தலைவி குஷ்பு வீட்டு நாய்

இது உலகில் பெரும் கவனம் பெறபோகும் நாய், தலைவிக்கும் அவரின் மாபெரும் மனதிற்கும், மிக உருக்கமான மனதிற்கும் எடுத்துகாட்டான நாய்

அதை நாய் என கருதி வீட்டு வாசலில் கட்டி வைக்காமல் தன் வீட்டில் ஒருவராக தத்தெடுத்து வளர்க்கின்றார் தலைவி, அத்தோடு அல்லாமல் அதற்கு தன் குடும்ப பெயரான சுந்தரின் பெயரையே சூட்டியிருக்கின்றார்

ஆம், இது தலைவி குஷ்பு வீட்டு நாய். அது விஷேசம்

அதைவிட விஷேஷமானது அதன் பெயர்

காரணம் நாயின் பெயர் என்ன தெரியுமா,

நிலா சுந்தர்

இது யாருக்கு சாத்தியம்? யாராவது நாய்க்கு தன் வீட்டு பெயரை இடுவார்களா?

இடவே மாட்டார்கள்

ஆனால் தலைவி வள்ளலார் போன்ற , மகாவீரர் போன்ற ஞான இதயத்தின் பிறப்பு, அன்னை தெரசா தெருவோர‌ மனிதர்களை, தலைவி அதைவிட ஒரு படி மேலே சென்று தெருவோர நாயினை வீட்டுக்கு கொண்டுவந்து குடும்பபெயரை இட்டிருக்கின்றார்

தன் பிள்ளையாகவே அதற்கு பெயரிட்டு வளர்த்து மகிழ்கின்றார்

அதன்பெயரில் சொத்தும் எழுதி வைத்திருக்கின்றார் என்கின்றார்கள், அதுபற்றி தகவல் இல்லை, பாதுகாப்பு காரணங்களுக்காக மறைக்கபட்டிருக்கலாம்

தலையின் இந்த ஜீவ காருண்யம், இரக்க கண்ணோட்டம் உலகில் பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது, விரைவில் புளூ கிராஸ் அமைப்பில் இருந்து “வாழும் தேவதை” “மனங்களும் உயர்ந்த மனம்” “நற்குண மங்கை” என பல விருதுகள் வழங்கபடும்

இப்படி ஒரு மாபெரும் உயர்ந்த மனம் படைத்த பெண்ணுக்கு, ஞான மங்கைக்கு சங்கம் வைத்திருப்பதில் பெருமையடைகின்றோம்

(தலைவியின் புகழை விரும்பாதோர் தலைவி தன் கணவனை திட்ட நாய்க்கு நிலா சுந்தர் என பெயரிட்டிருப்பதாக வதந்தி பரப்புகின்றது, அந்த பொறுப்பற்ற தரப்பை யாரும் நம்ப வேண்டாம்..)

பொதுவாக ஞானிகளும் தெய்வங்களும் நாய்களோடு இருப்பார்களாம்

இந்து தெய்வங்கள் சில அப்படி இருக்கும். கிறிஸ்துவத்தில் கூட ஒரு புனிதர் எப்பொழுதும் நாயோடு இருப்பார்

சித்த ஞானிகளில் சிலர் அப்படி உண்டு, சொந்தங்களும் உறவுகளும் நட்பும் கொடுத்த வலியில் அப்படி நாயே நன்றியுள்ளது என குறிப்பால் சொல்வார்கள்

“சொந்தமென வந்ததெல்லாம் சொந்தமுமில்லை
ஒரு துணையில்லாமல்
வந்ததெல்லாம் பாரமுமில்லை
நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா
நன்றிகெட்ட (காங்கிரஸ்) உறவை
விட நாய்கள் மேலடா”

“கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றியுள்ள நாய்கள்
உள்ள நாடு

மனசாட்சி சிறிதுமின்றி
சுயநலத்தில் நன்றி கொன்று
காங்கிரசாரும் உலவும் நாடு”

என சொல்லாமல் சொல்கின்றார் ஞான தலைவி,

தங்க தலைவி இப்பொழுது ஞான தலைவி…..

(தலைவி ஒரு நாயினை வளர்ப்பதால் இனி தெருவோரத்து ஆதரவற்ற நாய்களுக்கு ஒருவேளை உணவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றிவிட்டது சங்கம்)