திமுகவின் வாரிசாக 3ம் கலைஞர் உதயநிதி வந்துவிட்டார்

Image may contain: 1 person, smiling, close-up

ஈழத்தில் பிரபாகரன் என்றொருவர் போராளியாக இருந்தார், தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தார்

ஆனால் பல போராளிகுழுக்கள் வர வர அவருக்கு என்னமோ ஆனது, எல்லோரையும் விரட்டினார் கொன்றார்

தான் ஒருவன் மட்டும் சிங்களனை வெல்லலாம் என நம்பினார், பெரும் தவறுகளை செய்தார்

கடைசி நேரத்தில் தன் தவறுக்கெல்லாம் காரணம் தான் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு தான் மட்டும் வந்தது என்பதை உணர்ந்தார், அத்தோடு செத்தார்.

Image may contain: 1 person, smiling, glasses, selfie and close-upநல்ல வாரிசை உருவாக்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அதனால் ஈழ போராட்டமே ஓய்ந்தது என அழுத பிரபாகரன் சொர்க்கத்தில் இருந்து பார்த்தபொழுது அங்கிள் சைமன் நான் பிரபாகரனின் வாரிசு , நானே அடுத்த போராளி என பொங்கிகொண்டிருக்கின்றார்

இப்பக்கம் கலைஞரும் அப்படியே கலங்கிகொண்டிருக்கின்றார்

ஆம் திமுகவின் வாரிசாக 3ம் கலைஞர் உதயநிதி வந்துவிட்டார்.

Image may contain: 1 person, smiling, sunglassesநல்ல வாரிசுகளை உருவாக்கா எந்த இயக்கமும் நிலைக்காது

அண்ணா அப்படி உருவாக்கிவிட்டதாலே திமுக இன்றளவும் நிற்கின்றது. தன் மனைவியோ அல்லது வளர்ப்பு மகனையோ அண்ணா நிறுத்தி இருந்தால் 1970லே திமுக அழிந்திருக்கும்

அத்வாணி அப்படி செய்திருந்தால் மோடி உருவாகி பாஜக அசுரபலமாய் வளர்ந்திருக்காது

உரிய நேரத்தில் நல்ல தலமை கிடைத்திருந்தால் ராகுல் எனும் அனுபவமில்லா கையில் காங்கிரஸ் சிக்கி நாடு நாசமாக வழி இருந்திருக்காது

நல்ல தலைவர்களை உருவாக்கிவிட வேண்டியது பெரும் தலைவர்கள் கடமை

அண்ணாவும் அத்வாணியும் அதனை செய்தனர்

பிரபாகரனும், ராமசந்திரனும், கலைஞரும் அதனை சுத்தமாய் செய்யவில்லை

விளைவு

சீமானும், தினகரனும், மூன்றாம் கலைஞரும் வந்திருக்கின்றனர், இந்த கொடுமையினை காண நமக்கு விதிக்கபட்டிருக்கின்றது

ஆளாளுக்கு தளபதி, உதயநிதி என முட்டு கொடுங்கள்

ஒன்று நினைவில் கொள்ளுங்கள்

இன்று அதிமுக சந்திக்கும் சிக்கலை நாளை ஆட்சிக்கு வரும்பொழுது திமுகவும் சந்திக்கும். ஆளாளுக்கு தனிகொடி பிடிப்பார்கள்

அதனை எல்லாம் கடந்து கட்சியினை கொண்டு செல்ல அனுபவமும் அறிவும் திறனும் கொண்ட தலைவர்கள் வேண்டும்

சும்மா இப்பொழுது 3ம் நான்காம் கலைஞர் என யாரையும் சொல்லலாம், ஆனால் சுழன்றடிக்கும் எதிர்ப்பு அலை வந்தால் இவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள்

புலிகள் போல , அதிமுக போல, காங்கிரஸ் போல‌ திமுகவும் பெரும் வீழ்ச்சியினை சந்திக்கும் முன்னால் 3ம் கலைஞரை முட்டு சந்திதோடு நிறுத்துவது கட்சிக்கு நல்லது

இல்லாவிட்டால் டெல்லி சதி, தமிழன் சோற்றால் அடித்த பிண்டம், தமிழனுக்கு மானமில்லை என பழைய டயலாக்குகளை தலையில் துண்டை போட்டு பின்னாளில் சொல்லி கொண்டிருப்பார்கள்


திமுகவினர் பெரிதான மூளை கொண்டவர்கள் என்பது தயாநிதி மாறனுக்கு இந்தி தெரிந்திருப்பதால் மத்திய அமைச்சராகின்றார் என அமர்த்தபட்ட பொழுது

அழகிரிக்கு மதுரையில் கலக்கல் போஸ்டர் அடித்தபொழுது, தா.கிருட்டினன் விவகாரம் இன்னபிற விவகாரங்களின் பொழுது

உச்சமாக அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபொழுது என பல இடங்களில் தெரிந்தது

இன்னும் தெரியும்.


 

யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே என ஸ்டாலின் சொன்னதில் என்ன சிக்கல்?

அவர் என்ன தமிழ் அறியாதவரா? திராவிட ரத்தம் ஓடாதவரா? அல்ல எல்லாம் நன்கு புரிந்தவர் , பல மேடை கண்டவர், பின் ஏன் ஸ்டாலின் அப்படி சொன்னார்?

அர்த்தமில்லாமல் இல்லை

கலைஞர் என்பவர் யானை, இவர் வெறும் மணி என்பதை சொல்லிவிட்டார், இது யாருக்கு தெரியாது

இதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்