தலைவலி தரும் தொகுதிகளா?
தனக்கு தலைவலி தரும் தொகுதிகளை திமுக தரப்பு காங்கிரசுக்கு தள்ளிவிடும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகின்றது, உத்தேச தொகுதி பட்டியலும் அப்படித்தான் வருகின்றன
நெல்லை, மதுரை போன்றவற்றை திமுக தவிர்க்க நினைக்கின்றது, அவற்றை காங்கிரசுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கின்றது
கன்னியாகுமரி தொகுதி நிச்சயம் காங்கிரசுக்கு என்கின்றார்கள், அது உண்மையானால் பொன்னாரை வீழ்த்த தலைவி குஷ்புவினை நிறுத்தலாம்
என்னதான் பொன்னார் வலுவாக இருந்தாலும் காங்கிரசுக்கான வோட்டு வங்கி அத்தொகுதியில் உண்டு, வலுவான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் அத்தொகுதி மறுபடியும் காங்கிரஸ் வசமாகும்
குஷ்பு நிறுத்தபட்டால் நிச்சயம் காங்கிரஸ் தன் பொற்காலத்தை அங்கு மீட்டெடுக்கும்
இப்பக்கம் ராமதாஸுக்கு கோபம் வரும் விதமாக பாமகவின் கோட்டையான ஒரு சில தொகுதிகளை விஜயகாந்திற்கு அதிமுக கொடுக்கலாம் என்கின்றார்கள்
தைலாபுரம் விருந்தில் ஏன் எலிமருந்து கலக்கவில்லை என ராமதாஸ் வருத்தத்தில் இருக்கலாம்