தமிழை எதிர்த்து போராட்டம் நடத்தபடும் : எச்.ராசா

17800350_10208827080129433_955189328915744613_n.jpg

தமிழை எதிர்த்து போராட்டம் நடத்தபடும் : எச்.ராசா

இந்நாட்டில் பெரும் சுதந்திரபோராட்டம் நடந்தபொழுதும் வெள்ளையனை ஆதரித்துகொண்டிருந்தவர்களின் வாரிசுகள் இப்படித்தான் பேசுவார்கள்

இந்தியாவே வெள்ளையனை எதிர்க்க இந்த கூட்டம் அவனை ஆதரித்தது

அப்படி தமிழர்கள் இந்தியினை எதிர்த்தால் இவர் தமிழை எதிர்ப்பாராம்? இதுதான் கலைஞர் சொல்லும் “கருவின்” குற்றம்

எப்படி எதிர்ப்பார்? தொல்காப்பியம் முதலான தமிழ்நூல்களை எரிப்பாரா? திருகுறளை அடுப்பில் இடுவாரா?

அதனை டெல்லிபக்கம் சென்று அல்லவா எதிர்க்கவேண்டும்?

எத்தனை ஆயிரம் செட்டியார்கள் பட்டினத்தார் காலம் முதல் கண்ணதாசன் காலம் வரை காரைக்குடி பக்கமிருந்து உருவானார்கள்,

தமிழை எதிர்ப்போம் என்பவர்கள் நிச்சயம் காரைகுடி பக்கம் இருந்து வரவே மாட்டார்கள், செத்தாலும் அப்படி சொல்லமாட்டார்கள். தமிழர்களின் பெரும் அடையாளம் அவர்கள்.

அந்த காரைகுடி பக்கமிருந்து இந்த நாரை எப்படி வந்தது என பார்த்தால், அதன் வம்சம் வடக்கத்தியாம், இங்கு வந்து ஒருதலைமுறை கூட உருப்படியாக தமிழ் படிக்காத முதல் வம்சமாம் இவர்

இத்தனை நாள் அடங்கிகிடந்த இந்த பாம்பு மோடி எனும் சிவனின் கழுத்தில் இருப்பதாக நினைத்து சீறுகின்றது

அப்படித்தான் முன்பு கடவுளின் கைக்குழந்தை நாங்கள் என ஒரு கூட்டம் சொன்னபொழுது, உன்னை அடிக்க கடவுளையும் அடிக்க தயங்கமாட்டேன் என செருப்பால் அடித்து அவர்களை விரட்டிய தமிழக வரலாறு இந்த புது தமிழருக்கு எப்படி புரியும்?

இனி அப்படி நடந்தால் புரியும்

இந்த மண் அப்படி, பரமசிவன் கழுத்தில் பாம்பு இருந்தால் அந்த பாம்புக்காய் சிவனையே விரட்டிய மண்

அது அந்த ராசா , வடக்கு நோக்கி ஓடும்பொழுது புரியும்

எனினும் மோடி இந்த மாதிரி பைத்தியங்களை பாகிஸ்தானுக்கு தூதராக அனுப்புவது நல்லது, அங்கு ஏதாவது செய்து உள்நாட்டு குழப்பத்தை தொடங்கி வைப்பார், இவரை போட்டு அடிப்பதிலே அவர்கள் முழு கவனம் இருக்கும்..

எல்லை நிம்மதியாக இருக்கும்..

இவர் அங்கும் இப்படி அத்து மீறினால், தமிழர் தயங்குவதை பாகிஸ்தானியர் செய்யட்டும்..

எத்தனை கொடூரங்களை இந்தியாவிற்கு எதிராக‌ செய்கின்றார்கள் அவர்கள், இப்படி ஒன்றை செய்து அந்த பாவங்களுக்கு பரிகாரம் தேடட்டும்..