தலைவி ஆனந்த விகடனில் அட்டகாசமான பேட்டி
தலைவி ஆனந்த விகடனில் அட்டகாசமான பேட்டி கொடுத்திருக்கின்றார்
மிக நிதானமான பதில்கள், தீர்க்கமான சிந்தனைகள், அரசியல் நடப்புகளை அவதானித்தல் என அவரின் பேட்டி தேர்ந்த அரசியல்வாதிக்குள்ள அனுபவத்தை சொல்கின்றது
திருநாவுக்கரசுக்கு நான் ஏன் பதில் சொல்லவேண்டும் என்ற ஒற்றை வரியில் எங்கோ போய்விட்டார் தலைவி
குரைக்கும் நாய்க்கு பெண் சிங்கம் ஏன் பதில் சொல்ல வேண்டும்?
கலைஞரை அப்பா என அழைக்கும் தலைவி அவரை கோபாலபுரத்தில் சந்தித்ததையும் , அதாவது திமுகவில் இருந்து வெளியேறிய பின் சந்தித்ததையும் சொல்லியிருக்கின்றார்
அப்பொழுது எடுத்த படங்களையும் டிவிட்டரிலும் பதிவேற்றி இருக்கின்றார்
அதில் நம்மை போலவே கலைஞர் அருகில் நிற்க கூடாது, அதற்கு தகுதி இல்லை. அவர் அருகே முழங்காலில் நிற்பதே மரியாதை என அவர் எண்ணி எடுத்த படங்களும் இருக்கின்றன
நாம் கலைஞரை சந்தித்த பொழுது எடுத்தது போலவே அவரும் கலைஞர் முன் நிற்காமல் பணிந்து புகைபடம் எடுத்திருக்கின்றார்.
சங்கமும், தலைவியும் ஒரே சிந்தனையினை கொண்டிருக்கின்றோம் என்பது மகா ஆச்சரியம் ,
சங்கம் தலைவியின் முழு ஆசியினை பெற்றது என்பதற்கு இதனை தவிர என்ன சான்று வேண்டும்??
சந்திரமதியின் தாலி அரிச்சந்திரன் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது போல , சங்கத்து சிந்தனை தலைவிக்கு மட்டும் புரிந்திருக்கின்றது, போதும்
இந்த உற்சாகத்தில் தலைவி 400, நாலாயிர பிரபந்தம் எல்லாம் அவரை பற்றி பாடலாம்
அந்த பேட்டியில் தலைவியிடம் கேட்கின்றார்கள், நீங்கள் ஏன் ரஜினி கமல் போல தனி கட்சி தொடங்கவில்லை
தலைவி நிதானமாக சொல்கின்றார், “நடிகர்களுக்கு இருப்பது போல ரசிகர் கூட்டம் நடிகையருக்கு இருப்பதில்லை”
தன்னடக்கம் என்பது இதுதான், அதே நேரம் யானையின் பலம் அதற்கு தெரியாமல் சங்கிலியில் அடைபட்டு கிடக்கின்றது என்பதும் இத்தான்
மயில் வான்கோழிகளை பார்த்து தன்னை தாழ்வாக நினைக்கின்றது என்பதும் இதுதான்
இதை பற்றி தலைவிக்கு எடுத்து சொல்ல வேண்டும், உண்மையில் ரஜினியும் கமலும் எதற்கு கட்சி தொடங்கினார்கள்?
காங்கிரசில் ஏதும் கோளாறு நடக்கும் பட்சத்தில் குஷ்பு தனிகட்சி தொடங்குவார், அது தங்களுக்கு பாதகமாக அமையும் எந்த அச்சத்திலே அந்த இருவரும் உளறிகொண்டிருகின்றார்கள்
அது தெரியாமல் தலைவி அப்பாவியாய் பேசிகொண்டிருக்கின்றார்
தலைவி பலத்தை அவருக்கு தெரிய வைத்து அவரை உயர வைக்க சங்கம் தீர்மானம் செய்திருக்கின்றது
கருப்பு வெள்ளை காலத்தில் தலைவி வந்திருந்தால் பத்மினி, தேவிகா , சாவித்திரி எல்லாம் உருவாகி இருக்கவே முடியாது என்பதை சொல்லும் படம் இது
தலைவி பிற்காலத்தில் வந்தததால் திலகமும், நாட்டிய பேரோளியும் அடையாளமிட்டுகொண்டன, அது அவர்கள் செய்த புண்ணியம்