தலைவி மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்
ரஜினிபற்றி எழுதிவிட்டதால் அவரின் ரசிகர்கள் எல்லாம் வெளிநடப்பு செய்கின்றார்கள், சிலர் சொல்லிகொண்டும் பலர் சொல்லாமலும் ஓடுகின்றார்கள்
இவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்றால் சைமன் ரஜினியினை கண்டித்து பேசிகொண்டிருந்தபொழுது நாம் ரஜினி நம்மில் ஒருவர் என சொன்னபொழுது ஓடிவந்தார்கள்
இப்பொழுது ரஜினி ராமசந்திரனை பற்றி புளுகுமூட்டை அவிழ்த்ததை சொன்னதும் ஓடிவிட்டார்கள்
ஓடட்டும், ஒரு பய இல்லாமல் ஓடிவிடவேண்டும் ஆமாம்.
மனதிற்கு சரி என பட்டதை பதிவோம், யாருக்காகவும் எதற்காகவும் கண்டிக்க வேண்டிய விஷயங்களை விட முடியாது, உண்மையினை உரக்க சொல்லிகொண்டே இருப்போம்
தலைவி குஷ்பு தவிர எல்லோரும் விமர்சிக்கபடுவார்கள் என்பது இங்கு பிரதான கொள்கை. யாரை எப்பொழுது கலாய்ப்போம் என எமக்கே தெரியாது.
தலைவி மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்
எங்களுக்காக மட்டும் நீ எழுதவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் கிளம்பலாம். அதெல்லாம் இங்கு நடக்காது.
அப்படி நடக்க வேண்டிய அவசியமுமில்லை
ராமசந்திரன் சமாதி நோக்கி தலைவரின் தலைவர் வாழ்க என சொல்லி ஓடும் அந்த ரசிக ஜீவன்களுக்கு பரிதாப வழியனுப்பல் செய்தாயிற்று
அப்படியே உங்கள் தலைவனின் தலைவன் அருகே தலைவியும் தூங்கி கொண்டிருக்கின்றது
“ரஜினிக்கு நல்வாழ்வு அளித்தது ராமசந்திரனாக இருக்கலாம், ஆனால் நல்வாய்ப்பு அளித்தது நீதான் தாயே, அதனை அவர் மறக்கலாம் நாங்கள் மறக்கவில்லை..” என சொல்லிவிட்டு செல்லுங்கள்
ஓடுங்கடா டேய்..