தமிழ்பெண்கள் அழகா… மலையாள பெண்கள் அழகா
“தமிழ்பெண்கள் அழகா… மலையாள பெண்கள் அழகா” என விஜய்டிவியில் நடக்க இருந்த நீயா நானா நிகழ்ச்சி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தபட்டது
இது என்ன கொடுமை? அந்த சுந்தர தெலுங்கு பெண்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை ஏன் சேர்க்கவில்லை
ஜெயபிரதா, சில்க், அனுஷ்கா, பிந்து என எத்தனை பெண்கள் அங்கிருந்து வந்தார்கள்
ஏன் அந்த டிடி கூட தெலுங்குபெண் என்கின்றார்கள், ஒருவேளை அது அழகு அல்ல என விஜய் டிவிக்கே தெரிந்திருக்கலாம்
தெலுங்கு பெண்கள்தான் இல்லை, இந்த சிம்ரன், டாப்ஸி என அழகு புதையல்களை கொடுத்த பஞ்சாப் பெண்களும் பட்டியலில் இல்லை எனில் இக்கொடுமையினை எப்படி சகிப்போம்?
பொதுவாக விஜய்டிவி நடத்தும் எந்த குப்பை நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில்லை, ஆனால் எதிர்ப்பதுமில்லை அவர்கள் டிவி, அவர்கள் நிகழ்ச்சி
ஆனால் குஷ்பூ எனும் பேரழகி இருக்கும் சென்னையில் இருந்து கொண்டு தமிழ்பெண்கள் அழகா? கேரள பெண்கள் அழகா என கேட்க இவர்களுக்கு என்ன துணிச்சல்
“குஷ்பூ தவிர தமிழ்பெண்கள் அழகா? , மலையாள பெண் அழகா? ” என்றுதான் தலைப்பு இருந்திருக்க வேண்டும்
எப்படியோ விஜய்டிவி நிகழ்ச்சியினை நிறுத்திவிட்டதால் சங்கம் உருவிய வாளை உறையில் போட்டு அமைதியாகின்றது
இருந்தாலும் இப்படி ஒரு அறிவிப்பினை செய்த குற்றத்திற்கு தண்டனையாக அந்த கோபிநாத்தின் கோட்டை கழற்றி எரிக்கும் போராட்டம் நடத்த சங்கம் தயாராகின்றது
விரைவில் கோபிநாத் கோட் எரிக்கபட்டு எச்சரிக்கை போராட்டம் நடக்கும்