தமிழிசை அக்கா காலா படம் பார்த்த்தார்

Image may contain: 2 people

தமிழிசை அக்காவும் காலா படம் பார்த்துவிட்டாராம், பார்த்துவிட்டு “கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு” என மனதில் உற்சாகமாக பாடிகொண்டு பேட்டி கொடுக்க வந்துவிட்டார்.

படத்தை படமாக பார்க்க வேண்டுமாம், அக்கா பொன்மொழிகளை அள்ளி தெளித்திருகின்றார். ஆனால் “மெர்சல்” படத்தை ஏன் அக்கா படமாக பார்க்கவில்லை என நாம் கேட்க கூடாது.

அக்காவும் பக்கா அரசியல்வாதி ஆகிவிட்டார், ரஜினி என்றால் அக்காவிற்கு ஒரு தனி பாசம் வந்துவிடுகின்றது

பிஜேபியினை ரஜினி கிழித்து எறிந்தாலும் , அக்காவிற்கு பாஷா ரஜினி கட்டிவைத்து அடிவாங்கும்பொழுது அவருக்கு சிரிப்பு வருவது போல அக்கா கட்சி அடிவாங்கினாலும் அக்கா மனதிற்குள் ரத்தம் வடித்து சிரித்துகொண்டே இருக்கின்றார்

எமக்கு என்னமோ, “மின்சார கண்ணா, உன்னை எல்லோருக்கும் ஏன் பிடிக்கும் தெரியுமா? வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னைவிட்டு போகல” எனும் வசனத்தை அக்காதான் எழுதி கே.எஸ் ரவிகுமார் வீட்டில் போட்டுவிட்டு ஓடியிருப்பார் என தோன்றுகின்றது

அந்த அளவு ஆகா, ஓஹோ என மோடி நடிப்பினை புகழ்வது போல ரஜினியினையும் காலா படத்தினையும் புகழ்ந்துகொண்டே இருக்கின்றார்

போகிற போக்கில் அடுத்த ரஜினி படத்தில் ரஜினியின் முன்னாள் காதலி வேடத்தில் அக்கா நடித்தாலும் ஆச்சரியமில்லை


காலா படத்தில் ஏகபட்ட குறியீடுகளாம், வண்ணத்தில், பேச்சில் காட்சியில் எல்லாம் ஒரே குறியீட்டு மயமாம் , நுட்பமாக கவனிக்க வேண்டுமாம்

நாமும் கவனிப்போம்

“என் நிலம் என் உரிமை” இதுதான் படத்தின் கருவாம்.

இதைத்தானே பாபர் மசூதியில் இஸ்லாமியரும் சொல்கின்றார்கள்.

இந்த டவுசர் பாய்ஸ் ஆர்.எஸ்.எஸ் சிவசேனா பாஜக எல்லாம் இந்த ஆக்கிரமிப்பில்தான் மும்முரமாக இருகின்றன, அந்த மசூதியினை இவைகள் தானே இடித்தன அதுவும் ராமருக்காக‌

ரஜினி ராமரை ஓட விரட்டி ஒழிக்க வேண்டும், பாபர் மசூதியினை கட்டவேண்டும் என குறிப்பால் கொல்கின்றாரோ?

காலா படம் என்பது ராமர் வேண்டாம், மசூதி வேண்டும் என்பதன் நவீன நாடகமாக இருக்கலாம்.

நமக்கு குறிப்பால் இப்படித்தான் விளங்குகின்றது, எனினும் படம்பார்த்த அக்கா தமிழிசையிடம் நம் சந்தேகத்தை கேட்டுவிடுவோம்


ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் சேர்வேன் : ரஞ்சித்

ஏன் இந்த திருமா, மாயாவதி கட்சியில் எல்லாம் அன்னார் சேரமாட்டார்?

ரஜினி கட்சி என்ன ஆன்மீக அரசியலா அம்பேத்கர் அரசியலா?

இவரை தன் கட்சியில் சேர்ப்பதற்கு பதில் ரஜினி மாயாவதியின் கட்சியிலே சேர்ந்துவிடலாம்


 

இந்த சமுத்திரகனி போராளி கும்பல்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றது என தெரியவில்லை 

நல்ல கருத்துக்களை சொன்ன ஒரே இயக்குநர், நடிகர் அவர்தான், அவர் முதல்வராக வரவேண்டும் என சொல்லிகொண்டிருந்தவனை எல்லாம் காணவில்லை

இனி சமுத்திரகனி புரட்சி பேசுவார்??