தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயற்சி : வாலிபர் கைது

தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயற்சி : வாலிபர் கைது

தமிழிசை ஒரு சுவாரஸ்யமான அரசியல்வாதி, கொஞ்சமும் தயக்கமின்றி, அச்சமின்றி சொல்ல கூடியவர். விமர்சனங்களுக்கு அஞ்சுபவரும் அல்ல‌

சுறாக்களும், கடல் பாம்புகளும், திமிங்கலங்களும் , ஆமைககளும் ஏன் ஆமைகறிகளும் , ஆக்டோபஸ்களும் நிறைந்த கடலின் கரையில் இருந்து கொண்டு ஒவ்வொன்றையும் சாடும் தவளை அவர்.

அடிக்க வேண்டியவர்கள் அந்த சுறாக்களை, திமிங்கலங்களை, கடல் பாம்புகளை, கொடும் கொம்பன் சுறாக்களை அடிக்கலாம்

அதைவிட்டு விட்டு அவைகள் அப்படித்தான் ஆனால் நீ எப்படி கத்தலாம் என தவளையினை அடிப்பது பைத்தியகார செயல்

அக்கா தமிழிசையினையே அடிக்க துணிந்தான் என்றால் அவன் அவ்வகை பைத்தியகாரனே, அவனை உடனே கீழ்பாக்கம் அனுப்பி சிகிச்சைபெற வைத்து தமிழிசையிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்


ஏய்ம்ஸ் விவகாரத்தில் அன்புமணி மற்றும் தமிழிசை ட்விட்டர் சண்டை

இருவரும் டாக்டர்கள் என்பதால் எய்ம்ஸ் பற்றி எங்களுக்குத்தான் தெரியும் என மல்லுகட்டுகின்றார்கள், இந்த இரு டாக்டர்களில் யார் நல்ல டாக்டர் என்றால் இரண்டுமே அல்ல என்பது வேறு விஷயம்

இந்த சண்டை நீண்டு இப்பொழுது சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை பாமகவினர் முற்றுகை என செய்திகள் வருகின்றன‌

இப்பொழுது பெரும் வருத்தத்தில் இருப்பது ராமதாஸ்தான், காரணம் சூரியன் சந்திரன் இருக்கும்வரை திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என சொல்லிவிட்டார்

இதனால் பாஜக அவரின் மிகபெரும் தேர்வுகளில் ஒன்று, அது மகனால் கெடுகின்றது என்ற வருத்தம் அவரிடம் இருக்கலாம்

அதனால்தான் பெரும் டாக்டரான ராமதாஸே ஏய்ம்ஸ் பற்றி வாய்திறக்கவில்லை

இந்த சூரியனும் சந்திரனும் இருப்பதால்தான் ராமதாஸுக்கு எவ்வளவு தொல்லை….