தமிழுக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்ததை கொண்டாட யார் இருக்கின்றார்?
பல மாநில அரசுகள் தங்கள் மாநிலம் உருவான நாள் என கொண்டாடிகொட்டிருக்கின்றன
அதாவது பல நூறு ஆண்டுகள் கழித்து இது இந்தமொழி பேசும் மக்களின் மண் என ஒரு அங்கீகாரம் கிடைத்ததாகவே கருதுகின்றன
கோரி காலம், மொகலாயர் காலம் , பிரிட்டிசார் காலம் என பல கடந்து வந்த அங்கீகாரம் அவை, சுதந்திர இந்தியாவில்தான் சாத்தியமாயிற்று
அது உண்மையும் கூட,
அதாகபட்டது இம்மொழி பேசும் மக்களின் தாயக பூமி இது என பட்டா போட்டு கொடுத்தது போன்ற அங்கீகாரம் அது,
(இதனைத்தான் இலங்கையில் இந்தியா ஈழதமிழருக்காக செய்ய நினைத்தது, புலிகள் சிதைததில் இன்று அப்படியொரு அங்கீகாரம் அவர்களுக்கு இல்லை, இப்போதைக்கு கிடைப்பதாகவும் இல்லை)
அதனால் இந்த 61ம் ஆண்டுவிழாவினை அவை மிக விமரிசையாக கொண்டாடுகின்றன, ஆச்சரியமாக அவை எல்லாம் பிரிவினை பேசாத, இனவாதம் பேசாத மாநிலங்கள் அவை
ஆனால் திராவிடம், இன உணர்வு என வாய்கிழியபேசும் தமிழகத்தில் ஒரு சத்தமுமில்லை
தமிழக பத்திரிகைகள் கமலஹாசன் கவுதமி என உலகபிரசித்திபெற்ற வரலாறுகளை எழுதுகின்றன, சில கமலின் முன்னாள் மனைவியினையும், சில கவுதமியின் முன்னாள் கணவரையும் பகீரத தவமாக தேடி அலைகின்றன
தமிழக அரசு அப்பல்லோ ஆஸ்பத்திரி தொடங்கபட்ட வரலாறை தேடிகொண்டிருக்கலாம்
இதில் தமிழுக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்ததை கொண்டாட யார் இருக்கின்றார்?
வரலாற்றில் பதிந்து தன்னை இணைத்துவிட்ட கலைஞர் மட்டும் இதனை நினைவு கூர்ந்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார், சுருக்கமாக இதற்கு பாடுபட்ட அனைவரையும் நினைவு கூர்கிறேன் என்றார்
ஆனால் அவர் முன்னாள் முதல்வர், தமிழருக்காக பாடுபட்டவர், தமிழர் வாழ உழைப்பவர் என்பதை எல்லாம் நாம் மறந்துவிடவேண்டும், மறந்துவிடுங்கள்
அவர் அவ்வளவாவது சொன்னார்
மற்றவர்கள் எல்லாம்?
வோட்டுக்காக வாழ்கிறோம் என்பதன் தமிழக சொல்வழக்கு, தமிழ், தமிழர், இன உணர்வு இன்னும் பல அழிச்சாட்டிய இம்சைகளாக இருக்கின்றன.
இஸ்லாமிய மன்னர்களிடமும், நாயக்கர்களிடமும். பின் வெளைளையரிடமும் சிக்கிய தமிழகம் இந்நாளில்தான் நெடுநாளுக்கு பின் தமிழருக்கான மாநிலம் என அங்கீகாரம் பெற்றது
இதனை கொண்டாடமல்தான் நாயக்கன் ஒழிக, வந்தேறி ஒழிக, பிரபாகரன் வாழ்க, இன விடுதலை வாழ்க என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.
தமிழகத்தை கொண்டாடுபவர்கள் இதனை கொண்டாடவேண்டுமல்லவா?
இந்த திராவிட உணர்வாளர்காவது, பார்பானிய இந்தியாவே தமிழர் பூமியினை அங்கீகரித்த நாள் என முழங்குகின்றார்களா என்றால் இல்லை
இதனை சொன்னால் இந்தியா தமிழர்களுக்கு தனிமாநிலம் கொடுத்து அங்கீகரித்திருக்கின்றது எனவும் சொல்லவேண்டிவரும் அல்லவா? அதனால் எப்படி சொல்வார்கள்?
இன்னொன்று இந்த எல்லை மீட்பு போராட்டத்திலோ குமரி போராட்டத்திலோ திராவிட தலைவர்கள் ஒன்றும் செய்தவர்கள் அல்ல, அதனால் பெரியார் கிழித்தார், அண்ணா அறுத்தார், கலைஞர் கதறினார் என சொல்ல ஒன்றுமில்லை
அதனால்தான் கனத்த மவுனம். உண்மையாக போராடியவர்கள் விளம்பரபடுத்தவில்லை என்பது இன்னொரு கோணம்
இதுதான் அரசியல் நரித்தனம். சொல்லவேண்டியதை மறைப்பது, துரும்புக்கு பெருமான விஷயத்திற்கு பார்பன இந்தியா, தமிழன் புறக்கணிப்பு என கத்தவேண்டியது
இவர்களை விடுங்கள்
அதன்பெயர் தமிழக அரசு, ஆனால் தமிழகத்திற்கான அரசா? என்பது தெரியாது.
மிக விமரிசையாக கொண்டாடவேண்டிய விழா, என்ன செய்வது?
இந்த தமிழகத்தில் நடக்கவேண்டியது எது ஒழுங்காக நடந்தது?
கொசுறு 1
திருநாவுக்கரசருக்கு குஷ்பு பாடம் எடுக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்
உங்களுக்கு பாடம் எடுப்பது தமிழிசை என்பது உலகிற்கே தெரியும், காரணம் இருவர் பொழியும் தத்துவ முத்துக்கள் அப்படி
குஷ்பூ ஏன் திருநாவுக்கரசுக்கு பாடம் நடத்தவேண்டும்?,
ஆனால் விரைவில் அவருக்கு தக்க பாடம் குஷ்பூ புகட்டிவிட்டு தலைவர் பதவியினை பிடிப்பார்,
அதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை வேண்டுமானால் தெரிவித்துகொள்ளுங்கள் எங்களை போல… 🙂
1984-ம் ஆண்டு கலவரம் காங்கிரஸ் ஆட்சியின் அழிவிற்கு மிகப்பெரிய உதாரணம்: அருண் ஜெட்லி குற்றச்சாட்டு
இந்த ரத யாத்திரை, கர சேவை, பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் கலவரம் இவை எல்லாம் எதற்கு மிக பெரிய உதாரணம் என்பது அன்னாருக்கே தெரியும் என்பதால் சொல்ல தேவையில்லை