தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லையா?

Image may contain: outdoor

தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லை என்பதால் அது சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கபட்டது : உபி அரசு அறிவிப்பு

இந்த டெல்லி செங்கோட்டை சமுத்திர குப்தன் கட்டி வைத்ததா?

அசோகரின் சக்கரம் குறிப்பது என்ன? புத்தமதம் நேபாள இறக்குமதி அல்லவா? எடுத்துவிடலாமா?

மும்பையில் இன்றும் பல்லாயிரம் பயணிகளை தாங்கும் இன்றைய சிவாஜி ரயில் நிலையத்தை அன்றே விக்டோரியா டெர்மினல் என கட்டியது யார்?

நாடாளுமன்றத்தை கட்டியது யார்? அது என்ன இந்திய அடையாளமா?

இன்னும் ஏராளமான விஷயங்கள் ஆள வந்தவர்கள் கொடுத்தது, பண்டைய காலத்தில் இல்லா நுட்பம் வளர வளர பல கலைகோயில்கள் உருவாயின அதிலொன்று தாஜ்மஹால்

இந்நாட்டில் வாழ்ந்த எல்லோரும் இந்தியர்களே, இங்கு உருவாக்க பட்ட எல்லாம் இந்திய அடையாளமே

கம்போடியால் கட்டபட்ட அங்கோர்வாட் எனும் அதிசயம், கம்போடியாவின் பூர்வீகம் அல்ல, அதனை சுற்றுலா இடமாக அறிவிக்க மாட்டோம் என்றால் உலகம் நகைக்காதா?

அங்கோர்வாட்டை தவிர கம்போடியாவில் என்ன இருக்கின்றது?

தாஜ்மஹாலை தவிர அங்கு என்ன இருக்கின்றது?

இது தெரிந்ததால் என்னமோ அன்றே அதனை இடித்து லண்டன் தேம்ஸ் கரையில் அமைக்க துடித்தான் வெள்ளையன், பின் கர்சன் பிரபு அதனை காத்தார்

இவர்கள் இன்று செய்யும் அலப்பறை அன்று வெள்ளையன் செய்ய திட்டமிட்டது சரி என்றே எண்ண தோன்றுகின்றது.

எப்படிபட்ட பிரசித்தி பெற்றது தாஜ்மஹால்?

உலகபோர் காலங்களில் கருப்பு துணியால் மூடி அதனை காத்தான் வெள்ளையன் அதன் அருமை அவனுக்கு தெரிந்திருக்கின்றது

சுதந்திர இந்தியாவில் காந்தியினை கொன்றோம், இதோ தாஜ்மஹாலுக்கும் மிரட்டலாம்

ஆப்கனில் அதிசயமாக நின்ற பாமியான் புத்தர் சிலைகளை உடைத்த தாலிபன் காட்டுமிராண்டிதனத்திற்கும், சிரியாவில் கலை பொக்கிஷத்தை நொறுக்கிய ஐ.எஸ் இயக்கத்திற்கும் இந்த யோகி கும்பலுக்கும் என்ன வித்தியாசம்?

ஒன்றுமே இல்லை

ஒரு பைத்தியகார தனமான கூட்டத்தின் கையில் இத்தேசம் சிக்கினால் அது சுடுகாடாகிவிடும்

இருக்கும் மசூதியினை இடிப்போம், மசூதி போன்ற டூம் உடைய தாஜ்மகாலை புறக்கணிப்போம் என்பதெல்லாம் பைத்தியம் முற்றிய நிலை

இது மிக எளிதில் விட்டுவிட கூடிய விஷயம் அல்ல, இது மாபெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும்

தாஜ்மஹால் என்பது இந்திய சொத்து, அரசு அதனை காக்க எந்த எல்லைக்கும் செல்லவேண்டும், யோகி அரசுக்கு கடிவாளம் இடுவது நல்லது

இல்லையேல் ஆப்கன் தாலிபன் வரிசையில் இந்திய காவி பயங்கரவாதமும் இடம்பெற்றுவிடும், உலக அரங்கில் இந்தியா காட்டுமிராண்டிகள் நாடாகிவிடும்.

ஷாஜகான் தன் பெருமையாய் நினைத்த விஷயம் மூன்று

ஒன்று கோஹினூர் வைரம், இன்னொன்று அவன் மயிலாசனம், மூன்றாவது தாஜ்மஹால்

கோஹினூர் வைரத்தை மீட்கவேண்டும் என்ற கோஷம் நெடுநாளாக நீடிக்கின்றது, மயிலாசனம் ஈரானில் உண்டு அதனை மீட்கவும் நடவடிக்கை உண்டு

இன்று இந்த தாஜ்மஹால் விஷயத்தை கேள்விபட்டால் அந்நாடுகள் எல்லாம் வாய்விட்டு சிரிக்காதா? இனி திரும்ப தருமா?

சர்ச்சைகள் உண்டு என்றாலும் திப்பு சுல்தானின் வாளை மீட்டுவந்த அந்த விஜய்மல்லையா இவர்களை விட எவ்வளவோ பரவாயில்லை.

தாஜ்மஹாலையே புறக்கணிக்கும் இவர்களா இனி கோஹினூரையும், மயிலாசனத்தையும் தேடுவார்கள்???