் அவருக்கே வாய்த்திருக்கின்றது
நிச்சயமாக அரசியலில் ஊழல் செய்யவோ, சம்பாதிக்கவோ அவர் வந்தவரல்ல, அது அவரால் முடியவும் முடியாது அதற்கெல்லாம் தனிதிறமை வேண்டும்
தமிழிசை என்றுமே நமது அபிமானத்திற்குரியவர். மோடியே நாளை தமிழக பாஜக தலைவர் என்றாலும் இனி தமிழகம் தன் கருத்துக்களை தமிழிசையிடமே கேட்கும், அந்த அளவு மக்களின் அபிமானம் பெற்றுவிட்டார்
தமிழிசையினை மிரட்டிய அந்த மடையர்களை கைது செய்து சிறைக்கு அல்ல பைத்தியகார மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்
அப்பாவி தமிழிசையினை மிரட்ட வருபவர்கள் பைத்தியம் அன்றி வேறென்ன?
ஊழல் தலைவிக்கு சட்டமன்றத்தில் படமும், வெளியே சிலையும் திறப்பார்களாம் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு பைசா ஊழல் குற்றசாட்டோ இல்லை மோசடி புகாரோ இல்லா தமிழிசையினை மிரட்டுவார்களாம்
அவர்கள் கிறுக்கர்கள் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?
திருச்சியில் அடுத்த கூட்டம் நடத்துகின்றார் கமலஹாசன் : செய்தி
தனக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்திருக்கின்றார் கமல் : கவுதமி
ஆக கட்சி ஆரம்பித்த சில நாட்களிலே மோசடி வழக்கில் நீதிமன்றம் ஏறப்போகும் தலைவராக கமல் வரலாறு படைக்கலாம்
தண்ணீரைப்போல செலவாகிறது மக்கள் பணம் : உபி அரசு மீது மாயாவதி காட்டம்
அம்மா மாயாவதி உங்கள் ஆட்சியில் ஊரெல்லாம் 100 கோடியில் உங்கள் சிலையினை வைத்தீர்களே, அப்பொழுதெல்லாம் காலியானது உங்கள் அப்பா வீட்டு பணமா?
அதற்கு இந்த யோகி எவ்வளவோ பரவாயில்லை