தானாக வந்து சிக்கி கொள்வதில் திமுக தலமையினை மிஞ்ச ஆளே இல்லை.
தானாக வந்து சிக்கி கொள்வதில் திமுக தலமையினை மிஞ்ச ஆளே இல்லை, கொஞ்சமும் விஷய ஞானம் இல்லாமல் வந்து தலையினை கொடுப்பதும், ஆப்பசைத்த குரங்காக சிக்கி கொள்வதும், பின் அப்படியே அமுங்கி கிடப்பதும் அவருக்கு விளையாட்டு
அந்த விளையாட்டுக்கு அவர் வைத்திருக்கும் பெயர் தமிழருக்கான அரசியல்
அப்படிபட்ட திமுக தலைவர் நேற்று குதிக்க ஆரம்பித்துவிட்டார், ஏ மோடி அரசே உபிக்கு ஏன் அதிக நிதி? தமிழனுக்கு ஏன் குறைவு நிதி? எம்பிக்கு ஏன் இல்லை நிதி, என் அப்பா கருணாநிதி , என் மகன் உதயநிதி என ஒரே சத்தம்
மேம்போக்காக பார்த்தால் இது சரியென தோன்றும் ஆனால் கொஞ்சம் சிந்தியுங்கள் உண்மை விளங்கும்
கொரோனா விவகாரத்தில் நிதி என்பது மக்கள் தொகையினையும் நெருக்கத்தையும் பொறுத்தது அப்படி நோக்கினால் உத்திர பிரதேசத்தில் மக்கள் தொகை மிக அதிகம்
தமிழ்நாட்டை விட சில மடங்கு அதிகம் எனும் வகையில் அங்கு அதிக நிதி ஒதுக்குதல் அவசியமே, மறுக்க முடியுமா?
மும்பையில் மிக கடுமையான நெருக்கடி நிலவுகின்றது, நாட்டின் பொருளாதார தலைநகர் அது, அதை காக்க கூடுதல் நிதி அவசியம், சென்னையினை விட மகா பெரிய நகரம் அது, மறுக்க முடியுமா?
இன்னொரு விஷயத்தை கவனியுங்கள், அங்குள்ள அரசுகள் டாஸ்மாக் நடத்தவில்லை, வட இந்தியா குடியினை ஊக்குவிக்கவில்லை மாநில வருமானம் குறைவு
அங்கு மாநில அரசுகள் இங்கு போல மகா வெட்டி செலவுகளை அரசியலுக்காக செய்யவில்லை, இலவச இம்சைகள் அங்கு குறைவு, நம்பி பணம் கொடுக்கலாம்
திமுக தலமை மறைக்கும் விஷயம் எம்.எல்.ஏ சம்பள விவகாரம்,, வட இந்திய எம்.எல்.ஏ சம்பளம் என்ன? தமிழக எம்.எல்.ஏ சம்பளம் என்ன?
முக ஸ்டாலின் வாங்கும் சம்பளம் என்ன? வடக்கே யோகி வாங்கும் சம்பளம் என்ன?
எமபி சம்பளம் குறைப்பு என குதிக்கும் திமுக தலமை, தமிழக எம்.எல்.ஏ சம்பளத்தை குறைக்க சொல்லவில்லையே ஏன்?
ஏன்? ஆக சுயநலம் என்பது எங்கே இருக்கின்றது?
இந்தியாவில் வெள்ளையன் நேரடியாக ஆண்ட பகுதியில் வளர்ச்சி அதிகம், மருத்துவ மனை மேம்பாடுகள் அதிகம்
தமிழகம் அப்படி அவன் ஆண்ட மெட்ராஸ் பிரசிடென்ஸி பகுதி, இங்கு வேலூர் மருத்துவ மனை முதல் ஏகபட்ட மருத்துவமனைகள் அவன் காலத்திலே இருந்தன
வடக்கே சுல்தான்களின் தயவில் வெள்ளையன் ஆண்டான், அவர்களை மீறி அவனால் பெரும் திட்டங்களை தீட்ட முடியவில்லை, வெள்ளையனை முழுக்க அனுமதித்தால் தன் அதிகாரம் போய்விடும் எனும் அச்சம் சுல்தான்களுக்கும் மகாராஜாக்களுக்கும் இருந்தன
தமிழகம் 1850களில் இருந்த நிலை, வடக்கே 1950க்கு பின்பேதான் வந்தது நம்மை விட நூறு ஆண்டு பின் தங்கிவிட்டார்கள்
ஏன் நேருவும் இந்திராவும் உலாவிய பகுதிகள் அவர்களாலே முன்னேற்ற முடியா அளவு சிக்கல், அந்த தோல்விதான் பின் பாஜகவினை கொண்டு வந்தது
ஆம் வடக்கே துறைமுகம் இல்லை, இன்னும் ஏகபட்ட இல்லை, அன்றைக்கு ஆறுகள் என்றால் இன்று துறைமுகம் இன்றி மானிட இனம் வளமாக வாழமுடியாது
தமிழகத்தில் திராவிட ஆட்சியால் மருத்துவம் வளர்ந்தது என சொன்னால் அதை விட சிரிக்க ஏதுமில்லை, வெள்ளையனும் காமராஜரும் அப்படி வளர்த்த தமிழகம் இது, அஸ்திவாரம் பலமானது
பின் வந்து தனியாருக்கு மருத்துவத்தை தாரை வார்த்தார்கள் , ராமசந்திரா உடையார், அப்பல்லோ, காவேரி, தெற்கே எஸ்.ஏ ராஜா என யாரெல்லாமோ வந்தார்கள், சர்தார் ராஜா பீகாரிலே மருத்துவ கல்லூரி கட்டினார்
வியாபார ரீதியாக இங்கு திராவிட கும்பல் மருத்துவம் வளர்த்தார்களே தவிர தமிழர் நலனில் அல்ல
அதில்தான் காமராஜர் அரசு மருத்துவர்கையிலே செத்தார், கக்கன் அரசு மருத்துவமனையில் செத்தார்
ஆனால் ராம்சந்தர் அவ்வளவு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கொடுத்தும் அமெரிக்கா ஓடினார், ஜெயா அப்பல்லோ ஓடினார்
கருணாநிதி ஆப்பரேஷன் என்றால் ராமசந்திரா ஓடினார், சிகிச்சைக்கு காவேரி ஓடினார்
தரமான தமிழக மருத்துவமனை கொடுத்திருந்தால் இவர்கள் ஏன் தனியாருக்கு ஓட வேண்டும்? ஆக பணமிருப்பவனுக்கு பணக்கார மருத்துவமனை , வாழ வழியற்றவனுக்கு அரசு மருத்துவமனை என உருவாக்கிய வர்க்க பிரிவு திராவிட கட்சிகள் செய்தது
வடக்கே அப்படி அல்ல, சுஷ்மாவும் ஜெட்லியும் அரசு மருத்துவமனையில்தான் உயிரை விட்டார்கள்
இதெல்லாம் தெரிந்தும் பிதற்றுவது சரியல்ல
வட இந்தியர்கள் நம் சகோதரர்கள், மத்திய அரசு மக்கள் தொகை பெருக்கம் எண்ணிக்கை அடிப்படையில் உபிக்க்கு முன்னுரிமை கொடுத்தது, சில மாகாணங்களுக்கு கொடுத்தது
தமிழகத்தில் வெட்டி செலவும், எம்.எல்.ஏ சம்பளமும் அதிகம் என்பது மத்திய அரசுக்க்கு தெரியாததல்ல அதனால் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்தது
மத்திய அரசு எம்பிக்கள் சம்பளத்தை குறைக்கின்றது
திமுக தலமை தமிழக மக்களின் நலனை குறித்து அக்கறை கொண்டது என்றால் எம்.எல்.ஏ சம்பளத்தை குறைக்கட்டும் பார்க்கலாம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கட்டும் பார்க்கலாம்
ஏன் முக ஸ்டாலின் எனக்கும் திமும எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் ஒரு வருடத்துக்கு வேண்டாம் என சொல்லட்டும் பார்க்கலாம்?
மோடி செய்வது சரியா? ஸ்டாலின் பம்முவது சரியா? எது நீதி? எது நியாயம்?
பின் தங்கிவிட்ட வடக்கத்திய நிலைக்கும் , மக்களின் பெருக்கத்துக்கும், சுகாதாரத்தின் ஏழ்மை நிலைக்கும் முன்னுரிமை கொடுத்து அம்மக்களுக்கும் வாழ கூடுதல் செலவழிப்பது சரியா? இல்லை தமிழ்நாட்டில் தியேட்டரிலும், அரசியல் கூட்டத்திலும், டாஸ்மாக்கிலும் வெட்டியாக செலவழிப்பது சரியா?
எம்.எல்.ஏ சம்பளம் சலுகை என கொட்டி கொடுப்பது சரியா?
தமிழ்நாட்டில் வந்து மாடினு கீழாய் உழைக்கும், நாயினும் கீழாய் சுருண்டு கிடக்கும் வடக்கத்திய தொழிலாளர்களை பாருங்கள்
சுல்தான்களும் மகாராஜாக்களும் அவர்களை சுரண்டினார்கள், பின் காங்கிரசாரும் சுரண்டினார்கள் அம்மக்கள் பிழைக்க வழியின்றி இதோ நம் கால்மாட்டில் கிடக்கின்றார்கள்
அப்படியானால் வடக்கத்திய நிலை என்ன?
60 ஆண்டுகளாக அவர்களை ஆண்ட காங்கிரஸ் என்ன செய்தது? இங்கேயே இப்படி வரும் மக்களின் வடக்கத்திய நிலை எப்படி இருக்கும்?
அவர்களுக்கு நோய்காலங்களில் வறுமை தாங்க உதவ கொஞ்சம் கூடுதலாக கொடுத்தால் என்ன தவறு?? அவர்கள் இந்தியர்கள் நம் சகோதரர்கள்.
இன்றே இவர்கள் நிலை இப்படி என்றால் 1950களில் எப்படி இருந்திருக்கும், அந்த கொடிய வறுமையில் அவர்கள் வாழ, அவர்களை போல் எளிய வாழ்க்கை காமராஜர் வாழ, மனசாட்சியினை கொன்று திராவிட புரட்டு அண்ணாதுரை சொன்னது என்ன தெரியுமா?
“வடக்கு வாழ்கின்றது,, தெற்கு தேய்கின்றது”
உண்மையில் தெற்கு வாழ்வாங்கு வாழ்ந்தது, கூடுதலாக ஆவடி, பெல், ஊட்டி தொழிற்சாலை எனவும் அணைகளாகவும் குவித்தார் காமராஜர்
வடக்கே அன்று எதுவுமில்லை, நொய்டா கூட உருவாகவில்லை
அந்த படுபயங்கர பொய்யினை அன்று அண்ணா சொல்லி தமிழரை நம்ப வைத்திருக்கலாம், அதே பொய்யினை இப்பொழுதும் சொல்லி திமுக தலமை தமிழரை ஏமாற்ற முடியாது, இது தமிழர் விழித்துவிட்ட காலம்
தொழில் மூடபட்ட நேரம், வேலைகள் நடைபெறா நேரம் அரசுக்கு வருமானமிராது, தமிழக அரசும் தப்ப முடியாது, நிச்சயம் எம்.எல்.ஏ சம்பளத்தை பூஜ்ஜியதுக்கு கொண்டுவர வேண்டிய நேரமிது
அம்மா உணவகத்தில் அவர்கள் உண்டு, அங்கேயே உறங்கி மக்கள் பணியாற்ற வேண்டிய நேரமிது, அவ்வளவு நெருக்கடியான காலம்
அதை ஏன் திமுக தலமை சொல்லவில்லை?
திமுக தலமைக்கு தைரியம் இருந்தால் பழனிச்சாமி சட்டையினை பிடிக்கட்டும், தியாகம் இருந்தால் எம்.எல்.ஏ சம்பளம் வேண்டாம், திமுக வீண் அரசியல் மாநாடு நடத்தாமல் பணத்தை மிச்சபடுத்தி அரசுக்கு வழங்கும் என சொல்லட்டும்
அவரின் கலைஞர் டிவி ஒரே வருடத்தில் வாங்கிய 200 கோடி ரூபாயினை திருப்பி கொடுக்கும் அளவு சம்பாதித்தோம் என உச்சநீதிமன்றத்திலே கணாக்கு காட்டிய டிவி, அப்படியானால் இந்த 10 ஆண்டுகளில் இரண்டாயிரம் கொடி சம்பாதித்திருக்குமே, அதெல்லாம் எங்கே? அதிலிருந்து கொடுக்கட்டும்
மாறாக மத்திய அரசை சீண்டிகொண்டே இருந்தாலோ, நாட்டின் மகா முக்கிய நெருக்கடி காலத்தில் சுயநல அரசியல் செய்தாலோ தேசபக்தர்களாகிய நாம் உரிய விளக்கத்தை மக்களுக்கு இப்படி சொல்லிகொண்டே இருப்போம்
8 கோடி தமிழரில் 8 பேர் இதனால் உண்மையினை விளங்கி கொண்டாலும் எமக்கு மகிழ்ச்சியே , எம் கடமையினை சரியாக செய்த திருப்தியினை அது கொடுக்கும்