தளபதி அண்ணாமலை
இந்தியா குப்தர்கள், சோழர்கள், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலத்துக்கு பின் உலக அரங்கில் இப்பொழுது வலுவான நாடாக மாறிவருகின்றது, ஒரே காரணம் மோடியின் பலம்
அந்த பலத்தில் பாகிஸ்தான் பணிந்து கிடக்கின்றது, சீனா ஒதுங்கி நிற்கின்றது, பர்மாவும் வங்கதேசமும் சத்தமில்லாமல் சரிந்து கிடக்கின்றன, இதுகாலம் இந்தியாவினை ஒருமாதிரி தவிக்கவிட்ட இலங்கை இப்பொழுது முழு சரணாகதியில் இந்தியாவிடம் அடைக்கலமாகியிருக்கின்றது
சில அறிகுறிகள் அதை தெளிவாக சொல்கின்றது, பெரும் சம்பவம் அண்ணாமலையின் இலங்கை பயணமும் அதை தொடர்ந்த பழ.நெடுமாறனின் அறிக்கையும்
பழ.நெடுமாறன் அண்ணாமலையினை வலுவாக ஆதரிப்பது இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு நிலைபாட்டுக்கு வந்ததை தெரிவிக்கின்றது
பழ.நெடுமாறனுக்கும் ஒரு வரலாறு தமிழகத்தில் உண்டு.1950களில் தமிழகத்தில் நாத்திக நச்சுகாற்று வீசியபொழுது மதுரை பக்கம் அதனை தடுத்தவர் பசும்பொன் தேவர், அந்த சிங்கத்தின் சீற்றத்தில் மதுரையும் அதன் தென்பகுதியும் தேசியமும் தெய்வீகமுமாகவே இருந்தது
தேவரின் காலத்திலே பழனியப்பா குடும்பம் நாத்திக திமுகவுக்கு சவால் விட்டது, தேவரின் காலத்துக்கு பின்பும் அந்த குடும்பம் தேசிய தெய்வீக செயல்பாட்டுக்கு மதுரையில் காவல் இருந்தது
மதுரை முத்து உள்ளிட்ட பல திமுகவின் சர்ச்சைகுரிய முகங்களின் அட்டகாசத்தின் பொழுது மிக சரியான பதிலடியினை கொடுத்தது பழனியப்பா குடும்பம், நாள்காட்டி உள்ளிட்டவற்றை அச்சடிக்கும் பிரஸ்கள் வைத்திருந்தார்கள் இன்னும் சில தொழிலும் உண்டு
அந்த குடும்பத்தில் வந்தவர்தான் பழ.நெடுமாறன்
1960களில் திமுகவினை எதிர்க்க ஒரே தேர்வு காங்கிரஸ், ஆனால் காங்கிரசும் திமுகவும் “சமய சார்பற்ற” “மத நல்லிக்க” உடன்பாடு கொண்ட கட்சிகள் என்பதுதான் சிக்கல், இருவருக்குமே முதலாளிகள் சிறுபான்மையினர்
இந்த புள்ளியின் ஆபத்து தெரியாமல் பல தேசியவாதிகள் காங்கிரசில் சிக்கி சீரழிந்தனர், குமரி அனந்தன் பழ.நெடுமாறன் என பலர் உண்டு. காமராஜரும் தன் வழமையான குணம் போல் காங்கிரஸில் தனக்கு அடுத்து யாரையும் வளர்க்காமலே மறைந்தார்
பழ.நெடுமாறன் காங்கிரஸில் தொடர்ந்தார், இந்திராகாந்தி மதுரையில் தாக்கபட்டபொழுது அவரை மின்னல் வேகத்தில் காப்பாற்றியவர் இந்த பழ.நெடுமாறனே தான்
இந்திரா இருந்தவரை அவர் காங்கிரஸில் இருந்தார், அப்பொழுதுதான் ஈழபிரச்சினை பெரிதானது
அந்த 1983 கொழும்பு கலவரத்துக்கு பின் இலங்கையில் இந்தியா நேரடியாக தலையிட்டது, ஆனால் இந்திராவின் மனம் வங்கம் போல் தனிநாடு அமைத்து கொடுப்பது அல்ல என்பதை அவரின் நடவடிக்கைகள் சொன்னது
காரணம் வங்கம் போல அல்ல இலங்கை, அதன் கடல்பரப்பு காரணமாக பல நாடுகள் தலையிடும் அப்பொழுது தமிழீழம் அமைந்தால் தனி தமிழ்நாடு கோஷம் தமிழகத்தில் உருவாகும் என இந்திரா அஞ்சினார்
அப்பொழுது காஷ்மீர், பஞ்சாப் என பெரும் சிக்கலில் இந்தியா இருந்த நேரம்
இலங்கை அரசு அமெரிக்காவுக்கு இடமளிக்க கூடாது அப்படியே தன் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் போராளிகளை வளர்த்தார், போராளிகளை வளர்த்து என்ன செய்யலாம் என சில திட்டங்கள் இருந்தன அதில் தனிநாடு இல்லை
இதனை முதலில் உணர்ந்தவன் பிரபாகரன்
சும்மா சொல்லகூடாது, ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் பிரபாகரனின் நோக்கமும் போராட்டமும் தூய்மையானது தனிநாடு அல்லாத ஒன்றுக்கு அவன் சம்மதிக்கவே இல்லை, அவனின் துணிவும் போராட்ட குணமும் 16 வயதிலே அந்நாட்டில் மக்களை கையெடுத்து வணங்க வைத்தது
அந்த பிரபாகரன் இந்தியாவின் பயிற்சிக்கு முதலில் வரவில்லை, இந்திரா அழைத்தும் அவன் ஒதுங்கினான், இன்று இந்தியாவின் கைக்குள் விழுந்தால் நாளை இலங்கையில் அவர்களின் அடியாளாக மாறுவோம் எனும் அச்சமும் முன்னெச்சரிக்கையும் இருந்தது
4 பிரதான குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க தொடங்கியபொழுது பிரபாகரன் வரவில்லை, அவன் கணித்தது சரியாக இருந்தது
காரணம் பத்மநாபா உள்ளிட்ட குழுவினருக்கு இந்தியா பாலஸ்தீன யாசர் அராபத்திடம் லெபனாலில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது, இப்படி செய்தால் இஸ்ரேல் அமெரிக்க கூட்டணி இலங்கையில் கால்பதிக்கும் என அஞ்சினான் பிரபாகரன் சரியான கணிப்பு அது
இந்தியா பக்கம் வரமறுத்த பிரபாகரனை இந்தியா தமிழக மன்னன் எம்ஜி ராம்சந்தர் மூலம் வளைத்தது, ராமசந்திரன் கொடுத்த பாதுகாப்பின் பேரில்தான் பிரபாகரன் இந்திய பயிற்சிக்கே வந்தார்
இலங்கையில் 4 குழு யுத்தம் புரிந்தாலும் புலிகளின் வீச்சும் அர்பணிப்பும் தூய்மையான கட்டுகோப்பும் அவர்களுக்கு தனி இடம் கொடுத்தன
தமிழகம் மிக பெரிய ஆதரவினை போராளிகளுக்கு கொடுத்தது, திமுகவும் அதிமுகவும் தனி அரசியலாக கையில் எடுத்தன
இந்திய பயிற்சியில் போராளிகள் இலங்கை ராணுவத்தை கட்டுக்குள் கொண்டுவந்தபொழுதுதான் பிரபாகரன் அஞ்சிய காட்சிகள் நடந்தன
அது ஆப்கனில் சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா கடும் போர் நடத்திய காலம், பின்லேடன் அவர்களின் செல்லபிள்ளையாக இருந்த காலம்
யாசர் அராபத்தின் பயிற்சி இலங்கைவரை வந்துவிட்ட நிலையில் மொசாத்தும் இலங்கைக்கு வந்தது, பல நாட்டு உளவுதுறைகள் மோதும் களமாயிற்று நிலமை
அப்பொழுதுதான் போராளி குழுக்குள் சண்டை வந்தது எனினும் இந்திரா இருந்தவரை அமைதி, இந்திராவின் மரணம் அமைதியினை குலைத்தது
இதுகாலம் காங்கிரஸில் இருந்த பழ.நெடுமாறன் குழம்பியது இங்குதான்
அடுத்து வந்த ராஜிவ் சீனியர் ராகுல் எனும் வகையில் குழப்பி அடித்தார், ராஜிவின் குழப்பமே பின்பு எல்லா ஈழகுழப்பத்துக்கும் காரணம்
ராஜிவின் காலத்தில் மிக சரியான தலைவர் ஒருவர் ஈழபிரச்சினையினை சரியான கோணத்தில் கையாள நினைத்தார், அவருக்கு இருந்த அனுபவமும் அறிவும் பல ஆலோசனைகளை சொன்னது, ஆனால் அவர் கட்சி அன்று இரு எம்பிக்களுடன் இருந்த புதுகட்சியாக இருந்ததால் ராஜிவ் அவரை புறக்கணித்தார்
அந்த தலைவர் பெயர் வாஜ்பாய், அடல் பிஹாரி வாஜ்பாய்
வாஜ்பாய்க்கு இலங்கை தமிழர்கள் இந்துக்கள், இந்தியாவோடு கலாச்சாரத்தோடு தொடர்புடையவர்கள் எனும் அனுதாபம் எப்பொழுதும் இருந்தது, ஆனால் திராவிடம் போல் அவர்கள் தமீழீழம் கேட்டதும், சிங்கள பவுத்தனுக்கு எதிராக இந்துஈழம் கேட்ட்காமல் இருந்ததும் சரியாக படவில்லைதான் ஆனாலும் கலாச்சார அடிப்படையில் இலங்கை தமிழர்களை வலுவாக ஆதரித்தார்
இந்த ஆதரவை கருணாநிதி பயன்படுத்தினார், எம்ஜிஆரும் புலிகளும் ஒரு அணியில் நின்றார்கள் தன் கட்சியின் ஜெயலிதாவினை ராஜிவ் ஆதரிக்க, அங்கு ஜெயலலிதாவினை நீங்கள் எனக்கு எதிராக பயன்படுத்தினால் புலிகளை நான் பயன்படுத்துவேன் எனும் ராஜதந்திரம் இருந்தது
இந்திராவுக்கு பின் பிரபாகரன் எம்ஜி ராமசந்திரனை மட்டும் நம்பினான், அதில் உண்மை இருந்தது
ராஜிவ் குபீரென குழப்பம் விளைவித்தார், இலங்கையில் வெற்றிபெறும் நிலை இருந்தாலும் ஜெயவர்த்தனே தந்திரத்தில் வீழ்ந்தார், விளைவு தமிழருக்கு தீர்வு எனும் ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பு யாருமே இல்லாமல் அவர் செய்த ஒப்பந்தத்தை பிரபாகரன் தைரியமாக மறுத்தான்
இந்த எச்சிசோற்றுக்காக நாங்கள் செத்து போராடவில்லை என தைரியமாக அதுவும் டெல்லியிலே ராஜிவிடம் சீறினார், ராஜதந்திரமாக அவனை கையாளவேண்டிய ராஜிவ் ஏமாற்றம் கொடுத்தது சிக்கலின் முதல்படி
அதன் பின் காட்சிகள் மாறின, ராமசந்திரன் மறையவும் என்னென்னாலாமோ நடந்தது
பன்னாட்டு உளவுதுறை சதியில் போராளி குழுக்களே மோதி கொண்டன, பிரபாகரன் தன் உயிரை காக்க பலரை கொல்லவேண்டியதும் ஆயிற்று, காரணம் அந்த ஈழபோராட்ட குழுக்களே முதலாளித்துவம் கம்யூனிசம் என உலக நாடுகளின் பினாமிகளாக மாற ஆரம்பித்தது
அந்நேரம் வாஜ்பாய் டெசோ அமைப்பில் இருந்தார், இந்தியா முழுக்க இலங்கை தமிழருக்கு ஆதரவு திரட்டினார், அந்நேரம் இந்திய அமைதிபடையும் இலங்கை சென்று நிலமைஇன்னும் சிக்கலாயிற்று
வாஜ்பாயின் ஆலோசனையினை ராஜிவும் ஏற்கவில்லை பிரபாகரனும் ஏற்கவில்லை, விளைவு வாஜ்பாய் ஒதுங்கினார்
அதன் பின் என்னானது என்பதுதான் விசித்திரம், அதுவரை புலிகள் பக்கம் திரும்பாத கருணாநிதி புலிகளின் முழு காவலனாக தன்னை காட்டிகொண்டார்
எப்பொழுதும் மக்கள் விரும்பும் ஒருவரை தன் அருகே வைத்து அவரைகொண்டு தன்னை தமிழின தலைவராக காட்டுவது அவர் ஸ்டைல், எம்ஜி ராம்சந்திரன் எனும் முகமூடி போட்டு அவர் கட்சிவளர்த்தது அப்படித்தான்
1988ல் தனி தமிழிழத்துக்காய் இந்திய ராணுவத்தையே எதிர்த்த பிரபாகரனை தன் செல்லபிள்ளையாக கருதினார், அன்றைய வலுவற்ற ராஜிவ் இருவரையும் கட்டுபடுத்தமுடியாமல் குழம்பி பின் இந்திய ராணுவமும் குழம்பி எல்லாம் நாசமாகி ராஜிவும் கொல்லபட்டார்
ராஜிவ் மேல் தவறு உண்டு அதே நேரம் புலிகள் மேலும் பெரும் தவறுகள் உண்டு, ஆனால் அவர்களுக்கும் வேறு தெரிவு இல்லை, இரு துருவ உலக அரசியலில் அவர்களும் வசமாக சிக்கியிருந்தனர், தமிழீழம் எனும் கனவில் வேறு தெரிவும் இல்லை
ராஜிவ்கொலைக்கு பின் திமுகவின் உண்மை முகம் தெரிந்தது, இனி புலிகளை ஆதரிப்பது அரசியல் தற்கொலை என முடிவு செய்தது அக்கட்சி
இங்குதான் திமுகவின் தமிழ் அபிமானமெல்லாம் அரசியல் என அதிர்ந்தான் பிரபாகரன், எனினும் வைகோ தங்களை காப்பார் என கடைசி கட்டமாக அவரையும் நம்பினர் அவர் கருணாநிதியினைவிட ஆபத்தானவர் என்பது பின்னாளில்தான் புலிகளுக்கு விளங்கிற்று
ஆனால் இந்தியாவின்மேல் ராஜிவ் கொலைக்கு பின் புலிகள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை, காங்கிரஸ் அல்லா ஒரு அரசு வரும்பொழுது நிலமைசரியாகும் என நம்பினார்கள்
1997ல் வாஜ்பாய் வந்தார், அப்பொழுது புலிகளுக்கு பெரும் வாய்ப்பு ஆனையிறவு யுத்தத்தில் வந்தது
அந்த வெற்றி வரலாற்று சிறப்பான வெற்றி, புலிகளின் இருபது வருட போராட்டத்தில் மகத்தான வெற்றி சுமார்
50 ஆயிரம் இலங்கை ராணுவத்தாரை புலிகள் வளைத்து கட்டியிருந்தனர், அதாவது இனி ஈழம் அமைந்த அறிவிப்பு வரவேண்டும்
பிரபாகரன் 1991ல் செய்த தவறை இங்கு திருத்திகொள்ளவிரும்பினான் அது சரியானது, பழ.நெடுமாறன் அந்நேரம் பெரும் குரல் எழுப்பினார்
ஆனால் திமுகவும், மதிமுகவும் பெரும் அமைதி. அவர்கள் வலியுறுத்தினால் அன்றே வாஜ்பாய் இந்திய பிரதமராக ஒரு வலுவான முடிவினை இலங்கை தமிழருக்கு கொடுத்திருக்க முடியும் ஆனால் ஜெயின் கமிஷனில் வசமாக சிக்கிய திமுகவும் மதிமுகவும் புலிகளை பலிகொடுத்தன
வாஜ்பாய்க்கு ராஜிவினை கொன்றவர்கள் எனும் வலி இருந்தாலும் அதை தாண்டி இன்னொரு நாட்டில் கால்வைக்க ஆசை இருந்தது, ஈழதமிழருக்கு ஏதும் செய்ய விளைந்தார் ஆனால் பாகிஸ்தான் தொந்தரவு, உள்நாட்டு எதிர்ப்பு , மெஜாரிட்டி இன்மை எனஅவருக்கு சிக்கல் அதிகம்
ஆனால் திமுக மதிமுக காட்டிய துரோகம் பிரபாகரனை சோகமாக்கியது, சுமார் இரண்டாயிரம் புலிகள் பலகோடி மதிப்பான ஆயுதங்களை இழந்து பெற்ற அந்த வெற்றி பலனில்லாமல் போனது
இந்தியா அங்கீகரிக்காமல் தனிஈழம் அறிவிக்கமாட்டோம் என தன் பழைய தவறுக்கு பிராயசித்தம் தேடிய பிரபாகனை உலகமே கண்ணீரோடு நோக்கியபொழுது தமிழக அரசியல்வாதிகள் கனத்த அமைதி
புலிகளும் மனம் ஒடிந்த நேரம் அது, உயிரை கொடுத்து தாங்கள் நடத்திய போராட்டத்தை திமுக தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தியதை நினைத்து அழத்தான் செய்தனர், 1987ல் இந்தியராணுவத்தையே எதிர்த்த கருணாநிதி இப்படி பல்டி அடித்ததை அவர்களால் தாங்கமுடியவில்லை
தமிழீழத்தினை விட 1991ல் இழந்த ஆட்சியினை திரும்ப பெறும் வேகம் மட்டும் கருணாநிதிக்கு இருந்தது
அவர் மட்டும் ஒன்றிய அரசு என ஒன்றாமல் பேசியிருந்தால் 1999லே ஈழம் அமைய காலம் நெருங்கியிருக்கும் அவர் செய்யவில்லை
எல்லாம் மாறி 2002 வந்தது
உலகம் அப்பொழுது மாறியிருந்தது, பின்லேடன் செய்த அட்டகாசத்தால் இனி எல்லா தீவிரவாத இயக்கங்களும் தடை என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்து நார்வே தூதுகுழுவினை அனுப்பியது
அப்பொழுது இந்தியா தலமையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வு கிடைக்க பிரபாகரன் விரும்பினான், ஆனால் காங்கிரஸ் சம்மதிக்கவில்லை பாஜகவும் வலுவாக இல்லை
இலங்கையில் தங்களை மீறி எதுவும் நடக்காது எனும் மமதையில் இருந்தது காங்கிரஸ்
ஆனால் ராஜபக்சே சீனா பக்கம் சாய்ந்து அழகாக ஆடி பெரும் யுத்தம் நடத்தினான், அமெரிக்காவும் தங்கள் தலமையில் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்தியாவினையே தேடிய புலிகளை ஒழிக்க நினைத்தது
ஆம் பிரபாகரன் கடைசி காலத்தில் தன் தவறை உணர்ந்து இந்தியா நோக்கி தவமிருந்தான், ஆனால் இங்கு யாரும் அதை உணரவில்லை
திமுக, 1987ல் எவ்வளவோ தேச எதிர்ப்புகளை புலிகளுக்காக செய்த திமுக மொத்தமாக புலிகளை கைவிட்டதில் பெரும் களபேரம் நடந்தது
பழ.நெடுமாறன் போன்றோர் கதறினாலும் யாரும் காதுகொடுத்து கேட்கவில்லை
நிச்சயம் இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டால் இந்திய ராணுவம் இறங்கியிருக்கும், எல்லா வலுவான ராணுவமும் அண்டைநாட்டில் தன் படைகளை எவ்வளவு விரைவாக இறக்கி ஏற்றலாம் என பயிற்சிபெற தயாராக இருக்கும் ஆனால் இந்திய அரசு தலையிடவில்லை
விளைவு பல்லாயிரம் மக்களோடு செத்தான் பிரபாகரன்
நிச்சயம் அவன் பரிதாபத்துகுரியவன், இந்தியா இங்கு தலையிட வேண்டாம் அவர்களுக்கு காஷ்மீர் பஞ்சாப் என ஏக சிக்கல் உள்ள நேரம் இன்னொரு நாட்டில் அவர்கள் தனிநாடு உருவாக்கமுடியாது என அவன் மன்றாடியபொழுதும் காங்கிரஸ் அவனை இழுத்து வந்தது
திமுகவும் அதிமுகவும் அவனை அரசியலாக்கின
பின் 1987ல் துப்பாக்கியினை கீழே போடு என காங்கிரஸின் ராஜிவ் மிரட்டியபொழுது உங்களை கேட்டா துப்பாக்கி எடுத்தேன் என அவன்சீறினான்
அவுரங்கசீப் முன்னால் சீறிய சிவாஜிக்கும் ராஜிவிடம் சீறிய பிரபாகரனுக்கும் வித்தியாசம் ஏதும் காணமுடியாது
ஆனால் சிவாஜி வாழ்க்கையில் துரோகிகள் இல்லை, பிரபாகரன் வாழ்க்கையில் அவன் சந்தித்தெல்லாமே துரோகிகள்
சிவாஜி இந்து ராஜ்ஜியத்துக்கு போராடினான், பிரபாகரன் அதை செய்யாமல் மிஷனரி வலையில் வீழ்ந்தான் பரிதாபம்
எல்லோராலும் வஞ்சிக்கபட்டு கொல்லபட்டான் அந்த ஈழத்து கர்ணன்
ஆனால் ஈழம் என்பது அவன் அல்ல, அவன் மட்டும் அல்ல, அவனோடு முடிந்துபோக கூடிய விஷயம் அல்ல, சுமார் 20 லட்சம் மக்களின் எதிர்காலம் அங்கு கேள்விகுறியானது, அதுவும் பெருவாரி இந்துமக்கள்
இந்நிலையில்தான் மோடி அரசு வந்தது, முதலிலே இலங்கை ஹட்டனில் கால்வைத்து அசத்தினார் மோடி, இந்துத்வா என்பது இந்தியா தாண்டி வெல்ல வேண்டும் என அமித்ஷா சொன்னது உலகை அதிரவைத்தது
அதில் இருந்து காட்சிகள் மாறின,இலங்கையில் இந்து எழுச்சி மெல்ல கேட்டது, காசி ஆனந்தன் போன்றவர்கள் மோடி ஆதரவுக்க்கு வந்தார்கள்
இப்பொழுது அப்பழுக்கில்லா தேசியவாதியும் இந்திராவுக்கு பின் அது காங்கிரசே இல்லை என ஒதுங்கியவரும்,இன்றளவும் தன் கொள்கையில் ஈழமக்கள் பால் உண்மையான அன்பு கொண்டவருமான நெடுமாறனும் மோடி பக்கம் வந்திருகின்றார்
நாம் இதனை முன்பே சொன்னோம், சில வருடங்களுக்கு முன்பே சொன்னோம் தேசியவாதியான பழ.நெடுமாறன் பாஜக பக்கம் வரவேண்டும் என சொன்னோம்
சரியாக வந்திருக்கின்றார் சரியாக பேசியிருக்கின்றார்
உண்மையில் இலங்கை தமிழருக்கு ஏதும் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த தேசிய தலைவர்கள் இந்திராவும் வாஜ்பாயும் மட்டுமே, தேசிய தலமையால் மட்டுமே அங்கு ஏதும் செய்யவும் முடியும்
இந்திராவுக்கு பின் காங்கிரஸ் அழிந்ததில்தான் இலங்கையும் அழிந்தது
வாஜ்பாயினை மிக சரியாக படித்த மோடி இப்பொழுது வலுவான வாஜ்பாயாக களம் இறங்கி தன் தளபதி அண்ணாமலையினை முன் நிறுத்துகின்றார்
தளபதி அண்ணாமலையும் சரியான ஆட்களை சரியான நேரத்தில் சந்தித்து காட்சிகளை மாற்றுகின்றார்
இனி நிச்சயம் இலங்கை தமிழருக்கு ஒரு முடிவு வரும்
ஜெயவர்த்தனேவுக்கு அடுத்து மிகபெரிய தந்திரகாரனாக இந்தியாவிற்கு எதிராக சீனாவினை கையில் வைத்து ஆட்டம் போடமுயன்ற ராஜபக்சே அலறி அடித்து ஓடியிருக்கின்றார் என்பது ஒருவகையில் இந்திய வெற்றி
இந்திய எதிரி ஆளமுடியாது எனும் வெற்றி
சீனாவோ இதர நாடுகளோ இலங்கையில் கால்வைக்கமுடியா அளவு காய் நகர்த்தி அந்த நேரம் அண்ணாமலையினை அனுப்பி பல்ஸ் பார்த்ததெல்லாம் பெரும் ராஜதந்திரம்
ஈழசிக்கலுக்கு ஒரே காரணம் வலுவான இந்திய தலமையும் அவர்களோடு வலுவாக தமிழக தலமை இல்லாததுமே
இப்பொழுது எல்லாம் சரியாகின்றது “தளபதி” அண்ணாமலை மிளிர்கின்றார்
பிரபாகரன் ஒருவகையில் வீரசிவாஜி சாயல், ஆனால் சிவாஜியிடம் இருந்த இந்துராஜ்ய வெறிமட்டும் அவனிடம் இல்லை அவனின் வீழ்ச்சிக்குஅதுதான் காரணம்
சிவாஜிக்கு பின்னர் பெரும் அழிவுகள் அவுரங்கசீப்பால் வந்தாலும் வரலாற்றில் மராட்டிய இந்துசேனைதான் வென்றது என்பது போல இலங்கையிலும் வரலாறு திரும்பட்டும்
பழ.நெடுமாறனை நாம் வாழ்த்துகின்றோம், இந்திய அரசின் சார்பில் ஈழவிவகாரங்களுக்கு அவரை தயக்கமின்றி நியமிக்கலாம் முதிர்ந்த அனுபவமும் வயதும் கொண்ட அவர் சரியான தேர்வு
“தளபதி” அண்ணாமலையாருக்கு நன்றி, சரியான பாதையில் செல்கின்றது தமிழக பாஜக
சிறப்பு பதிவு. மோடியின் ராஜ தந்திரம், அண்ணாமலையின் அரசியல் சதுரங்கம் போன்ற எல்லாம் சேர்ந்து இலங்கை இந்தியாவிடம் அடிபணிந்தது…
அருமையோ அருமை… பழைய கதை, புது கதை அனைத்தும் ஒரே பதிவில் உங்களால் தான் முடியும்… உங்கள் தேச பற்று வியக்க வைக்கின்றது..
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳
வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳