தலைவியின் கால் தூசுக்கு வரமுடியாதவள் கிளியோபாட்ரா

Image may contain: 1 person, close-upஅலக்ஸாண்டர் எகிப்தை கைபற்றி தன் சாம்ராஜ்யத்தோடு இணைத்து பெரும் பேரரசை உருவாக்கிவிட்டு , தான் மறையும் பொழுது தன் ராஜ்யத்தை தன் தளபதிகளுக்கு பங்கிட்டு கொடுத்தான்

எகிப்து அப்படித்தான் டாலமி எனும் கிரேக்க வம்சத்திடம் வந்தது, அந்த வம்சத்தவள்தான் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ரா என்பது பொதுபெயர், நிறைய கிளியொபாட்ரா இருந்தாலும் வரலாற்றை மாற்றியவள் அந்த ஒரு கிளியொபாட்ராதான்

Image may contain: 1 person, close-upஅவள் அழகி , நிர்வாகி, அரசி, பன்மொழிகலந்த வித்தைக்காரி , தன் அழகை பராமரிக்கும் நுட்பம் தெரிந்த ஒப்பனை அழகி , மிகபெரும் ராணுவ வித்தகி அதற்கு மேல் ஆண்களை மயக்கி வேலை வாங்க தெரிந்த சாகச வித்தைகாரி

ஆடை , அணிகலன் , ஒப்பனை எல்லாம் பெண்களுக்கு எப்படி அழகு சேர்க்கும் என்பதை முதன் முதலில் உலகிற்கு சொனவள் அவள் நிறம், உருவம், உடல்வாகு என ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருத்தமான அணிகலனும் ஆடைகளும் உண்டு

அப்படி அவளின் ஆடையும், அணிகலனும் அவளால் அவள் அழகுக்கு அழகு சேர்க்க அப்படி மிக கவனமாக உருவாக்கபட்டது என்கின்றது வரலாறு

டாலமி எனும் சகோதரனை மணந்து அக்கால எகிப்து வழக்கபடி அரசியாக அமர்ந்திருந்தாள், எகிப்து மாவீரன் ஜூலியஸ் சீசர் எகிபதை கைபற்ற அவன் மனதை கைபற்றி எகிப்து ராணியாக அமர்ந்தாள் கிளியோபாட்ரா

கிளியோபாட்ராவிடம் அவன் சொக்கி கிடந்தான், அவள் கண்ணால் சொல்வதை தன் வாளால் நிறைவேற்றும் அளவிற்கு மயங்கி கிடந்தான் சீசர்

வெறும் அழகி என்றால் சீசர் அவளை ஆட்டிவைத்திருப்பான், அவளோ அழகுடன் அறிவும் கலந்தவள் என்பதால் சீசரை கைக்குள் வைத்திருந்தாள்

சீசரோ ரோமின் மக்களாட்சிக்கு உட்பட்ட தளபதி, ஆனால் கிளியோபாட்ராவின் மயக்கத்தான் தன்னை மன்னன் என சொல்லும் அளவு மாறிபோயிருந்தான்

அவளோ மிக சாமார்த்தியமாக அவனிடம் தனக்கு பிறக்கும் அவன் குழந்தையினை மன்னராக்க சத்தியம் செய்திருந்தாள்

விடுவார்களா ரோமர்கள்?

ரோம் அவர்கள் கனவு, அவர்கள் மூச்சு, அவர்கள் வாழ்வு. ரோமின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்த்த ஜூலியஸ் சீசரை, கிளியோபாட்ராவினை ரோமின் ராணியாக்க முயன்றதால் கடுமையாக வெறுத்தார்கள்

ஒருகட்டத்தில் நண்பர்களே கொன்றனர் , அத்தோடு விடவிலை எகிப்தின் நச்சுபாம்பான கிளியோபாட்ராவினை அழிக்க மார்க் அன்டனி எனும் மாபெரும் வீரனை அனுப்பினார்கள்

ஆனால் சீசர் வழியிலே வீரவேங்கை ஆண்டனியும் வீழ்ந்தான், வயதான ஜூலியஸையே வளைக்க தெரிந்த அவளுக்கு ஆண்டனியினை வளைப்பது பெரிய காரியமில்லை

அவளிடம் அடிமையானான் ஆண்டனி, தன்னை கொல்ல வந்த அம்பை ரோமை நோக்கி ஏவினாள் சாகசகாரி கிளியோபாட்ரா

ஒருவகையில் அவளின் ஆட்டம் அட்டகாசமானது, எந்த ரோமை படை எகிப்தை அபகரிக்க வந்ததோ, அதே ரோமை பேரரசுக்கு எகிப்துக்காரி ராணியாக அமர துடித்த அரசியல் ஆட்டம்

ரோமர்களை தன் பெயரால் அவர்களுக்குள்ளே அடித்துகொள்ள வைத்த மிக நுட்பமான குள்ளநரி தந்திரம். ஒரு வகையான சாணக்கியதனம்

ஆனால் ஆக்டேவியனின் வீரத்தால் ஆண்டனி வீழ்த்தப்ட்டான், இனி தன்னை ரோமையர் விடமாட்டார் என அஞ்சிய கிளியோபாட்ரா பூநாகத்தை கடிக்கவிட்டு இறந்தாள்

இல்லை வைரத்தை விழுங்கி செத்தாள் என்கின்றது இன்னொரு செய்தி

எப்படியோ 2000 வருடத்திற்கு முன்பே மிகபெரும் தந்திரத்துடனும், தன் அழகையும் அறிவையும் மூலதனமாக்கி பெரும் ரோமை ராஜ்யத்தின் ராணியாக முடிசூட முயன்று, பாதி வென்று வரலாற்றில் இடம்பெற்றவள் கிளியோபாட்ரா

அவளின் நினைவு நாள் இன்று , இன்றுதான் அவள் தற்கொலை செய்ததாக வரலாறு சொல்கின்றது

அவளின் மூக்கு மட்டும் சிறியதாக இருந்தால் அவளுக்காக உலகம் அழிந்திருக்கும் என்கின்றது அவள்காலத்து கவிஞன் வரிகள்

ஆனால் அதற்காக “வாழும் கிளியோபாட்ரா” குஷ்புவினை விட அவள் ஒன்றும் அழகு என சொல்லிவிட முடியாது.

அந்த கவிஞனுக்கு தெரிந்தது அவ்வளவுதான், ஆனால் தலைவி அன்றே இருந்திருந்தால் முதலாம் உலகப்போர் என்பது அப்பொழுதே தொடங்கி இருக்கும்

குஷ்பு இல்லாத காலத்தில் பிறந்துவிட்டதால் அவள் அழகி என்று உலகம் குறித்துகொண்டது, இனி அவள் பிறந்து வந்தாலும் உலகம் கண்டுகொள்ளாது

காரணம் குஷ்புவினை உலகம் கண்டாயிற்று

பொங்கும் காவேரியினை கண்டவர்களுக்கு, கானகத்து சிற்றோடை எப்படி ரசிக்கும்?

(முதல் படம் கிளியொபாட்ரா எப்படி இருப்பார் என்பதை இப்பொழுது கணிணியில் வரைந்த உருவம்

இரண்டாம் படம் தலைவி குஷ்பு, இருவரில் யார் அழகு என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

தலைவியின் கால் தூசுக்கு வரமுடியாதவள் கிளியோபாட்ரா)