தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்?
தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்?
தொடக்ககால திமுக ஆட்சியில் தமிழுக்கு எத்தனையோ அங்கீகாரம் கிடைத்தன, பல இடங்களில் தமிழ் வந்தது, சபைகளில் எல்லாம் தமிழ் ஏறியது
அப்பொழுதுதான் தமிழ்தாய் வாழ்த்துபாடல் உருவாக்க வேண்டும், மாநில விழாக்களில் அதனை பாடவேண்டும் என்ற முடிவும் எடுக்கபட்டது
அப்படி பல பாடல்களை புரட்டியபொழுது, விவாதித்த பொழுதுதான் இப்பாடல் பொருத்தமானது
கலைஞரிடம் ஒரு குணம் உண்டு, முக்கியமான முடிவுகளை அவர் தனியே எடுப்பதில்லை. பூட்டிய அறைக்குள் முக்கிய முடிவு எடுப்பவர் அவர் அல்ல
எல்லா தமிழறிஞர்களிடமும் விவாதித்தார், எல்லோரும் ஒருசேர சொன்னபின்புதான் இப்பாடல் தேர்தெடுக்கபட்டது
சுந்தரனார் எழுதிய மனோன்மணியத்தில் அதனை திராவிட நாட்டு பாடலாக எழுதியிருந்தார், ஆரியம் போல் அழிந்துவிடாத தமிழே என்றேல்லாம், கன்னடம், மலையாளம் என்றெல்லாம் வரிகள் உண்டு
ஆனால் தமிழ்த்தாய்க்காய் பாடும்பொழுது அவை எல்லாம் ஏன் என எடுத்துவிட்டார்கள்
நிச்சயமாக பாரதியின் பாடலை விட தமிழகத்திற்கு ஒரு பாடல் கிடைத்துவிட முடியாது, ஆனால் அவர் தேசியவாதி எல்லா பாடலிலும் அவரின் தமிழுணர்வோடு தேசிய உணர்வும் கலந்திருக்கும்
பாரதிபாடலை வைத்திருக்கலாம் தான், ஆனால் செய்யவில்லை
அன்று ரபிந்திரநாத் தாகூரின் பாடலை சுருக்கி தேசிய கீதம் ஆக்கிய வழியிலே, சுந்தரனாரின் பாடலையும் சுருக்கி தமிழ்தாய் வாழ்த்தாக்கி விட்டார்கள்
இதில் பாரதிதாசனுக்கு உவப்பில்லை, அவர் உடனே பாண்டிச்சேரிக்க்கு தமிழ்பாடல் எழுத சென்றுவிட்டார், இன்றுவரை புதுவையில் தமிழ்தாய் வாழ்த்து பாரதிதாசன் எழுதிய வேறுபாடலே
மற்றபடி அண்ணா இல்லாத காலத்தில், தமிழின் பெருமையினை சொல்லவேண்டும், அதுவும் மிக அழகாக சொல்லபடவேண்டும் என்றுதான் கலைஞர் அமைத்த அறிஞர் குழு இதனை தேர்ந்தெடுத்தது, சில வரிகளை நறுக்கியது
கலைஞர் நினைத்திருந்தால் அவரே ஒரு பாடல் எழுதியிருக்கலாம் இல்லை கண்ணதாசன் போன்றோரிடம் கேட்டிருக்கலாம் , அவர் அப்படிசெய்யவில்லை தமிழறிஞர்கள் நிரம்பிய குழுவிடமே அதனை ஒப்படைத்திருந்தார்
அவர்கள் முடிவில்தான் இவ்வரிகள் பாடலாயின
சரி, இன்று அவரை ஏன் சீண்டவேண்டும்? அவராவது தமிழுக்கு ஒரு பாடல் வேண்டும் என விரும்பினார், அந்த ராமசந்திரனின் கரகாட்ட கோஷ்டிக்கு அப்படி ஏதும் திட்டம் இருந்ததா?
“இன்பமே உன் பெயர் பெண்மையோ, இதயக்கனி” , “பொன்மலர் செல்வியோ, நான் தேடிய தலைவியோ”, “நாளை நமதே, இந்த நாளும் நமதே”,”நேரம் நல்ல நேரம்””கன்னத்தில் என்னடி காயம்” போன்ற பாடல்களை தமிழ்நாட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்களாக ஆக்கி தொலைத்திருப்பார்கள்
“பச்சை கிளி முத்துசரம்..” பாடல்தான் தமிழ்தாய் வாழ்த்தாகியிருக்கும், ஜெயா அதனை மாற்றி “பருவம் எனது பாடல்” எனும் பாடலை வாழ்த்துபாடலாக்கியிருப்பார்
கலைஞர் அதிலிருந்து தமிழகத்தை காத்தார், அதற்கு நன்றி சொல்லிவிட்டு பிரச்சினையினை விடுங்கள்