தினகரன் ஆர்கே நகரில் ஜெயித்துக் கொண்டிருக்கின்றார்…
நினைத்தது போலவே, எல்லோரும் பயந்தது போலவே தினகரன் ஆர்,கே நகரில் ஜெயித்துகொண்டிருக்கின்றார்
ஆக நாங்கள்தான் அதிமுகவினை நடத்தியவர்கள், எப்படி வாக்குகளை வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என செவிட்டில் அடித்து நிரூபித்திருக்கின்றது சசிகலா கோஷ்டி
இரட்டை இலை இல்லாவிட்டாலும் எங்களால் வெல்லமுடியும் என யார் முகத்தில் எல்லாமோ கரிபூசுகின்றது அக்கோஷ்டி
ஜெயாவிற்கு பின் அவர் தொகுதியினை கூட விடமாட்டோம் என வந்து நிற்கின்றார்கள் சசிகலா அணியினர்
இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். யார் இல்லை, சின்னம் இல்லை என்றாலும் வெல்வோம் என தினகரன் தில்லாக நிற்க, கலைஞர் இல்லை என்றால் நாங்கள அம்பேல் என மவுனமாக சொல்கின்றது திமுக
கலைஞர் இல்லாமல் ஒரு தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்கமுடியாத நிலை எங்களுக்கு என்பதை எங்கு சென்று அழுது தீர்ப்பார்களோ தெரியாது
பிரிந்துகிடக்கும் எதிர்கட்சியினை கூட வெல்லமுடியா கட்சி இனி என்ன செய்யபோகின்றதோ தெரியவில்லை
ஸ்பெக்ட்ரமில் திமுக வென்றிருக்கலாம், ஆனால் நிஜமான சோதனை இனிதான் காத்திருக்கின்றது. நிச்சயம் இது மாபெரும் , மகாபெரும் சறுக்கல்
வெல்வதற்கு திமுக முயற்சித்ததாகவும் தெரியவில்லை, வேட்பாளர் தேர்வு முதல் எல்லாமே கடமைக்கு நடந்தது தெரிந்தது. கூட்டணியும் அமைக்கவில்லை, ஒரு வியூகமும் இல்லை
அரசியல் விமர்சகர்கள் தினகரன் வெல்வதையே திமுக விரும்புகின்றது என்றார்கள், அது நடந்தேறியாயிற்று
பணம் விளையாடியிருக்கின்றது, பாதாள சாக்கடை வழியாக எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் வேறுவிஷயம், அதனை தாண்டி ஜெயா இறந்ததிலிருந்தே மிக சரியான கண்காணிப்பில் ஆர்.கே நகரை கொண்டுவந்து வென்றிருக்கின்றாகள் என்பது உறுதி
இந்த வோட்டுமெஷினில் கோல்மால் செய்யலாம் என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை
மோடி வென்றால் வாக்கு மெஷினில் தில்லுமுல்லாம், தினகரன் எப்படி வெல்கின்றார் என்றால் ஒரு பதிலும் வராது
தினகரன் தன் சோதனையில் இருந்து வெளிவர, திமுக மிகபெரும் சோதனை காலம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது
நமக்கு என்ன வந்தது? மகிழ்வோ துக்கமோ குஷ்பு படம் பார்த்து கடந்து செல்வது சங்கத்து வழக்கம், அப்படி உத்தமராசா, கிழக்கு கரை என தலைவி கொடுத்த காவியங்களை பார்த்தபடி இந்த ஆர்,கே நகர் தேர்தலை கடந்து செல்கின்றது சங்கம்
இனி அது ராதா கிருஷ்ணன் நகர் அல்ல, ராத்திரி கள்ளர்கள் நகர்