தமிழ் தேசியமும் திமுகவும் வேறல்ல

திராவிட அரசியல் ஒன்றும் தென்னிந்தியாவிற்கான அரசியலாய் இங்கு செய்யபடவில்லை, இந்தி எதிர்ப்பு போராட்டம் , தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது, இன்னும் உலக தமிழ்மாநாடு நடத்தியது, தமிழ் அடையாளங்களை உருவாக்கியது என தமிழருக்கான ஆட்சியினையே அது கொடுத்தது

ஈழ விஷயத்தில் தமிழர் என்பதற்காகவே அது புலிகளை எல்லாம் முன்பு ஆதரித்தது, எல்லா போராளிகளுக்கும் தமிழர் என்பதாலே அடைக்கலம் கொடுத்தது.

ராஜிவ் கொலையால் எழுந்த பழிகளையும், வலிகளையும் தமிழ் தேசியத்திற்காய் திமுகதான் தாங்கியது

திராவிட அரசியலும் , தமிழ் தேசியமும் வேறல்ல‌

இங்கு இரண்டே பிரிவுதான் தமிழர் உரிமை காக்கும் அரசியல் அல்லது தமிழர் உணர்வு நீர்த்து தேசிய நீரோட்டத்தில் இணையும் அரசியல்

திமுக அரசியல் தோல்வி என சொல்வீர்களாயின் அது தமிழ்தேசியத்தின் தோல்வியே

திமுக அரசியல் வெற்றி என்பீராயின் தமிழ்தேசியத்தின் வெற்றியே, பின் எதற்கு இந்த தமிழ்தேசிய இம்சைவாதிகள் சத்தம்?

அதனால் உறுதியாக சொல்லலாம், தமிழ் தேசியமும் திமுகவும் வேறல்ல.

மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டபின் அன்றே தமிழ்தேசியம் பேச தொடங்கியது திமுக, கிட்டதட்ட 60 ஆண்டுகாலம் அதனையே பேசியும், உழைத்தும், போராடியும், பல இடங்களில் வெற்றியும் பெற்று தமிழ் தேசியத்தை ஒருங்கிணைந்த இந்தியாவில் நிறுத்தி வருவதும் அதுவே

இது புரியாமல் திமுக வேறு, நாங்களே தமிழ்தேசியவாதி என சிலர் புலம்பிகொண்டிருப்பாயின் அவனெல்லாம் கீழ்பாக்கத்திலும் அவனுக்கு கைதட்டுபவன் ஏர்வாடியிலும் விலங்கு போட்டு வைக்கபடவேண்டியவன்