தலைவியின் புன்னகையே புத்தமதத்தின் எளிமையான தத்துவம்
வழக்கமாக எல்லா தெய்வங்களும் தலைவியினை அவர்கள் வீட்டில் சென்றுதான் வாழ்த்தும்
ஆனால் சனி வருவது நல்லதல்ல என சாஸ்திரம் சொல்வதால் தலைவி சனி பகவானை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார்
இதெல்லாம் சாதரண விஷயம்
இதற்கு போய் குஷ்பு கோவிலுக்கு செல்லலாமா? என பொங்குகின்றார்கள்
தலைவி இஸ்லாமியராய் பிறந்தார், பெரியாரிஸ்டாய் வளர்ந்தார், இந்துவினை திருமணம் செய்தார்
எம்போன்ற கிறிஸ்தவர்களை சங்கத்தின் முக்கிய பொறுப்பில் அமர்த்தியிருக்கின்றார், வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களிலும் அவருக்கு சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது
தலைவியின் புன்னகையே புத்தமதத்தின் எளிமையான தத்துவம்
யூத பெண்களை விட பேரழகு மிக்கதால் அந்த மதத்தாரும் தலைவியினை மதிக்கின்றனர்
இப்படி எல்லா மதத்திற்கும் பொதுவானவர் எங்கள் தங்க தலைவி, எல்லா ஆலயங்களுக்கும் அவர் செல்வது அவரின் உயர்ந்த குணம்
இங்கு மானிட பதர்கள் ஆயிரம் பிதற்றட்டும், மேலோகத்தில் சனி பகவானை மிக பொறாமையாக பார்த்து கொண்டிருப்பார்கள் மற்ற கிரகத்தார்.
தலைவியே தேடி சென்று வழிபட்டவர் என்றால் சாதரணமா?
ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமா எல்லாம் தங்கள் மேல் வெறுப்படைந்து கதறி அழும் நேரமிது.