தலைவி ஏன் லண்டன் சென்றார் ?
தலைவி ஏன் லண்டன் சென்றார் என தீவிர விசாரணையில் இறங்கினால், லண்டனில் இருந்து சங்க புலனாய்வு பிரிவினர் தரும் தகவல் இதுதான்
அதை கேட்டதில் இருந்து சங்கம் ஆனந்த களிநடனம் புரிகின்றது, கோட்டான கோடி நன்றி இயேசப்பா என சொல்லிகொண்டே இருக்கின்றது
அப்படி காதில் தேன்பாய்ந்த செய்தி என்ன தெரியுமா?
இளவரசர் ஹாரி என்பவருக்கு இன்று திருமணமாம், அவர் அமெரிக்க நடிகையினை மணக்கின்றாராம்
ஒரு நடிகை அரச குடும்பத்தில் காலடி எடுத்துவைக்கும் நேரம் , தன் ஆற்றலால் உலகம் வியக்கும் நடிகை ஒருவரும் அழைக்கபட வேண்டும் என்றும் அதே நேரம் அவர் டயானா சாயலில் இருக்க வேண்டும் என்றும் அரச குடும்பம் விரும்பியிருகின்றது
இதனால் குஷ்பு அழைக்கபட்டிருக்கலாம் என்கின்றார்கள்
நேரடியாக அழைக்கபட்டால் உலகின் முக்கிய பிரபலங்கள் எல்லாம் எங்களை ஏன் அழைக்கவில்லை என்ற அசவுகரியத்தை பிரிட்டன் குடும்பம் பெறகூடும்
இதனால் தலைவி சுற்றுபயணி போல் சென்று அத்திருமணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக ரகசிய தகவல்கள் சொல்கின்றன
பிரிட்டன் அரசகுடும்பமே சிறப்பு விருந்திரனராக அழைத்திருக்கும் தலைவியினை பார்த்து பொறாமையால் சென்னையில் சிலது குரைத்து கொண்டிருக்கின்றன
உலகம் வியக்கும் எங்கள் ஒப்பற்ற தலைவி வாழ்க, வளர்க
