தலைவியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது
தலைவி சமீபகாலமாக பெரும் புகழ்பெற்று வருவதாலும், மோடியினையும் பாஜகவினையும் கிழித்து எறிவதாலும் உலகெல்லாம் இருந்து பலர் நோக்க தொடங்கிவிட்டனர்
இந்திராவிற்கு பின் உலகம் காணபோகும் இரும்புபெண் இவர் என பெரும் வல்லரசுகளுக்கு உளவுதகவல் சென்றிருப்பதால் அவை அச்சபட ஆரம்பித்துவிட்டன.
அவர் இன்னொரு தாட்சர், இன்னொரு கோல்டா மேயராக வருவார் என உலகம் நம்புகின்றது, ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் கூட யார் அந்த குஷ்பு என விசாரித்ததாக ஐரோப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன
இதனால் அவரை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டார்கள், இதோ அவரின் டிவிட்டர் கணக்கையும் ஹேக் செய்யும் அளவு சென்றுவிட்டார்கள்
தலைவியின் இணைய பக்கங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் விதமாக முண்ணணி இணைய பாதுகாப்பு அளிக்கும் நிறுவணங்களுடன் சங்கம் ஆலோசனையில் இருக்கின்றது
பெண்டகனுக்கு அளிக்கபடும் விஷேஷ தொழில்நுட்ப பாதுகாப்பு போல விரைவில் தலைவியின் பக்கங்களுக்கும் பாதுகாப்பு நிறுவபடும்
தலைவிக்கு வரும் எந்த சவாலையும் அவர் சமாளித்து தாண்டி செல்ல சங்கம் மிக துணையாக இருக்கும்
அந்நிய சக்திகளின் இந்த அட்டகாசத்தை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது, விரைவில் தலைவியின் டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தது மொசாத்தா? ரஷ்யாவா? வட கொரிய குழுவா? சீனாவா ? இல்லை சி.ஐ.ஏவா? என சங்கம் கண்டுபிடிக்கும்
தலைவியின் அக்கவுண்டை ஹேக் செய்தவனை சென்னை அசோக் பில்லரில் கட்டிவைத்து அவனை தலைவியின் செருப்பால் சங்கம் அடிக்கும் காட்சியினை உலகம் விரைவில் காணும்