தினமலர் பத்திரிகை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழல்

Image may contain: 1 person, smiling

தினமலர் பத்திரிகை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழல் என்பது மறுபடியும் நிரூபிக்கபட்டாயிற்று

குரங்கணி விபத்தில் உண்மையில் தீவிரமாக செயல்பட்டது மாவட்ட கலெக்டர். அதை போன்றே அரசு மருத்துவகுழுவும் மிக தீவிரமாக பணியாற்றியது

மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் தீவிர பணியாற்றினர், அவர்கள் சேவை வாழ்த்துகுரியது

ஆனால் தினமலர் கண்ணுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் தெரிந்திருக்கின்றார்கள், தீ பிடித்ததும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தீயில் குதித்து குதித்து காப்பாற்றினார்களாம்

நல்ல வேளையாக மோடி விமானத்தை எடுத்துகொள்ளுங்கள் என சொன்னவுடன் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தங்கள் சொந்த செலவிலே பெட்ரோல் போட்டு , அவர்களே இயக்கி பறந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர், கயிற்றில் தொங்கி மீட்டனர் என்றெல்லாம் எழுதவில்லை

அதுவரைக்கும் நல்லது

அடுத்தமுறை அப்படி எழுதி தங்கள் ஆர்.எஸ்.எஸ் அபிமானத்தை தினமலர் நிரூபிக்குமாறு கேட்டுகொள்கின்றோம்

தமிழகமே பதை பதைத்தது, இனம் சாதி மதம் வேறுபாடு இன்றி எல்லா மக்களும் தவித்தனர், அப்பகுதியில் இருந்தோர் அனைவரும் உதவினர்

இதில் ஆர்.எஸ்.எஸ் மட்டும் முண்ணணியில் இருந்தது என்பது எவ்வளவு பெரும் பொய்

எங்கே? அந்த ஆர்.எஸ்.எஸ் கச்சதீவு பக்கம் சென்று சிங்கள கடற்படை சுடவரும்பொழுது மீணவர்களை காத்து மீட்கட்டும் பார்க்கலாம்?