தாழ்த்தபட்டவருக்கான பாதுகாப்பு சட்டம்
தாழ்த்தபட்டவருக்கான பாதுகாப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை மாறாக அதை தவறாக உபயோகபடுத்துவதை தடுக்க சில மாறுதல்களை செய்திருக்கின்றது
எல்லா விஷயத்திலும் நன்மையும் தீமையும் உண்டென்பது போல சாதிய வன்கொடுமை சட்டமும் சில இடங்களில் பழிவாங்க பயன்படுவது ஒன்றும் ரகசியமல்ல
நியாயம் அவர்கள் பக்கம் இல்லாவிட்டாலும் பல இடங்களில் சாதிய வன்கொடுமை எனும் சட்டம் அநியாயமாக பலரை காத்தது
சிலரின் ஆயுதமாகவே அச்சட்டம் ஆகிபோனது. இதனால் பாதிக்கபட்ட அப்பாவிகள், அச்சட்டம் பாய்ச்சபட்டு அநியாயமாக அமைதியானவர்கள் ஏராளம் உண்டு,
ஏன் சொத்துக்களை இழந்தவர்களே உண்டு
விசாரணையின்றி “என்னது? சாதி பெயரை சொல்லி திட்டினானா?” என கேட்டு தகுந்த விசாரணையின்றி சாதிய வன்கொடுமையில் தண்டிப்பதும் , இந்த பொடா தடா சட்டங்களும் ஒன்றுதான்
இந்த சட்ட திருத்தத்தால் தலித்துக்களின் உரிமை ஒன்றும் பாதிக்கடாது, உரிய ஆதாரமும் சாட்சிகளும் இருக்கும் பட்சத்தில் நியாயம் நிச்சயம் கிடைக்கும்
இதனை தீவிரமாக எதிர்ப்பது எல்லாம் அரசியலே அன்றி வேறல்ல
இந்த சட்ட தளர்வினை எதித்து முக ஸ்டாலின் எல்லாம் கொதிக்கின்றார் என்கின்றார்கள். இது திமுகவிற்கு பின்னடைவினை கொண்டுவருமே தவிர நிச்சயம் நற்பெயரை பெற்று தராது