திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் ஆரம்பம்…
எதிர்பார்பினை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள் வந்தாயிற்று. மக்கள் பாஜகவிற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். பெரும் அதிருப்தி என அவர்கள் எதனையும் உணரவில்லை போலிருகின்றது. பாஜக அரசு தொடரலாம் என அனுமதித்துவிட்டார்கள்
பாஜக அதன் அசுர பலத்துடன் தொடர்கின்றது என்பதற்கு எடுத்துகாட்டான விஷயங்கள் இவை. இந்த வெற்றி இனி அவர்களை உற்சாகத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்த சொல்லும்
காங்கிரஸின் நிலை படுமோசமில்லை. அக்கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கின்றது. அந்த ஜாதி வெறியன் ஹிர்திக் பட்டேலை கூட்டு சேர்த்ததுதான் சிக்கலோ என்னமோ? பின்பு தெரியும்
அந்த ஹிர்த்திக் பட்டேல் என்பவன் விரட்டபட்டதில் மகிழ்ச்சி, இல்லையேல் அந்த தவறான முன்னுராதரணம் எல்லா மாநிலங்களிலும் எதிரொலித்து பெரும் கலவரங்களை உண்டாக்கி இருக்கலாம்
இனி பாஜகவின் முழு பார்வையினையும் பாஜக தமிழகம் மீது திருப்பலாம்
இன்னும் இரு நாளில் ஆர்.கே நகர் தேர்தலும், ஸ்பெக்ட்ரம் தீர்ப்பும் வர இருக்கின்றன, என்ன நடக்கபோகின்றதோ என தமிழகம் பரபரப்பாக எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது
குறிப்பாக திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் ஆரம்பம்.