“தாமரை ஆட்சியை தமிழகம் காணட்டும்”: பொன்னார் புத்தாண்டு வாழ்த்து
“தாமரை ஆட்சியை தமிழகம் காணட்டும்”: பொன்னார் புத்தாண்டு வாழ்த்து
கவிஞர் தாமரை ஆட்சியினை காண எங்களுக்கும் ஆசைதான், தமிழாவது நிச்சயம் காப்பாற்றபடும்..
தமிழ் புத்தாண்டு அன்று ஒரு தமிழ் கவிஞரை ஆட்சிக்கு அழைக்கின்றார், வாழ்த்துக்கள்,
பெரியார் கொள்கையினை போற்றும் கவிஞர் தாமரையினை ஆட்சிக்கு அழைப்பதில் பொன்னாரின் பெருந்தன்மை தெரிகின்றது..
அந்த அர்த்ததில்தான் பொன்னார் சொல்லியிருக்க முடியும்,
மற்றபடி ஆயிரம் “பன்னீர்” குளங்கள் வந்தாலும் அதில் “அந்த” தாமரை தமிழகத்தில் மலராது என்பது பொன்னாருக்கு தெரியாததா?
தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்ற தான் போகிறது, அதை ஸ்டாலின் பார்க்க தான் போகிறார் – தமிழிசை
எந்தக்கால்? உங்களை போல சொந்தகாலா இல்லை பன்னீர் போன்ற செயற்கை காலா?
சொந்தக்கால் என்றால் அது போலியோ கால்
, அதனை ஊன்றி என்ன செய்வீர்கள்?, செயற்கை கால் எல்லாம் ஓட்டபந்தயத்திற்கு உதவாது
ஆக ஆட்டத்தில் வெறும் பார்வையாளராக அமர்ந்திருக்க எந்த காலை ஊன்றினால் என்ன அம்மணி?