தமிழிசைடா..
அட இந்த தமிழிசை கொஞ்சகாலம் எங்கே சென்றார்?? வங்கபக்கம் சென்றிருப்பாரோ, பரவாயில்லை உண்மை நிலவரம் கண்டறிய சென்றிருப்பார் என்றெல்லாம் தேடினால் அம்மணி இலங்கை சென்றிருக்கின்றார்
பல இடங்களுக்கும் சத்தமில்லாமல் சென்றிருக்கின்றார், சீமான் போல மாறுவேடம் எல்லாம் அல்ல, தைரியமாக சுற்றியிருக்கின்றார்
அவருக்கு முள்ளிவாய்க்காலை சுற்றிபார்க்கும் எண்ணம் இருந்திருக்கின்றது, ஆனால் செல்ல முடியவில்லை
ஈழத்தில் பொதுமக்களை தமிழிசை சந்திக்கவில்லை, யாருடைய கட்டளைக்கோ அஞ்சி ஓடிவிட்டார் என்கின்றது செய்திகள்
நாங்கள் தடுக்கவே இல்லை என்கின்றது இலங்கை அரசு, அப்படியானால் தடுத்தது யார்? எனும் கேள்வி எழுகின்றது
ஒருவேளை மத்திய அரசு தடுத்திருக்குமோ?
இச்செய்தி இன்னும் தமிழ் உணர்வாளர்களை எட்டவில்லை போலும், எட்டினால் விஷயம் பெரும் விஷயமாகலாம்
தமிழகம் திரும்பிவிட்டாரா என்பது தெரியவில்லை, ஆனால் இலங்கையினை இந்தியா மீணவர் சட்டம் விவகாரமாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என சொல்லியிருப்பதால் அவர் சென்னை திரும்பியிருக்கலாம்
ஆக ஈழத்திற்கு அட்டகாசமாக தமிழிசை சென்று வந்திருக்கின்றார், தமிழக பாஜக தலைவராக அவர் சென்றிருக்கின்றார்.
சீமான், திருமா எல்லாம் வடை போச்சே என்ற அதிர்ச்சியில் இருக்கலாம், முன்னமே தெரிந்தால் மட்டும் தமிழிசையினை இவர்களால் தடுக்க முடியுமா என்ன? ஆனாலும் கத்துவதற்கு ஒரு வாய்ப்பினை விட்டுவிட்டதில் அவர்களுக்கு கடும் ஆத்திரம்
இவர்கள் கத்தி போகாமல் இருக்க அவர் என்ன ரஜினியா?
தமிழிசைடா..