தாதுமணல் பற்றி யாரும் பேசினால், சங்கமாய் பொங்கினார்கள் …. இன்று???
முன்பெல்லாம் தெற்கே தாதுமணல் பற்றி யாரும் பேசினால், சங்கமாய் பொங்குவார்கள்
50 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் தொழில் தெரியுமா? என பெரும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள், அந்த பிரச்சினையினை பேசிவிட்டு விஜயகாந்த் பட்ட பாடு கொஞ்சமல்ல
சீமான் முதல் நாடார் சங்கங்கள், நாகர்கோவில் பக்கம் எல்லாம் அப்படி சுனாமியாய் சீறினார்கள்
அப்பொழுது ஜெயா முதல்வராக இருந்தார்
இப்பொழுது தாதுமணல் தொழில் முடங்குகின்றது, நிச்சயம் அந்த 50 ஆயிரம் (அவர்கள் கணக்கு) குடும்பங்கள் பாதிக்கபட்டிருக்கும், ஆனால் எல்லோரும் அமைதி, நாடார் சங்கங்களும் மகா அமைதி
அப்படியானால் 50 ஆயிரம் குடும்பங்கள் எங்கே சென்றது?
அதாவது ஜெயா ஆட்சியில் 50 ஆயிரம் குடும்பங்களின் வாழ்விற்கு வேறுவழி தெரியாதலால் அது தொடர்ந்து நடந்தது
இப்பொழுது பொருளாதார நிபுணர் பழனிச்சாமி ஆட்சியில், தினகரனின் பெரும் வழிகாட்டலில் அந்த 50 ஆயிரம் மக்களுக்கும், நாடார் சங்கங்களுக்கும் மாற்றுவழி காட்டிவிட்டு தாதுமணல் தொழிலை முடக்கிவிட்டார்கள் என நாமாக நம்பலாம், பின் யார் நமக்கு சொல்வார்கள்?
ஒன்று சொல்லலாம்
மிக தைரியமாக தமிழகத்தில் குரல் எழுப்பிகொண்டிருந்தவர் விஜயகாந்த், அவரை சில இடங்களில் கலாய்த்துகொண்டிருந்தோம்
இந்தமாதிரி நேரத்தில் அந்த மனிதரை தேடத்தான் வேண்டியிருக்கின்றது
ஆனாலும் 50 ஆயிரம் குடும்பங்களை ஒரே நாளில் மாற்றுதொழிலுக்கு மாற்றிய பழனிச்சாமியின் சாதனை கொஞ்சமல்ல
அவர்கள் இப்பொழுது தொழில் மாறிய திருப்தியில் சங்கங்களும் மகா அமைதி என நாமாக நினைத்துகொள்ளவேண்டும்…