தமிழ்தேசியம், தமிழராட்சி, தமிழர் உரிமை மீட்டல்

தமிழ்தேசியம், தமிழராட்சி, தமிழர் உரிமை மீட்டல் தொடர்பாக ஒருவர் விளக்க வந்தார், விளக்கிவிட்டு ஓடிவிட்டார், நாமும் அவரும் பேசியது இப்படித்தான்.

“உனக்கு தமிழ்தேசியம் புரியவில்லை, வா விளக்குகின்றேன்

சொல்லுங்கள்

தமிழனை தமிழன் ஆள்வதே தமிழ்தேசியம்

பழனிச்சாமி என்ன ஓரிசாக்காரனா?

அவர் அடிமை, நாம் சொல்வது வீரதமிழன்

அப்படியா எப்படி ஆள்வீர்கள்?

எல்லாவற்றையும் மாற்றுவோம், எல்லா உரிமைகளையும் மீட்போம்

மாற்றுவது என்றால் எப்படி?

கல்வி சாலை திறப்போம், கல்வி கொடுப்போம்

இப்போது கல்விசாலைகளுக்கு என்ன குறைவு?

ம்ம். நாங்கள் விவசாயத்தை பெருக்குவோம்

எப்படி?

குளங்களை தூர்வாறுவோம், விவசாயிக்கு மானியம் கொடுப்போம், ஏற்றுமதிக்கு வழி செய்வோம்

குளங்கள் இப்பொழுதும் தூர்வாரபடுகின்றன, விவசாயிக்கு இலவச மின்சாரம் வரை கிடைக்கின்றது, விளைச்சல் அதிகமானால் ஏற்றுமதி தானாக நடக்கும்

உனக்கு தெரியாது, அமெரிக்காவில் 1 கிலோ கருப்பட்டி ஆயிரம் ரூபாய், அதனால் பனை வளர்த்து கருப்பட்டி செய்வோம்

எல்லோரும் கருபட்டி செய்தால் கிலோ அமெரிக்காவில் 100 ரூபாய்க்கு வராதா?

அப்படியா, அப்படியானால் தக்காளி விளைய வைத்து ஜாம் செய்வோம்

அட பக்கி, அதேதான் தக்காளி விலையும் சரியாதா?

விவசாயம், ஆடு, மாடு அரசு வேலை

உள்ள வேலைக்கே அரசு ஒழுங்காக சம்பளம் , ஓய்வூதியம் கொடுக்கவில்லை என ஆயிரம் சிக்கல், போராட்டம் கொடி பிடிப்பு, இதில் அவர்களும் எப்படி?

ம்ம்.. அது.. எப்படியோ செய்வோம்

அடுத்து

கள் விற்போம், டாஸ்மாக்கை மூடுவோம்

அதாவது இப்போது போல் எப்பொழுதும் அவனை போதையிலே வைத்திருப்பீர்களா? அதற்கு நீங்கள் எதற்கு?

ம்ம். அதைவிடு மகா முக்கியமாக மொழி காப்போம்

எப்படி காப்பீர்கள்?

எங்கும் தமிழ் , எதிலும் தமிழ், இந்தியினை விட மாட்டோம்.

இங்கு இப்பொழுது மலையாளமா பேசுகின்றார்கள்?

இல்லை தாய்மொழி கல்வி

அதனைத்தான் நவோதயா பள்ளியே செய்யுமே, நீங்கள் எதற்கு?

ம்ம் நாங்கள் மாநில உரிமையினை மீட்போம், காவேரி, கச்ச தீவினை மீட்போம்

காவேரி பற்றி முழுமையாக தெரியுமா?

கன்னடத்தில் உற்பத்தியாகி தஞ்சாவூருக்கு வரும், அவன் தண்ணீர் விடமாட்டேன் என்கின்றான், அதுதான் பிரச்சினை

காவேரியின் துணையாறு தெரியுமா?

அப்படி உண்டா?

3 கன்னட ஆறுகள், 3 தமிழக ஆறுகள் எல்லாம் இணைந்ததுதான் காவேரி, அதில் பவானி அமராவதி நொய்யலில் அணைகட்டி தடுத்திருப்பது தமிழகம்

அப்படியா?

அந்த அணையினை இடிப்பாயா?

ம்ம் தமிழன் ஆறு தமிழனுக்கு, அனால் கன்னட துணையாற்ரிலும் பங்கு உண்டு, அது முப்பாட்டன் சொத்து

சரி எப்படி மீட்பீர்கள்?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியோடு போராடுவோம், தமிழர் பிரதிநிதியாய் நிற்போம்

கச்சதீவினை எப்படி மீட்பீர்கள்?

அப்படியே போராடுவோம்

அதாவது நாங்கள் உங்களை முதல்வராக வைத்தால் நீங்கள் டெல்லியில் போராடுவீர்கள்

ஆம் கண்டிப்பாக‌

நாங்கள் ஏன் உங்கள் மூலமாக போராடவேண்டும், நேரடியாக டெல்லியினையே ஆதரித்தால் என்ன?

அய்யோ அவன் கொடியவன் தமிழக எதிரி, அவன் நியாயம் தரமாட்டான்

அப்படியா, சரி நீங்கள் முதல்வரானால் யாரிடம் நியாயம் கேட்பீர்கள்?

அவனிடம்தான்

அவன் தான் தரமாட்டானே?

நாங்கள் விடாமல் கேட்போம், ஆட்சி இழக்கவும் தயார்

நீங்கள் இழப்பதற்கு எதற்கு ஆட்சி?

எதிர்ப்பை காட்ட‌

ஆட்சியினை இழந்தால் எப்படி போராடுவீர்கள்?

மறுபடி தேர்தலில் வென்று போராடடுவோம்

எப்படி மறுபடியும் ராஜினாமா செய்வீர்களா?

ஆம் கண்டிப்பாக நியாயம் கிடைக்காவிட்டால் ஆட்சியினை எறிவோம்

ஆக நீங்கள் ராஜினாமா செய்து விளையாட உங்களை ஆட்சியில் அமர்த்தவேண்டும்?

ஆம் நீ தமிழன் என்றால் எங்களை அமர்த்தியே தீரவேண்டும்

அமர்த்திவிட்டால் நீ என்ன செய்வாய்?

உன் பிரதிநியாக அவனிடம் பேசுவேன்

நான் அவனிடம் நேரடியாகவே பேசி கொள்கின்றேன் நீ கிளம்பு

அவன் நியாயம் தரமாட்டான், கொடியவன் அவன்

அப்படியா வா தனிநாடு கேட்போம்

சே..சே அதெல்லாம் எங்கள் நோக்கமில்லை. எங்களுக்கு தேவை தனிநாடல்ல தமிழர் நல்வாழ்வு

ஓஓ.. தமிழரை எப்படி வாழவைப்பாய்

அதான் சொன்னேனே.. உன் சார்பாக நாங்கள் பேசுவோம்

அதை நாங்களே பேசிகொள்கின்றோம், நீ கிளம்பு

நீ தமிழின துரோகி

ஓடிரு கல் வருது ..”