தரமா? எங்கே தமிழக காங்கிரசிலா?

Image may contain: 3 people


ஒரு வழியாக சுலோகம் ஒன்று சங்கத்தால் உறுதி செய்யபட்டிருக்கின்றது

இதுதான் இப்பொழுது சங்கத்து கோஷம், இதைத்தான் சங்கத்தார் உரக்க சொல்லவேண்டும் என முடிவு செய்யபட்டிருக்கின்றது

இதனை விட நல்ல சுலோகம் வந்தால் பின்பு பரிசீலிக்கபடும், தற்போது இதுதான் கோஷம்,

“சோற்றுக்கு உப்பு
தமிழத்திற்கு குஷ்பு”


தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவிற்கு தகுதி இல்லை, அவர் தலைவரானால் தமிழக காங்கிரஸின் தரம் குறையும், கட்சி அவமானபடும் என்றேல்லாம் சிலர் சொல்கின்றார்கள்

தரமா? எங்கே தமிழக காங்கிரசிலா?

அவமானமா? எது? அதிமுக, பாஜக என சுற்றி வந்த திருநாவுக்கரசரை தலைவராக்கியதை விடவா பெரும் அவமானம் காங்கிரசுக்கு வந்துவிட போகின்றது

தேய்பிறையாகி கிட்டதட்ட மறையும் நிலையில் இருக்கும் காங்கிரசினை பவுர்ணமி ஆக்கவேண்டுமென்றால் குஷ்பூ தலைவராகட்டும்

இதுதான் யதார்த்தம், சினிமாக்காரர்களால் சரிக்கபட்ட தமிழக காங்கிரஸ் சினிமா நடிகையால் பொற்காலத்தை அடையட்டும்.

இல்லை கோயம்பேடு கோவிந்தசாமி, அமிந்தகரை அய்யாசாமி போன்றவர்கள் தலைவர் என அறிவித்தால் காங்கிரசை காப்பாற்ற செத்துபோன காமராஜர் வந்தாலும் முடியாது

(“பெற்றால் உன்னை போல மகளை பெற்றிருக்க வேண்டுமம்மா.. எனக்கென்று ஒன்று வந்து பிறந்திருக்கின்றதே….” என “காங்கிரசின் தங்க மகளை” நோக்கும் குமரி அனந்தன்)


குஷ்பூ தமிழக காங்கிரஸ் தலைவராக வேண்டி பத்துமலை முருகன் கோவிலில் மண்சோறு உண்ண சங்கம் முடிவெடுத்திருக்கின்றது

வடபழனி கோவிலில் அங்க பிரதட்சனம் செய்ய Sadhu Sadhath தயார்

திருச்சி பக்கம் தீ மிதிக்க Periya Samy தயாராகின்றார்.

இன்னும் ஏராளமான ரசிகர்கள் கடும் வேண்டுதலுக்கு தயாராகின்றார்கள், அதில் சிலர் நாக்கு, விரல், கை கால் வெட்டுதல் அளவிற்கு கடும் தீவிரம்

அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி டிரம்பிடமும் ஐ.நா பொதுசெயலாளரிடமும் மனுகொடுக்கும் வேலையில் தீவிரமாக இருக்கின்றார் Venkatesh Mothilal

காங்கிரஸ் தலமை இதற்கு செவிசாய்க்காவிட்டால் வேண்டுதல்கள் இன்னும் படு பயங்கரமாக இருக்கும் என சொல்லிகொள்கின்றோம்.

சங்கம் ஒரு அளவுதான் பொறுமை காக்க முடியும்

ஒரு கட்டத்திற்கு மேல் பூக்குழியில் இறக்கபடுவது ரசிகர்களாக இருக்காது.