தலைவி விஷயத்திலும் வரலாறு திரும்புகின்றது

Image may contain: 1 person, smiling, selfie and close-up

சில விஷயங்களில் வரலாறு திரும்பும் , தலைவி விஷயத்திலும் அப்படியே திரும்புகின்றது.

தங்க தலைவி முதலில் தெலுங்கில்தான் நடித்தார், பின்புதான் தமிழுக்கு வந்து, தமிழகத்தை ஆட்கொண்டு இன்று பெரும் உயரத்தில் மின்னிகொண்டிருக்கின்றார்

Image may contain: 2 people, textஇப்பொழுது மறுபடியும் அடுத்த ரவுண்ட் வந்திருக்கின்றார். அதாவது தெலுங்கு படத்தில் நடிக்கின்றாராம். அதன் பின் நிச்சயம் தமிழுக்கும் வருவார்

சுவாரஸ்ய கிரிக்கெட் போட்டி நடக்கும்பொழுது, திடீரென சச்சின் டென்டுல்கர் களத்தில் இறங்கினால் கிரிக்கெட் ரசிகனின் மனநிலை எப்படி இருக்கும், தலைவி வந்துவிட்டார் என்றவுடன் சங்கத்து மனநிலையும் அப்படியே இருக்கின்றது

அடுத்த இன்னிங்க்ஸை தலைவி ஆரம்பிக்கட்டும், கவுரவ வேடத்தில் சென்றால் கூட படம் மாபெரும் வெற்றி என்பது சந்தேகமில்லை

இந்த மறைந்த நடிகை சாவித்திரி கதையினை படமாய் எடுக்கின்றார்களாம், சாவித்திரி மிக அருமையான நடிகை, தைரியசாலி ஆனால் கூடா நட்பால் தன் வாழ்வினை அழித்த நடிகை, கண்ணீர் காவியம் அவர்

சாவித்திரியின் வாழ்வினை படமாக்க குஷ்பூதான் நடித்திருக்க வேண்டும், ஆனால் அந்த மணிபர்ஸ் வாய் கீர்த்தி சுரேஷ் என்பவர் நடிக்கின்றாராம், சாவித்திரிக்கு இப்படி ஒரு அவமானம் தேவையில்லை

(ஜெமினி பாத்திரத்தில் யார் நடிக்கின்றார் என தெரியவில்லை, சிம்பு அல்லது பிரபுதேவா மிக பொருத்தமான நடிகர்கள் )

குஷ்பு ஓய்வில் இருந்ததால் பாகுபலி போன்ற படங்களும் அவர் இல்லாமலே வந்து நம்மை நோகடித்தன.

இனி அப்படி நடக்க கூடாது , தலைவி அப்வப்போது சினிமாவில் வந்து செல்லலாம் , தமிழகம் எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றது.

கிட்டதட்ட 43 வயதில் முதல் ஹிட் கொடுத்து முதல்வராகும் வரை டோப்பா எல்லாம் வைத்து நடித்த ராமசந்திரன் வாழ்ந்த தமிழகத்தில் 46 வயதே ஆன எங்கள் தங்கத்திற்கு என்ன குறை? அவர் போக்கில் நடிக்கலாம்

ஆனால் அவர் மிக விரைவாக வந்துவிட வேண்டும் என்றுதான் கேட்கின்றோம்

காரணம் குஜராத் முதல்வராக ஸ்ருமிதி இராணிக்கு வாய்ப்பு இருக்கின்றதாம், அப்படி அவர் ஆகிவிட்டால் தமிழகத்தில் குஷ்பு முதல்வராகியே தீரவேண்டும், வாய்பும் பிரகாசமாக உள்ளது

அதனால் முதல்வராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ மிக விரைவில் குஷ்பு அமர இருப்பதால் அதற்குள் இந்த அடுத்த இன்னிங்க்ஸ் ஒரு சுற்று வந்துவிட்டால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

இந்த இரும்பு பெண்மணியினை பெற தமிழ்நாடு என்ன தவம் செய்துவிட்டது? நிச்சயம் கொடுத்துவைத்த மாநிலம் இது.

எத்தனை கோடி பிட் காயின் கொடுத்தாலும் கிடைக்காத வரம் அவர்.