திப்பு சுல்தான்
உலகிற்கு எல்லாம் ஒரு நீதி என்றால் இந்தியாவிற்கு தனி நீதி, அதுவும் கன்னட நீதிமன்றங்களுக்கு தனியாக ஒரு சட்ட்டமும் நீதியும் போலும்
நீதிபதி குமாரசாமியின் கணக்கிலே அது தெளிவாக தெரிந்தது, இப்பொழுது திப்பு சுல்தானுக்கு தீர்ப்பிட்டு மறுபடியும் தங்களை நிரூபித்திருக்கின்றார்கள்
நிறைய வாட்டாள் நாகராஜ் நீதிபதிகளாக அங்கு இருக்கின்றார்களா? அல்லது அங்கு கால்வைத்தவுடன் புத்தி மாறுகின்றதா என தெரியவில்லை, மண் ராசி அப்படி.
ஆனால் அதே மண்ணில்தான் அடிபணியா ஒரு மாவீரன் இருந்தான் அந்த் திப்பு சுல்தான் வரலாற்றை பார்க்கலாம்
இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள்.
எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும்.
இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், உண்மையில் ஹைதர் அலி சாதாரண பணியாளர்தான், ஆனால் சீர்கெட்டு கிடந்த மைசூர் சாம்ராஜ்ய நிர்வாகத்தை, ஒரு நாட்டுபற்றாளனாய் நின்று காப்பாற்ற அரியணை ஏறி அதனை செய்தும் காட்டினார்.
ஆங்கிலேயருக்கு பெரும் சிம்மசொப்பணமாய் இருந்தவர் ஹைதர் என்றால், அவர்களுக்கு புலிசொப்பனமாக இருந்தவன் மாவீரன் திப்பு சுல்தான். அவனது ஆட்சி அப்படி, நிர்வாகம் அப்படி,எல்லாவற்றிற்கும் மேல் அவரது மதசகிப்புதன்மை அப்படி.
ஹைதருக்கு பின்னால் மைசூர் அவ்வளவுதான் என இளம் திப்புவினை எடைபோட்டு வந்தனர் வெள்ளையர்.
முதல் மைசூர்போரில் அடிபடும்பொழுதே ஆங்கிலேயருக்கு தெரிந்தது, “இவன் வேறமாதிரி” என்று, இரண்டாம் மைசூர் போரில் வெள்ளையனுக்கு திப்பு உயிர்பிச்சை அளித்தபொழுதே தெரிந்தது இவன் வெல்லமுடியாதவன் என்று.
அப்படித்தான் இருந்தார் திப்பு,
பிரென்ஞ் மாவீரன் நெப்போலியன் தன் காலத்தில் ஒரு சகவீரனை மதித்து ராணுவ உதவி அளிக்க தயாராக இருந்தார் என்றால் அது திப்பு மட்டுமே, காரணம் வீரனின் பெருமை வீரனுக்குத்தான் தெரியும்.
ஆனால் ஐரோப்பாவில் பலபோர்களில் அவர் பிசியாக இருந்ததால் உதவிக்கு வரமுடியவில்லை.கொஞ்சமும் சோர்ந்துபோகாத திப்பு சுல்தான் மூன்றாம் மைசூர் போரில், 500 அடிவரைபாயும் ஏவுகனைகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை அலறவிட்டார், உண்மையில் அந்தபோரோடு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவினை விட்டே ஓடும் நிலைக்கு தள்ளபட்டது, திப்புவின் வெற்றி நிலை அப்படி.
படைகளால் வெல்லமுடியாத அம்மாவீரனை வேறுமாதிரி அடக்க எண்ணினர் வெள்ளையர், அதாவது அவன் இஸ்லாமியனாக இருந்தாலும் எல்லா மதங்களையும் நேசித்தார்,மதித்தார். புகழ்பெற்ற சிரிரங்கபட்டினம் ஆலயத்திற்கு அவர் அள்ளிகொடுத்த நகைகளும், சிலைகளுமே அதற்கு சாட்சி.
கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.
இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.
சுருக்கமாக சொல்வதென்றால் திப்பு வீழ்ந்தபின் வெள்ளையன் வாய்விட்டு சொன்னான்” இனிமேல்தான் இந்தியா நமக்கானது”
இன்றுவரை அவர் கழுத்தில் பாய்ந்த குண்டினை செலுத்தியது வெள்ளையனா? என்ற சந்தேகம் உண்டு.
ஆனால் இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.
அந்த சிரிரங்கபட்டிண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்று முகநூல் வரை அந்த பிரிவினை வளர்ந்து நிற்கவும் காரணம்.
நிச்சயமாக அவன் மாவீரன், இந்த மண்ணிற்கு கிடைத்தவரம். இன்றும் அவன் பயன்படுத்திய ஏவுகனையின் வடிவம் அமெரிக்காவில் உண்டு.
ஏவுகனை உலகின் பிதாமகன் வான் ப்ரவுண் நெற்றியில் அடித்தார்போல் சொன்னார் ” நான் ஒன்றும் கண்டுபிடிப்பாளன் அல்ல, திப்புசுல்தான் எனும் இந்தியனின் கண்டுபிடிபினை மேம்படுத்தினேன்”.
அதனாலதான் அமெரிக்கன் அப்துல்கலாமினை அப்படி சொன்னான், இவர் “இரண்டாம் திப்புசுல்தான்”.
இன்று மனசாட்சியே இல்லாமல் அவரை திட்டி தீர்க்கின்றார்கள், அந்தோ பரிதாபம். இவர்களுக்கும் இறுதியுத்ததில் வெள்ளையருக்கு கதவினை திறந்துவிட்ட அந்த தேசதுரோகிக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?
மாவீரன் மருதநாயகம், மாவீரன் திப்புசுல்தான்,சீக்கியர்களின் ரஞ்சித் சிங் இவர்கள் எல்லாம் வெள்ளையரை எதிர்த்த அடையாளம் அல்லவா? இவர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்தியர்கள் இல்லை என்பது நிச்சயம் கண்டிக்கதக்கது.
ஒரு இந்து ஆலய திருவிழாவில் புனிதமான தேர், இந்து உயர்சாதியினரால் கொளுத்தபடும் கொடூரத்தினை கண்டிக்க தயங்குபவர்கள், ஒரு தாழ்த்தபட்ட மாணவி நல்லமதிப்பெண் எடுத்ததால் கொல்லபடும் கொடுமையில் கண்மூடிகொள்பவர்கள், இன்னும் கொழுத்த நிலையிலிருந்தாலும் இடஓதுக்கீடும் எமக்கே என கொடி உயர்துபவர்களர்கள்.
என இந்த தேசவிரோதிகளை எல்லாம் மதத்தின் பெயரால் கண்டிக்க தயங்குபவர்களுக்கு,
எல்லா மதத்தினரையும், எல்லா ஆலயங்களையும் மிக சமமாக கருதி, குறிப்பாக இந்து ஆலய அடையாளங்களை பாதுகாத்த அந்த மாவீரனை பழிக்க ஒரு தகுதியும் இருப்பதாக உண்மையான தேச அபிமானிகள் நினைக்கவே மாட்டார்கள்.
பெரும் வீரனாயினும், ஒரு பக்கபலம் இல்லாமல் போரிட்டான் திப்பு. மராட்டியர் உதவிக்கு வரவில்லை, மலையாள மன்னர்களும் உதவிக்கு வரவில்லை, அப்படி ஒற்றுமையாக வந்திருந்தால் அன்றே வெள்ளையன் கதை முடிந்திருக்கும், இந்திய வரலாற்றில் பெரும் தவறு இது.
தூரத்தில் நெப்போலியன் உதவ தயாராக இருந்தும், பக்கத்து நாட்டுகாரர்கள் முகம் திருப்பி வெள்ளையரோடு கைகோர்த்தார்கள் அல்லவா? இங்குதான் இந்தியாவின் தலைவிதி திருத்தி எழுதபட்டது.
அந்த தவறினை செய்துதான் இந்நாடு இப்படி பின் தங்கிவிட்டது, இன்னும் அவன் இஸ்லாம் என்றே சொல்லி அதே தவறினை செய்வீர்களாயின் இந்நாடு இன்னும் 100 வருடம் நிச்சயம் பின்னோக்கி சென்று, ஆப்கன் நிலையினைத்தான் அடையும்.
இவர்கள் சொல்வதனால் எல்லாம் அம்மாவீரனின் புகழ் மங்காது. இந்தியாவின் புலி என வெள்ளையன் எழுதிவைத்த சரித்திரமும். அவன் அடக்க சடங்குகளில் வெள்ளையர் காட்டிய உயர் மரியாதையும் காலத்தின் கல்வெட்டு பக்கங்கள்.
அவன் உருவாக்கிய அந்த ஏவுகனை அவனின் அறிவுதேடலுக்கு பெரும் சாட்சி,
அவ்வளவு ஏன் அவர் இறந்த பின் அந்த வாளினை வீசிபார்த்தோர் ஆச்சரியத்தில் உறைந்தனர், அது பல மூலிகை இன்னும் பல உலோகளால் ஆன எடை மிக குறைந்த மகா உறுதியான வாள், அதிலே அவனின் ஆற்றல் தெரிந்தது.
திப்புசுல்தான் மங்கா புகழ்பெற்ற மாபெரும் உச்ச வரலாற்று நட்சத்திரம்,
இவர்கள் “வாள் வாள்” என கத்துவதால், அவனின் வாளின் பெருமை கூட குறைந்துவிடாது.
பொதுவாக வெள்ளையர்கள் வரலாற்றினை மறைப்பார்கள், ஆப்ரிக்கா இருண்டகண்டம் என்பார்கள் அப்படியானால் தொன்மைமிக்க எத்தியோப்பிய வரலாறு என்னவென்றால் சொல்லமாட்டார்கள்.
அலெக்ஸாண்டரும், நெப்போலியனும் மாவீரன் என்பார்கள். அப்படியானால் மாமன்னன் சலாவுதீன் யாரென்றால் பதில் இருக்காது. பெரும் பேரரசு பிரிட்டனுடையது என்பார்கள்.
அப்படியானால் உங்களை துருக்கி எல்லையில் 400 ஆண்டுகால்ம் உட்புகாமல் கடல்வழியே விரட்டினானர்களே ஆட்டோமான் துருக்கியர் வீரம் எப்படி என்றாலும் பதில் இருக்காது.
சீசர் உலகை வென்றான் என்பார்கள், மங்கோலியாவின் செங்கிஸ்கான் ஐரோப்பாவினை ஆண்டிருக்கின்றான் என்பதை கவனமாக மறைப்பார்கள்
அவர்கள் அவர்கள் இனத்தினை பெருமையாக சொல்லிகொள்வர். நாம் அப்படி அல்ல.
சொந்தமண்ணில் வாழ்ந்த ஒரு மாவீரனை, அதுவும் மும்முறை எதிரிகளை ஓடவிரட்டி உயிர்பிச்சை அளித்த உத்தமனை வெறும் மதத்தின் பெயரால் பழிப்பதும், அவன் சிலையினை அனுமதிக்கமாட்டோம் என ஒப்பாரி வைப்பதும் அறிவுடமை ஆகாது.
எப்படியும் கத்துங்கள், கொலை மிரட்டல் கூட விடுங்கள். ஆனால் மாற்றவே முடியாதது வரலாறு. அதுவும் இந்திய வரலாற்றில் திப்புவின் இடத்தை ஆங்கிலேயனால் கூட மறுக்க முடியாது.
நாட்டுபற்று, போர் நுட்பம், குதிரை பராமரிப்பு, எடையில்லா வாள், ராக்கெட் வீச்சு, கோட்டை பாதுகாப்பு, சமய சகிப்பு என எல்லா பக்கமும் அம்மாவீரனின் முத்திரை பெரிது.
அதில் ஒரு சிறு துரும்பினை கூட யாரும் மாற்றமுடியாது.
ஆனால் ஒரு காலத்தில் நாட்டுபற்றுள்ள சமூகம் மதத்தினை தாண்டி எழும், அது நாட்டை நேசிக்கும், பழம் வரலாறுகளை தோண்டி எடுக்கும். அன்று திப்புவிற்கு காணும் இடமெல்லாம் சிலை வைக்கபடும்.
அன்று இவர்களை எப்படி எல்லாம் அத்தலைமுறை தூற்றி விரட்டும், அது பின்னாளில் நடக்கும். நிச்சயம் நடக்கும்.
திப்பு சுதந்திர தியாகி அல்ல என்றால், கட்டபொம்மன், மருது எல்லாம் அவ்வரிசையில் வரமாட்டார்கள் அல்லவா?
அப்படியானால் யார் தியாகி?
நிச்சயம் கோட்சேவும், ஜின்னாவும் . இந்திய சுதந்திரத்திற்காக இந்த தியாகிகள் பட்ட சிரமும் அவர்களின் வீர வரலாறும் விரைவில் இந்திய கல்வெட்டுக்களில் பதிக்கபட்டாலும் ஆச்சரியமில்லை.