தமிழ்நாட்டை தனியாகப் பிரிக்கும் அந்தநாள் வரத்தான்போகிறது : ஆ.ராசா ஆவேசம்
தமிழ்நாட்டை தனியாகப் பிரிக்கும் அந்தநாள் வரத்தான்போகிறது : ஆ.ராசா ஆவேசம்
ஏம்பா ராசா, நீங்கள் எல்லாம் அமைச்சராக இருந்தபொழுது காவேரிக்காக என்ன செய்தீர்கள்?
முரசொலிமாறன் முதல் நீர் வரை பெரும் எண்ணிக்கையில் டெல்லியில் அதிகாரத்தோடு அமர்ந்தபொழுது என்ன கிழித்தீர்கள்?
அந்த 15 வருடங்களில் காவேரியினை மீட்க என்ன செய்தீர்கள்? அதனை விட பொற்காலம் எங்கே வாய்க்கும்?
ஏன் உங்கள் தலைவர் நீர்பாசன துறை கேட்கவில்லை, அட அவர்தான் கேட்கவில்லை நீங்களுமா கேட்கவில்லை?
தொலைதொடர்பு, உரம் , கப்பல் என வசதியான துறைகளில் அமர்ந்த உங்களில் யாராவது நீர்மேலான்மை துறைக்கு வந்தீர்களா?
காவேரி சிக்கல் என்ன 2006க்கு பின்னாலா வந்தது?
உங்களுக்கும், கனிமொழிக்கும் ஜாமீனுக்கு ராம்ஜெத்மலானி வரை வாதாடினார், அந்த வேகத்தில் ஒரு துளியேனும் காவேரி வழக்கில் காட்டினீர்களா?
காவேரி வழக்கில் ஒரு உருப்படியான வழக்கறிஞரை அமர்த்தினீர்களா? ஏன் செய்யவில்லை
கனிமொழிக்கு மட்டும் ராம்ஜெத்மலானி காவேரிக்கு தேங்காய் மூடி வக்கீலா?
ஜெயலலிதா வழக்கினை பெங்களூரில் எப்படி எல்லாம் வேகமாக நடத்தினார் உங்கள் தலைவர், அதே வேகத்தை காவேரி மீட்பில் உங்கள் கட்சி காட்டியதா?
பாதி காவேரி விஷயத்தில் திமுக பின்வாங்கியதே வழக்கு கன்னடத்தில் நடந்ததால்தானே
ஆக உங்கள் அரசியல் எதிரிக்காக காவேரியினை கைவிட்டது யார் ராசா?
பின் ஏன் இந்த நாடகம்?
இதில் இப்பொழுது தனிநாடாம், ஆவேசமாம்
இதோ தமிழகம் எங்கும் காவேரிக்கு முழு அடைப்பு திமுக நடத்துகின்றது, ஆனால் சன் குழுமத்தின் கன்ன்ட உதயா சேனல் அங்கே ஒழுங்காக டிவி நடத்துகின்றது
எப்படிபட்ட மானக்கேடு இது, சொல்லுங்கள் ஐயா
எல்லோரும் கத்துகின்றார்கள் என்று நீங்களுமா கத்த வருகின்றீர்கள் ராசா?
இப்படி சொல்லிகொண்டிருந்தால் திமுக காணாமலே போகும் நாள்தான் வரும் மிஸ்டர் ராசா
நீங்கள் எல்லாம் மத்திய அமைச்சராக இருந்தபொழுது இது இந்தியா என மகிழ்வோடு சொன்னீர்கள்,
உங்களுக்கு மாபெரும் பதவி கொடுத்தால் ஏற்பீர்கள் இல்லை என்றால் தனிநாடு என கிளம்புவீர்களா?
மத்திய அமைச்சராக உம்மை அமர வைத்த தேசம் இது, இந்நாட்டு நீதிமன்றம் நீர் குற்றவாளி இல்லை என்ற நியாயத்தையும் கொடுத்தது
எல்லா சலுகை, உரிமை எல்லாம் அனுபவித்துவிட்டு கத்துகின்றீரா? இது நன்றிகெட்ட தனம் இல்லையா?
கொஞ்சமேனும் வெட்கமில்லை, மானமில்லை?
தமிழ்நாடு தனியாக பிரியும் ஆ.ராசா ஆவேசம்
ஏன் தனிதமிழ்நாட்டில் தொலைதொடர்பு அமைச்சராக அமர்ந்து 5ஜி ஊழலில் சிக்கவா?