தலைவியின் சோகம் …. வருத்ததில் ரசிகர்கள்…….
தலைவியின் ரசிக கண்மணிகள் எல்லாம் மிகுந்த சோகமும் துயரமும் வருத்தமும் தரும் விஷயத்தை தலைவி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்
உலக பத்திரிகைகள் எல்லாம் இதனை பெரும் செய்தியினை துயரமாக பதிந்து வருகின்றன
தலைவியின் கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் உடல்நலகுறைவால் அவதிபடுகின்றார்களாம், இது தலைவியின் மிக பெரும் துயரத்திற்கு காரணமாயிற்று
இத்தகவலை கேட்டவுடன் சங்க உறுப்பினர்கள் மிகுந்த துயர் அடைந்து விட்டார்கள், கண்ணீர் கோலம் பூண்டுவிட்டார்கள். உலகெமெல்லாம் தலைவியின் தொண்டர்கள் விரதம், பிரார்த்தனை , நேர்ச்சை கடன் என அதி தீவிர பக்தியில் இறங்கிவிட்டார்கள்
இது போக தலைவி வீட்டில் வாஸ்து குறைகள் உண்டா என ஆராய ஒரு குழு இறங்கியுள்ளது.
தலைவிக்கு யாரும் சூனியம் வைத்தார்களா என கண்டறியும் காரியத்திலும் ஒரு குழு இறங்கிற்று
இது போக தலைவி விரும்பினால் முண்ணணி மருத்துவர்களை திரட்டி , மிரட்டி அனுப்பிவைக்கமும் சங்கம் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது.
அரசியல், சினிமா, தயாரிப்பாளர் என பல வெற்றிகளை பெற்றுவரும் தலைவிக்கு யாரோ பொல்லாதாரின் கண்திருஷ்டியால் இப்படி நடந்திருக்கலாம் என்ற கோணமும் பரிசீலிக்கபடுவதால் அதற்கான சிறப்பு பூஜைகளும் நடத்தபட இருக்கின்றன
தலைவி யாவரும் நலம் என அறிக்கும் நாள்வரை சங்கம் இந்த சிறப்பு பூஜை, விரதம், பரிகாரம் என தலைவிக்காக மிக சிரமமான காரியங்களை எல்லாம் தலைமேல் ஏற்றிருக்கின்றது
அவர் வீடும், வீட்டின் உறுப்பினர்களும் நலம் பெற்று தலைவி மகிழ்வு கொள்ளும் நாளே இனி சங்கத்து பொன்னாள்.
அதுவரை சங்கத்திற்கு கடும் விரதகாலம், எவ்வித விஷேஷமோ , பண்டிகையிலோ, கேளிக்கையிலோ சங்கம் இறங்காது.