தாமரையின் உளரல்
தமிழ், தமிழர் என அந்நிய தீவில் இருந்து தமிழர்களை நாடு நாடாக ஓட செய்த அந்த அவலம் இங்கு வேண்டாம், அப்படி உங்களுக்கு இந்நாடு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் தொப்புள்கொடி உறவுகள் போல தானாக வெளியேறலாம்
அங்கு இப்படித்தான் தமிழ் தமிழ்தேசியம் என சொல்லி வெறியேற்றி கடைசியில் தமிழீழம் நாடு கடந்ததும் பல்லாயிரகணக்கான மக்கள் செத்ததும்தான் மிச்சம், வேறு என்ன கிழித்தார்கள்?
தமிழ் தமிழர் அங்கு நடந்த அழிவெல்லாம் இங்கும் நடக்கவேண்டும் என்பதெல்லாம் அபத்தம், தமிழன் என்றால் எல்லோருடனும் சண்டையிட்டு சாகவேண்டும் என்ற மடமை ஆபத்தானது
இந்நாட்டில் மலையாளி, மராத்தி, வங்கமெல்லாம் கவிஞர்கள் உண்டு, அவர்களுக்கு இல்லாத பெரிய மொழிபற்று இவருக்கு வந்ததாக குதிப்பது சரியல்ல
தமிழும் இந்துமதமும் பிரிக்கமுடியாதவை, இந்துமதம் சொன்ன ஒரு வழிபாடுதான் தமிழ்
ஒளவையும், கம்பனும், கண்ணதாசனும் எழுதாத எதையும் நீங்கள் எழுதவுமில்லை எழுதவும் முடியாது, இந்துமதத்தில் கலக்கா எந்த தமிழும் நிலைக்காது
ஆளில்லா காட்டில் மரத்தில் நாலுவரி கிறுக்கிவிட்டு நானேதான் தமிழுக்கு முழு அடையாளம் தலமை என பேசுவதெல்லாம் அபத்தம்
கவிஞர்கள் உணர்ச்சியில் பாட்டெழுதலாம் ஆனால் அரசியல் பேசினால் மகா ஆபத்து, அம்மணி இந்த குழப்பான சிந்தனை எல்லாம் நிறுத்திகொள்வது நல்லது
இப்படியெல்லாம் பேசித்தான் ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல் கிடைக்குமென்றால் அம்மணியின் நிலை மிக மிக பரிதாபமானது
இங்கு இப்படியெல்லாம் பேசும் உரிமையினை யார் இவருக்கு கொடுத்தது என்பதுதான் தெரியவில்லை, இதெல்லாம் வலுத்த கண்டனத்திற்குரிய விஷயங்கள்
“இது இந்து ஆன்மீக மண்,
இந்தியாவே எங்கள் அரசியல்,
இந்து தமிழர் என்பதே எங்கள் அடையாளம்
இதனை ஏற்றுகொள்ளமுடியாத யாரும் வெளியேறலாம், எங்கள் செலவில் டிக்கெட் எடுத்து தரப்படும்”