தினதந்திக்கு பவள விழாவாம் …
தினதந்திக்கு பவள விழாவாம்
அதன் சிறப்புகள், அது பாமரனையும் படிக்க வைத்தது, அது வாசிக்க வைத்தது என்றெல்லாம் பலபேர் கிளம்புவார்கள்
எமக்கு தெரிந்தது இதுதான்
தமிழ் சுத்தமாக கெட்டுபோக அந்த பத்திரிகை ஒரு காரணம், நாட்டுபற்று பற்றியெல்லாம் அதில் அதிகம் இருக்காது மாறாக எது இருக்க கூடாதோ அது நிரம்பி இருக்கும்.
“அழகி” எனும் அற்புத தமிழ்வார்த்தையினை உவ்வே வார்த்தையாக்கியதும் , இன்னும் பல தமிழ்வார்த்தைகளை சமூகம் அருவெறுப்பாக பார்க்க வைத்ததும் அதன் தமிழ்தொண்டு
தமிழகத்தில் சினிமா செய்திகள் நிரம்பிய குப்பையாக நாளிதழ்கள் வரும் கொடுமையினை தினதந்திதான் தொடங்கிற்று
புலிகளை பெரும் வீர்களாக, இல்லாத பொய்களை எல்லாம் சொல்லி அவர்களை தியாகிகள் ஆக்கியதில் தினதந்தியின் தேசதுரோகம் நிறைய உண்டு
சுருக்கமாக சொல்லலாம்
தமிழரை வாசிக்க வைத்ததே தவிர சிந்திக்கை வைத்த பத்திரிகை அல்ல அது. சினிமா செய்திகளை பிரமாண்ட செய்திகளாக்கியதை தவிர அதன் சாதனை என ஒன்றும் சொல்வதற்கில்லை
சமூக கருத்துக்கள் இருக்காது மாறாக கலாச்சார சீரழிவு செய்திகளை பெரும் பரபரபாக்கி வெளியிடும் காரியத்தை தினதந்திதான் தொடங்கிற்று
தமிழை அது வளர்க்கவில்லை, மாறாக தமிழர் தமிழர் என சொல்லி சம்பாதித்துகொண்டது மட்டும் நிஜம்
ஆளும் கட்சிக்கு எப்படி ஜால்ரா அடிக்கவேண்டும் என பாடம் நடத்திய பத்திரிகை அது
அப்படி இப்பொழுது மோடி பஜனை நடக்கின்றது, பஜனை நடக்கும் இடத்திற்கு சாமி வராவிட்டால் எப்படி
பவளவிழாவிற்கு மோடி வருகின்றாராம்
ஆக 75 ஆண்டுகளாக தமிழை, தமிழகத்தை கெடுத்த பத்திரிகைகளில் முதலிடம் தினதந்திக்கு உண்டு