திமுகவின் மதுவிலக்கு என்னாயிற்று?

சட்டசபையில் ஒரு விசித்திர சண்டை நடந்திருக்கின்றது, மதுகடை பார்களை ஏன் ஏலம் விடவில்லை என சீறியிருகின்றார் திமுக எம்.எல்.ஏ ரகுபதி

அமைச்சர் தங்கமணியோ மிக பொறுப்பாக “ஏலம் எடுக்க யாரும் வரவில்லை அதனால் ஏலம் விடவில்லை” என்றிருக்கின்றார்

“எவன் சொன்னான்?, நீங்கள் ஏலம் விடுவீர் என நாங்கள் காத்திருந்தோம் ஏமாற்றிவிட்டீர்கள் , ஏலம் விடுங்கள் எங்கள் கட்சிக்காரன் எடுத்து நடத்துவான்” என தன் பெரும் எதிர்பார்ப்பை சொல்லிவிட்டார் ரகுபதி

“அப்படியானால் திமுகவின் மதுவிலக்கு என்னாயிற்று? “என அதிமுக கேட்க, “அது ஆட்சிக்கு வந்தபின் செய்வோம் இப்பொழுது மதுகடை கிடைத்தால் நடத்துவோம்” என சொல்லிவிட்டார் ரகுபதி

இதை கேட்டு ஸ்டாலின் கதறி அழுது தலையில் அடித்திருப்பார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

எப்படிபட்ட ஆட்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றார்கள் பார்த்தீர்களா? கலைஞர் மகா அமைதியானதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை