தலைவிக்காக ஓர் திருவெண்பா…..

Image may contain: 1 person, close-up

“நீலமா மலரை கண்டு 
நிலையில்லா தலையும் வண்டு
நிற்பதும் பறப்பதும் போய்
நின்விழி மயக்கம் கொண்டு
கோலமார் நெடுமால் வண்ண‌
குளிர்முகம் தன்னை கண்டு
கொஞ்சிடும், பிறகு நாணும்
கோதையார் குணத்தில் நின்று

ஏலமார் குழலி அந்த‌
இருவிழி சிறிது நேரம்
சங்கம் வசம் திரும்புமாயின்
ஏங்கிய காலம் சென்று
தமிழக அமைச்சர்காள் போல்
அழிவில்லா ஆனந்தம் கொண்டு
அடியோர் மகிழ்வு காண்போம்
அருள்செய்வாய் கமல தாயே”