தமிழை வளர்ப்பது என்றால்
தமிழை வளர்ப்பது என்றால் “ஸ்” நீக்குவது “ஷா”வினை நீக்குவது அல்ல, தமிழை வளர்ப்பது என்றால் இந்தியினை எதிர்ப்பதுமல்ல, தமிழை வளர்ப்பதென்றால் அதன் ஆதார வேரில் இருந்து வளர்க்க வேண்டும்
நாம் உலகெல்லாம் இருக்கும் புலம்பெயர் தமிழர்களை உற்றுபார்க்கின்றோம், அவர்கள் 18 அல்லது 19ம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்திருக்கலாம், அவர்களில் கிறிஸ்தவ மதம் மாறியவர்கள் அப்படியே ஐரோப்பிய சாயலுக்கும் வாழ்வுக்கும் மாறிவிட்டனர், உடை நடை பாவனை வாழ்க்கைமுறை வீடு வாசல் என எல்லாமே முழுக்க ஐரோப்பா சாயல் நிறம் மட்டும் விலக்கு
அவர்கள் வீட்டில் ஆங்கிலம், அவர்கள் மதத்துக்கு ஆங்கிலம் எளிதாக ஒத்துழைக்கின்றது காரணம் அம்மொழி மூலமாகத்தான் அது அவர்களை அணைத்தது, அங்கு சகலமும் ஆங்கிலம் ஐரோப்பிய வாழ்வு எனும் பொழுது முதலில் இந்துமதம் விடைபெறுகின்றது பின் தமிழ் மெல்ல சாகின்றது
இதுதான் இதர மதங்களை பின்பற்றுவோர் நிலையும்
ஆனால் அங்கு இந்துக்களிடம் மட்டும் தமிழ் வாழ்கின்றது, என்னதான் ஆங்கிலம் மற்றும் இதரமொழிகள் பேசினாலும் வழிபாட்டுக்கு தமிழும் தமிழ் கலாச்சார வடிவமும் இயல்பாக வந்துவிடுகின்றன
உடை முதல் வழிபாடு வரை தமிழ் கலாச்சாரத்தை இந்துமதம் ஒன்றுதான் இழுத்துவருகின்றது
இந்துவாக வாழ்வதுதான் தமிழை காக்கவும் தமிழ் கலாச்சாரத்தை காக்கவும் அதன் இலக்கிய செழுமைகளை காக்க்கவும் ஒரே வழி, அது அன்றி வழியில்லை
விஞ்ஞானம் ஒரு நாளைக்கு ஒருவடிவம் காட்டும் , உலகை ஒவ்வொரு காலமும் ஒரு மொழி ஆளும்
இந்த உலகை அலெக்ஸ்டாண்டர் காலத்தில் கிரேக்கம் ஆண்டது, சீசர் காலத்தில் லத்தீன் ஆண்டது, ஆங்கிலேயன் காலத்தில் ஆங்கிலம் ஆண்டது இன்னும் சில தசாப்தங்களில் அது சரியலாம் வீழலாம்
ஆனால் தொன்றுதொட்டு தமிழ் இக்காலமும் நிலைக்க பெரும் காரணம் தமிழன் இந்துவாக இருந்த ஒரே காரணம் அன்றி வேறல்ல
அவன் அசோகர் காலத்தில் பவுத்த பாலிமொழியில் சிக்கியபொழுது இந்துமதத்தின் தமிழ் அவனை தமிழனாக நிறுத்திற்று, தமிழனை மதம்மாற்ற பவுத்தனும் சமணனும் தமிழ்படித்தார்கள், இந்துமதத்தை வேரறுக்க தமிழ்படித்தார்கள் தமிழ் காவியங்களும் படித்தார்கள் தமிழ் அவர்களை தன்பார் ஈர்த்தது, ஒரு கட்டத்தில் இந்துமதத்தால் தமிழ் வென்று பாலிமொழியினை விரட்டி தன்னை நிறுத்திற்று
பின் ஆப்கானிய ஆட்சி மிரட்டலில் இந்துமதம் ஒன்றால் தமிழ் நிலைத்தது, சுமார் 100 ஆண்டுகால ஆப்கானிய ஆட்சியில் இந்துவாக இருக்க தமிழ் அவசியம் என்பதால் தமிழ் நிலைத்தது
பின் ஆங்கிலேயன் ஆட்சியிலும் இந்துமதம் ஒன்றே தமிழை நிறுத்தியது, தமிழை கொன்றால் இந்துமதம் அழியும் என்றுதான் தமிழின் இரட்டை மொழியான சமஸ்கிருதத்தை துண்டித்து தமிழை இந்தியாவில் இருந்து துண்டித்து தமிழை வெட்டி இந்துமதத்தை அழிக்கும் திட்டம் மிஷனரிகளால் உருவானது
சமஸ்கிருதம் இந்தி என எல்லாவற்றையும் விரட்டிவிட்டு அங்கு ஆங்கிலத்தை நிறுத்தி பின் தமிழை அப்படியே கொல்லும் மிக நுணுக்கமான திட்டம் அது
அதையும் தாண்டி தமிழ் வாழ இந்துமதம் ஒன்றே காரணம்
இன்றும் என்றும் பழந்தமிழர் பாடலெல்லாம் தேவாரமும் திருவாசகமும் ஆழ்வார் அடியார் பாடல்களாக தமிழில்தான் இருக்கும், தமிழரின் வாழ்வும் தெய்வங்களும் தமிழில்தான் இருக்கும், இந்துமதம் வாழ வாழ அதன் கோவில்களும் விழாக்களும் பண்டிகைகளும் வாழ வாழ தமிழ் தானாக வாழும்
அதுதான் தமிழ் வளர்க்கும் வழி, மூன்று தமிழ்சங்கங்களும் இந்துமதம் மூலமாக தமிழ் வளர்த்தன அன்றி வெறுமையாக “டமிலனங்கு” என வளர்க்கவில்லை அப்படி வளர்த்தால் தமிழ் நிலைத்திருக்காது
தமிழின் வேரும் பலமும் இந்துமதத்தில்தான் உள்ளது, அதை மீட்டெடுத்து நிறுத்தினால் தமிழ் தானாக வளரும் நிலைக்கும், தமிழ் வாழவும் வளரவும் ஒரே வழி பூரண இந்துவாக இருப்பது, இந்துவாக நிலைப்பதில்தான் இருக்கின்றது
முதலில் அது சமஸ்க்ருத எழுத்தே கிடையாது என்ற அடிப்படை ஞானம் இல்லாத வரை என்ன என்று சொல்வது?
சமஸ்க்ருத சொற்களை உச்சரித்து எழுத வசதியாகத் தமிழில் இல்லாத சில உச்சரிப்புகளை மட்டும் தமிழில் எழுதி யறிந்து கொள்ள வசதியாக, கிரந்த லிபியில் இருந்து எடுத்தாளப் பட்டத் தமிழ் எழுத்து வடிவமே.
மேற்படி வடிவம் தமிழின் வசதிக்காக தமிழர் தோற்றுவித்த லிபியே இந்த மணிப்ரவாள மொழி. அன்றி இதற்கு வடமொழிக்கும் தொடர்பில்லை. மேற்படி மொழியே மலையாளத்தவர்கள் கூடக் கையாள்கின்றனர்.
தமிழைச் சரியாக அறியாமல் பொது மேடைகளில் நினைத்த படி எழுதுவதை என்ன வென்று சொல்வது?