தமிழிசைதான் அடுத்த கோல்டா மேயர்.. எச்.ராசாதான் அடுத்த மோசே தயான் …
உங்க ஊர்ல ராமர் கோவில் மாதிரி , இங்க யூத கோவில் அரசியல் மிஸ்டர் மோடி
ஆனா உங்க நாடு மாதிரி ஜெருசலேம் மசூதிய சட்டுபுட்டுண்ணு இடிக்க முடியல, அவமானமா
இருக்கு
இந்த “கரசேவகர்கள்” எல்லாம் எப்படி திரட்டனும்? ரதம் எல்லாம் ஏறி எப்படி சுற்றிவரணும்? என்னவெல்லாம் செய்யணும்?
உங்கள விட்டா இதெல்லாம் சொல்லிதற உலகத்துல யார் இருக்க்கா சொல்லுங்க?”
இஸ்ரேல் என்னவென்றால் என்னவென்று தெரியாமலே சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்
இஸ்ரேல் யூதநாடாக உருவானது போல, இவர்கள் இந்தியாவினை இந்து நாடாக்குவார்களாம், அது பாலஸ்தீனை ஆக்கிரமித்து நிற்பது போல இவர்கள் பாகிஸ்தானை ஆக்கிரமிப்பார்களாம்
இஸ்ரேல் உருவாக ஏராளமான காரணங்கள், ஹிட்லர் அடித்த அடி, அமெரிக்காவினை வளைத்த யூதர்கள், அவர்களின் ஐரோப்பிய பலம் , யூதர்களின் ஜெருசலேம் வெறி, விஞ்ஞான பலம் என நிறைய
மிக முக்கியமான விஷயம் அரேபிய எண்ணெய், அது மட்டும் இல்லையென்றால் வரலாறு மாறியிருக்கும்
அந்த பிரதேசத்தின் தனக்கொரு அடியாள் வேண்டும் என்ற அமெரிக்காவின் ஆசையில்தான் இஸ்ரேல் இன்றும் இருக்கின்றது
அதனை விட மகா முக்கியமான விஷயம் அரேபியர்களிடம் இல்லாத ஒற்றுமை
மொத்தமாக அரேபியா பொங்கியிருந்தால் இஸ்ரேல் என்றோ காலி
ஆக உலக விஷயங்களை தனக்கு சாதகமாக்கி, ஒரு மாதிரியான நாடகம் ஆடி பலர் காலில் இன்று நிற்கும் தேசம் இஸ்ரேல்
மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு, பிராமணரை விட, இஸ்லாமியரை விட மிக பிற்போக்கான இனம் அது, ஆனால் காலத்திற்கு ஏற்றது போல நாகரீகமாக மாறிவிட்டது
மத சட்டங்களை கூட காலத்திற்கு ஏற்றபடி மாற்றிவிட்டார்கள்
அந்த இஸ்ரேலை போல இவர்கள் இந்தியாவினை மாற்றுவார்களாம், கனவு காண்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்
எல்லோரும் இஸ்ரேல் ஆகமுடியுமா?
முன்பு இஸ்ரேலை போல ஈழம் அடைவோம் என சொல்லி ஒரு கும்பல் இப்பொழுதுதான் அடங்கியிருக்கின்றது, அது நடக்காது என விட்டுவிட்டது
இப்பொழுது இவர்கள் இஸ்ரேல் பாணியில் அகண்ட இந்து இந்தியா அமைக்கபோகின்றார்களாம்
ஆகபெரும் அறிவுஜீவி எல்லாம் பாஜகவில்தான் இருப்பான் போல
நல்ல வேளையாக இஸ்ரேலிய கோல்டா மேயர் எனும் பெண் அதிபர், மோசே தயான் எனும் வியத்தகு கமாண்டர் பற்றி எல்லாம் இவனுக்கு தெரியவில்லை
தெரிந்துவிட்டால் தமிழிசைதான் அடுத்த கோல்டா மேயர், எச்.ராசாதான் அடுத்த மோசே தயான் என்றால் என்னாகும்?
இஸ்ரேலியர் நாட்டை கலைத்துவிட்டு ஓடியே விடுவர்…
கதிராமங்கலம் மக்கள் மீது போலீசார் தடியடி குறித்து முதல்-அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது: சீமான்
பொறுப்பான பேச்சுக்கு எல்லாம் இவர்தான் பொறுப்பு என நம்பிகொள்வோம்
“நமிதா டாய்லெட் க்ளீன் பண்றத பார்த்து கண்கலங்கிட்டேன்” : கலா மாஸ்டர்
நாங்கள் நமீதா உருவத்தை பார்த்தே கண் கலங்கிவிட்டோம், எப்படி இருந்த நமிதா இப்படி ஆகிவிட்டார்?