தலைவி குஷ்பூ தமிழகத்தின் விடிவெள்ளி

Image may contain: 1 person, smiling, standing and close-up

இந்த தமிழ்சமூகம் எதையுமே தாமதமாகவே புரிந்துகொள்ளும் போல, நாம் முன்பே சொன்னால் புரிந்துகொள்ளாமல் பரிகசித்த விஷயத்தை இப்பொழுது ஆம் உண்மைதான் என ஒப்புகொள்கின்றது, விரைவில் தமிழகம் நம் கருத்தை ஏற்றுகொண்டு திரளலாம்

விஷயம் இதுதான், இந்த கமலஹாசன் கட்சி தொடங்கினார் அல்லவா? அதில் ஸ்ரிப்பிரியா என்பவரை மேடையில் அமர வைத்ததில் தமிழ்சமூகம் சிந்தித்துவிட்டது

Image may contain: 1 person, close-upஇவருக்கெல்லாம் ஏன் அரசியல்? குஷ்பு இவரைவிட எவ்வளவு தைரியமானவர், எவ்வளவு எதிர்ப்புகளை மகா துணிச்சலாக எதிர்கொண்டு இன்று பெரும் இடத்தில் அமர்ந்திருக்கின்றார் என பாராட்டுகின்றார்கள்

ஆம் எங்கள் தலைவி எந்த நடிகன் பின்னாலும் செல்லவில்லை, திரையுலகின் எந்த ஆதரவும் அவருக்குமில்லை, தன்னை தானே செதுக்கி வளர்ந்தார்

இன்னொரு விஷயமும் நோக்கபடுகின்றது, கமலஹசன் சில சினிமா பிரமுகர்களோடுதான் கட்சி தொடங்குகின்றார், ரஜினி இன்னும் வரவே இல்லை, ஆனால் குஷ்பு என்றோ களத்திற்கு வந்துவிட்டார்

இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக தங்க தலைவியின் புகழை, பெருமையினை தமிழகம் உணர தொடங்கியாயிற்று, பலர் பட்டவர்த்தனமாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்

நாம் ஏதும் சொன்னால் உன் உடலில் சிகப்பணு, வெள்ளை அணு போல குஷ்பூ அணுவும் உண்டு அதனால்தான் அவர் புகழ் பாடுகின்றாய் என சொன்னவர்கள் எல்லாம், பலரும் தலைவி பலர் புகழை சொல்ல சொல்ல மனம் திரும்புகின்றார்கள்

ஆக தமிழர்களே, மனம் திருந்தி தலைவி குஷ்பூ தமிழகத்தின் விடிவெள்ளி என்பதை ஏற்றுகொண்டு அவரை பின் தொடருங்கள் என சங்கம் வலியுறுத்துகின்றது

தலைவியின் அருமை பெருமை அகிலமெல்லாம் தெரியும் இந்நேரத்தில் நம்மைவிட யார் மகிழ முடியும்??

ஒரே தாஜமஹால். ஒரே நிலா..ஒரே குஷ்பூ